Skip to main content

Posts

Showing posts from 2011

பா.ம.க. போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற பா.ம.க.வுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. என்னென்ன தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக இரண்டு கட்சிகளின் தொகுதி பங்கீடு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இன்று (மார்ச் 15) இரவு அறிவாலயத்திற்கு ராமதாஸ் வந்து தொகுதிகளை இறுதி செய்தார். ஒப்பந்தத்தில் ராமதாஸும் கருணாநிதியும் கையெழுத்திட்டனர். பா.ம.க்.போட்டியிடும் தொகுதிகள் விவரம்:

2006 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களின் நிலை!

2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 48 இடங்களில் போட்டியிட்டது காங்கிரஸ். 34 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நிலைமை எப்படி போகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.கடந்த தேர்தல் நிலவரம் இங்கே..

பா.ம.க., முஸ்லிம் லீக் கட்சிகள் தொகுதிகளை விட்டு கொடுத்திருக்கிறது: கருணாநிதி

காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளை தர முடியாது என்று மத்திய அரசில் இருந்து விலகுவதாக சொன்னது தி.மு.க. இந்த நிலையில் டெல்லியில் ஏற்பட்ட சமாதானத்திற்கு பிறகு 63 தொகுதிகளை தர சம்மதித்திருக்கிறது தி.மு.க. அறிவாலயத்தில் இன்று (மார்ச் 8) தே.மு.தி.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்த தொண்டர்கள் நிகழ்ச்சியில் கருணாநிதி கலத்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு

2011 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தொடர்பாக இறுதி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப்பட்ட புரட்சி பாரதம் கட்சிக்கு இந்த முறை சீட் இல்லை. அருந்ததியர் மக்கள் கட்சி, விவசாய தொழிலாளர் கட்சி, தமிழ்மாநில தேசிய லீக், உழவர் உழைப்பாளர் கட்சி ஆகிய கட்சிகளுக்கும் இடங்கள் இல்லை. தி.மு.க. - 121 காங்கிர‌ஸ் - 63 பா.ம.க. - 30 விடுத‌லைச் சிறுத்தைக‌ள் - 10 கொங்குநாடு முன்னேற்ற கழகம் - 7 முஸ்லிம் லீக் - 2 மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - 1 மொத்த தொகுதிகள் - 234

கூட்டணிக்குள் புது கட்சிகள் வரும்: கருணாநிதி பேட்டி

மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகல் என்கிற அறிவிப்பு வந்த பிறகு இன்று (மார்ச் 6) இரவு 7 மணிக்கு அண்ணா அறிவாலயத்திற்கு மத்திய தி.மு.க. அமைச்சர்கள் அழகிரி, தயாநிதி மாறன், நெப்போலியன் ஆகியோர் வந்தார்கள். அதன்பிறகு முதல்வர் கருணாநிதி வந்தார். ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடந்தது. வெளியே வந்த கருணாநிதி நிருபர்களுக்கு அளித்தார் பேட்டி விவரம்:

தொகுதி வாரியாக வாக்காளர்கள்!

மாவட்டவாரியாக தொகுதிகளின் வாக்காளர்கள் விவரம் இங்கே... 1. திருவள்ளூர் மாவட்டம் 1. கும்மிடிபூண்டி ஆண் வாக்காளர்கள்: 1,05,145 பெண் வாக்காளர்கள்: 1,06,492 அரவாணிகள்: 9 மொத்த வாக்காளர்கள்: 2,11,646

வேட்புமனு தாக்கல் விதிமுறைகள்!

சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது கீழ்கண்ட விதிகளை கண்டிபாக கடைபிடிக்க வேண்டும். * வேட்பு மனு தாக்கல் செய்யும்போது விண்ணப்பம், டெபாசிட் கட்டணம் போன்றவற்றுடன் தங்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்.

பதவியைவிட கொள்கைகளே முக்கியம்: கி.வீரமணி

கலைஞர் எடுத்த - வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். பதவிகளை விட கொள்கையே முக்கியம் என்ற ரீதியில் தி.மு.க.வின் திட்டம் அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மாவட்டங்களில் தேர்தல் புகார் செய்ய...

தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் புகார் மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதன் விவரம் இங்கே.. கோவை மாவட்டம் 2305151, 2304949, 2305353 (24 மணி நேரம்) திருச்சி மாவட்டம் 1800425730 ( `டோல் பிரீ`)

அ.தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு

1. அ.தி.மு.க. - 2. தே.மு.தி.க. - 41 3 . ம.தி.மு.க. - 4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்) - 5 . இந்திய கம்யூனிஸ்ட் (சி.பி.எம்) - 6 . மனிதநேய மக்கள் கட்சி - 3 7 . புதிய தமிழகம் - 2 8 . அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் - 1 9. இந்திய குடியரசுக் கட்சி - 1 10 . பார்வர்டு பிளாக் - 1

திருமண மண்டபம், விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்

*  திருமண மண்டபங்களில் முன் பதிவு விவரங்களை சம்பந்தப்பட்ட மண்டப உரிமையாளர்கள் அவ்வப்போது தாலுகா அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களில் தெரிவிக்க வேண்டும். இதற்கான படி வங்கள் மண்டப உரிமை யாளர்களுக்கு வழங்கப்படும். * அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி காது குத்து, திருமண விழா என்ற பெயரில் முன்பதிவு செய்து திருமண மண்டபங்களை பயன்படுத்துவது தெரிய வந்தால் மண்டப உரிமையாளர்கள் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையம் மற்றும் தாலுகா அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

பிரச்சார விதிமுறைகள்!

* எந்த ஒரு அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும், சாதி, இனம், மதம், மொழி ஆகியவற்றுக்கு இடையே வெறுப்பையும் துவேசத்தையும் தூண்டும் செயலில் ஈடுபடக்கூடாது. * பிற கட்சிகளை பற்றி விமர்சிக்கும்போது அதன் முந்தைய செயல்பாடுகள், கொள்கைகள், திட்டங்கள், பணிகள் குறித்து மட்டுமே பேச வேண்டும். * பொது நடவடிக்கைக்கு தொடர்பில்லாத, தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசவோ கூடாது.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் விதிகள்!

* சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். * அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் மற்றும் இதர பணியில் சுய உதவிக்குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படுவதாக, புகார் வந்தால், தேர்தல் அதிகாரிகள் அதனை தீவிரமாக விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் அஜாக்கிரதையாக இருந்து விடக் கூடாது. * மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அரசியல் கட்சிகள் முயற்சி மேற்கொள்ளலாம். அதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக மாவட்டத்தில் உள்ள சுய உதவிக்குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி தினமும் கண்காணித்து தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை தர வேண்டும்.

தேர்தல் செலவுகள் விதிமுறைகள்!

* ஒரு சட்டசபை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ரூ.16 லட்சம் வரை செலவு செய்யலாம். * ஒவ்வொரு வேட்பாளரும் வங்கி கணக்கு தொடங்கி, அதன் மூலம் மட்டுமே செலவு செய்ய வேண்டும்.

மத்திய அரசில் இருந்து விலகல். தி.மு.க. தீர்மான விவரம்

காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் நடந்த தி.மு.க. உயர்மட்ட செயல் திட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

மத்திய அரசில் இருந்து விலகல் ஏன்? கருணாநிதி அறிக்கை

காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக இன்று (மார்ச் 5) சென்னை அறிவாலயத்தில் நடந்த தி.மு.க. உயர்மட்ட செயல்திட்ட குழு கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி படித்த அறிக்கை விவரம்: இந்திய திருநாட்டின் இறையாண்மை, ஒற்றுமையும், ஒருமைப்பாடு, மதசார்பற்ற தன்மை இவற்றை கட்டிக்காக்கும் வகையில் செயல்பட்டு வருகின்ற தி.மு.க., தான் மேற்கொண்டுள்ள இந்த கொள்கையின் அடிப்படையில்தான் எந்த ஒரு கட்சியும் அணி சேர்த்து பாடுபட்டு பணியாற்றி வருகிறது.

காங்கிரஸ் நிபந்தனைக்கு தி.மு.க. கட்டுப்பட வேண்டாம்!: வீரமணி

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தஞ்சையில் இன்று (மார்ச் 5) வெளியிட்ட அறிக்கை: இன்று காலை தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களது அறிக்கை - நியாய உணர்வும் சுயமரியாதை உணர்வும் உடைய அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருப்பதை போன்றே நமக்கும் அதே எண்ணம் ஓடியது.

தொகுதி தேர்தல் அதிகாரிகள்

ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் டி.ஆர்.ஓ அந்தஸ்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சட்டசபைத் தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள் விவரம் இங்கே. 1. ஈரோடு மாவட்டம் 1. ஈரோடு (கிழக்கு) - குணசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர். 2. ஈரோடு மேற்கு - சுகுமாரன், ஈரோடு ஆர்.டி.ஓ. 3. மொடக்குறிச்சி - சிவக்குமார், உதவி ஆணையர் (கலால்) 4. பெருந்துறை - செல்வராசு, மாவட்ட வழங்கல் அலுவலர். 5. அந்தியூர் - தியாகராஜ், நேர்முக உதவியாளர் (மாவட்ட கலெக்டர் ஊரக வளர்ச்சி). 6. பவானிசாகர் - நாராயணசாமி, துணை இயக்குநர், கிராம பஞ்சாயத்து. 7. கோபி - மீனா பிரியதர்ஷினி, கோபி ஆர்.டி.ஓ. 8. பவானி- தாமோதரன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர். 2.   காஞ்சிபுரம் மாவட்டம் 1. சோழிங்கநல்லூர் -  உதவி ஆணையர் (கலால்) கோபெண்டு 2. ஆலந்தூர் - தாம்பரம் சிறப்பு துணை கலெக்டர் தேவதாஸ் போஸ் 3. ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதி - கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பாண்டுரங்கன் 4. பல்லாவரம் - சிறப்பு துணை கலெக்டர் (ஆர்-ஆர்) இளங்கோவன் 5. தாம்பரம் - தாம்பரம் ஆர்.டி.ஓ. சவு

ஜெய‌ல‌லிதா, விஜ‌ய‌காந்த் ச‌ந்திப்பு ப‌ட‌ங்க‌ள்

அ.தி.மு.க. கூட்டணியில். விஜயகாந்தின் தே.மு.தி.க. கடந்த பிப்ரவரி 24ம் தேதி சேர்ந்தது. அ.தி.மு.க. அலுவலகத்திற்கு அப்பொது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் சார்பில், தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்களான, பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில், அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன், இளைஞர் அணிச் செயலாளரும் விஜயகாந்தின் மச்சானுமான எல்.கே. சுதீஷ் ஆகியோர் பங்கு பெற்றனர். ஆனால் விஜ‌ய‌காந்த் வ‌ர‌வில்லை. இந்த‌ நிலையில் இன்று (மார்ச் 4) போய‌ஸ் கார்ட‌னில் ஜெய‌ல‌லிதாவை விஜ‌ய‌காந்த் ச‌ந்தித்தார். மொத்த‌ம் 25 நிமிட‌ங்க‌ள் இந்த‌ ச‌ந்திப்பு ந‌டந்த‌து.

காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி உடைகிறது. இன்று முடிவு எடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு

சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி தொடர்ந்து இழுபறியில் இருந்து வருகிறது. காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழுவை சேர்ந்த வாசன், ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், தங்கபாலு, ஜெயகுமார் ஆகியோர் தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவை சேர்ந்த ஸ்டாலின், பொன்முடி, ஆற்காட்டார், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோருடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் முடிவு எட்டப்படவில்லை. காங்கிரஸ் ஆரம்பத்தில் 80 தொகுதிகள் வரை கேட்டது. கடைசியில் 65 தொகுதிகளுக்கு இறங்கி வந்தது. தி.மு.க.வோ. 54 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று கையை விரித்தது. தொகுதி ஒதுக்கீடு தவிர ஆட்சியில் பங்கு, அமைச்சரைவையில் சரி பங்கு இடம், குறைந்தபட்ச செயல்திட்டம் என்று சில கோரிக்கைகளையும் காங்கிரஸ் வைத்தது.

தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள்: ஜெயலலிதா அறிவிப்பு

தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள்: ஜெயலலிதா அறிவிப்பு கடந்த பிப்ரவரி 24ம் தேதி அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது. ஜெயலலிதாவின் பிறந்த தினத்தில் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு பண்ருட்டி ராமசந்திரன், சுதிஷ் ஆகியோர் வந்து அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பிறகு இன்று (மார்ச் 4 ) போயஸ்கார்டனுக்கு வந்தார் விஜயகாந்த். ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகளை ஜெயலலிதா அறிவித்தார். இதற்கான ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும் விஜயகாந்தும் கையெழுத்திட்டனர்.

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: விஜயகாந்த்

''இதுவரை 31,000 கிலோமீட்டர் தொலைவுக்கு பயணம் செய்து விட்டேன். எங்கும் மக்கள் மனதில் நிம்மதி இல்லை, யாருமே சந்தோஷமாக இல்லை. கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். கடந்த காலங்களில் ஏற்பட்டு வந்த ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய கஷ்டங்கள் இவை. எங்குமே நல்ல சாலை இல்லை, குடிநீர் வசதி இல்லை, மின் வசதி இல்லை, இப்படி பல அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பூர்த்தியாகத கிராமங்கள நூற்றுக்கணக்கில் உள்ளன. அந்த மக்களின் கஷ்டத்தை கடந்த காலங்களில் ஆண்டவர்கள் போக்கவில்லை. நான்அதை சரி செய்யப் போகிறேன். எனக்கு இந்த ஒரு முறை மட்டும் வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். நான் ஒரே ஒரு தேர்தல் அறிக்கையைத்தான் வெளியிட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. இலவச அரிசியை நான்தான் முதலில் அறிவித்தேன். ஆனால் எனது தேர்தல் அறிக்கை காப்பி அடித்து இப்போது மற்ற கட்சிகள் தினசரி ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.

தமிழக தேர்தல் அட்டவணை

வேட்புமனு தாக்கல் தொடக்கம்: மார்ச் 19ம் தேதி வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள்: மார்ச் 26 வேட்புமனு பரிசீலனை: மார்ச் 28 வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள்: மார்ச் 30 வாக்குப்பதிவு: ஏப்ரல் 13 வாக்கு எண்ணிக்கை: மே 13

தமிழ்நாடு, புதுச்சேரிக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. புது டெல்லியில் இன்று (மார்ச் 1) தலைமை தேர்தல் ஆணையர் டாக்டர் எஸ் ஓய் குரேஷி பேட்டி அளித்த அளித்தார். பேட்டி விவரம்:

10 தொகுதிகளை பெற்றது ஏன்?: திருமாவளவன் விளக்கம்

தி.மு.க. கூட்டணியில் 10 இடங்களை பெற்றது ஏன் என்று திருமாவளவன் விளக்கம் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் இன்று (மார்ச் 1) வெளியிட்ட அறிக்கை: தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதென 28.02.2011 அன்று கூட்டணியின் தலைவர் முதல்வர் கலைஞருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறத்தக்க அளவிலான தொகுதிகளைப் பெற்று போட்டியிட வேண்டுமென்பது விடுதலைச் சிறுத்தைகளின் எதிர்பார்ப்பாக இருந்தது.

விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10 இடங்கள்: தி.மு.க. அறிவிப்பு

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இன்று (பிப்ரவரி 28) அறிவாலயத்திற்கு வந்த திருமவளவன் கருணாநிதியோடு தொகுதி ஒப்பந்தம் போட்டார். தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் திருமாவளனும் கருணாநிதியும் கையெழுத்திட்டார்கள். அப்போது தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவை சேர்ந்த ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர்.

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: செங்கோட்டையன்

''அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெயரைக் குறிப்பிடாமல் பொதுவாக சொன்னதை, தன்னைத்தான் சொன்னார் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போல அறிக்கை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த். அ.தி.மு.க.வை தனது அரசின் சாதனைகளால் உலகம் முழுவதும் அறியும் வகையில், அடையாளம் காட்டிஎம்.ஜி.ஆருக்குப் புகழ் சேர்த்தவர் ஜெயலலிதா. இவையெல்லாம் நேற்று கட்சி தொடங்கிய விஜயகாந்த்துக்குதெரியாமல் இருப்பதில் வியப்பே இல்லை. எம்.ஜி.ஆரின் ரசிகன் என கூறிக் கொள்ளும் விஜயகாந்த், சோதனைக் கட்டத்தின் போது எங்கிருந்தார்?அ.தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் அவர் பேசுவது வேடிக்கையாக உள்ளது. ஜெயலலிதாவைக் குறை சொல்ல விஜயகாந்த்துக்கு எந்த தகுதியும் இல்லை. வரலாறுகளை எல்லாம் இனிமேலாவது அவர் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்''  ‍ -  குடிக்காரன் அறிக்கை தொடர்பாக விஜயகாந்துக்கு செங்கோட்டையன் கொடுத்த பதிலடி அறிக்கை (2006 அக்டோபர் 25)

ராசாத்தி, கனிமொழி, நிலவிவகாரம்: ஜெயலலிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (பிப்ரவரி 27) வெளியிட்ட அறிக்கை: சில மாதங்களுக்கு முன்பு, களங்கத்திற்கு ஆளான அரசியல்-வணிகர் தரகர் நீரா ராடியாவுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாவது மனைவி ராசாத்திக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து இந்திய ஊடகங்கள் விரிவாக செய்திகளை வெளியிட்டன.

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ராமதாஸ்

''உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. வேட்பாளர்கள் பல இடங்களில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். கூட்டணி தர்மத்தை தி.மு.க.வினர் கடைப்பிடிக்கவே இல்லை. இதை நாங்கள் சுட்டிக் காட்டி அறிக்கை வெளியிட்டால், நான்கு சுவர்களுக்குள் நடந்ததை வெளியில் சொல்லக்கூடாது என்கிறார் கலைஞர். வெளியில் சொல்லாவிட்டால் எங்கே போய்ச் சொல்வது? இத்தனை தவறுகள் நடந்துள்ளன என்று நாங்கள் கூறியபோதிலும் கூட அதை ஏற்றுக் கொள்ளாமல், த‌வறுகளையெல்லாம் அவர்கள் செய்து விட்டு, பச்சை துரோகம் செய்து விட்டு, எங்கள் மீதே குற்றம் சாட்டுகிறார் கலைஞர். இதை வெளியில் வேறு சொல்லக் கூடாது என்றும் கூறுகிறார்.

காங்கிர‌ஸ் 234 தொகுதிக‌ள் கேட்கிற‌து: க‌ருணாநிதி பேட்டி

அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 26) காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழுவை சேர்ந்த தங்கபாலு, வாசன், சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தி.மு.க. குழுவில் ஸ்டாலின் டி.ஆர். பாலு, பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் 70 தொகுதிகளுக்கு மேல் கேட்டு வரும் நிலையில் முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்தது. இன்று இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: விஜயகாந்த்

''பெண்கள் மீதும், தாய்மார்கள் மீதும் நான் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவன். என்னைப் பற்றி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பழி சொல்லி அறிக்கை விட்டிருப்பதை நான் ச‌ற்றும் எதிர்பார்க்கவில்லை. இரவு பகல் பாராமல் கடந்த ஓராண்டு காலமாக பொதுமக்களையும், தொண்டர்களையும் தமிழ்நாடு முழுவதும் தேர்தலில் நான் சந்தித்துள்ளேன். நான் எப்படிப்பட்டவன் என்பதை பொது மக்கள் நேரிலேயே பார்த்து வருகின்றனர்.

உழவர் கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை

அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், இந்திய குடியரசு கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை ஜெயலலிதா முடித்துவிட்டார். தே.மு.தி.க. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க. மட்டுமே பாக்கி.

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ஜெயலலிதா

''தே.மு.தி.க. சாதித்து விட்டது என்கிறார்கள். அந்தக் கட்சி வெறும் 3 சதவீத இடங்களில்தான் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. இதே 3 சதவீத இடங்களை நமது தோழமைக் கட்சியான ம.தி.மு.க. கூட பெற்றிருக்கிறது. ஊழலை ஒழிப்பேன், வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்களை வழங்குவேன் என்று கூறுவதெல்லாம் குடிகாரன் பேச்சைப் போன்றதுதான். நான் யாரைச் சொல்கிறேன் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும்.

அ.தி.மு.க. தே.மு.தி.க. கூட்டணி வைபவ படங்கள்

அ.தி.மு.க. கூட்டணியில் விஜய்காந்தின் தே.மு.தி.க. ஒருவழியாக இணைந்துவிட்டது. அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை தொடர்பான படங்கள் இங்கே...

அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.

அ.தி.மு.க. கூட்டணியில். விஜயகாந்தின் தே.மு.தி.க. சேருமா? என்று கடந்த சில மாதங்களாக நிலவி வந்த செய்திக்கு இன்று முற்றுப்புள்ளி விழுந்திருக்கிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் வந்து கூட்டணி உறுதி செய்தனர்.

பார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 சீட்: ஜெயலலிதா அறிவிப்பு

ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று (பிப்ரவரி 23) அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய செயலாளரும், மேற்கு வங்க மாநிலத்தின் வேளாண்மைத் துறை அமைச்சருமான ந‌ரேந்திரநாத் டே, தேசிய செயலாளரும், மாநில தேர்தல் பார்வையாளருமான ஜி. தேவராஜன், தமிழ் மாநில பொதுச் செயலாளர் ஞ.ஏ. கதிரவன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.எஸ். ஜெயராமன், எம். ராஜசேகர், தமிழ் மாநில நிதிச் செயலாளர் ஆர். மாயத்தேவர் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

அ.தி.மு.க. விருப்ப மனு: 12.14 கோடி வசூல்

தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் தங்களது விருப்ப மனுக்களை பிப்ரவரி 5 முதல் 23ம் தேதி வரை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி 23ம் தேதி வரை 12,268 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் ஜெயலலிதா தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து, தமிழ்நாட்டில் 1,503 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கட்சிக்காரர்கள் போட்டியிடுவதற்காக தமிழகத்தில் 10,553 மனுக்களும் புதுச்சேரியில் 181 மனுக்களும் கேரள மாநிலத்தில் 31 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

தேர்தல் நடத்தை விதிறைகள்

* போலீஸ் அனுமதியுடன் நடத்தப்படும் பொதுக் கூட்டங்களில் ரகளை செய்யக்கூடாது. மீறிச் செய்தால் அது 6 மாத தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். * ஓட்டுப் பதிவுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு தேர்தல் பிரசாரத்தை முடிக்க வேண்டும். மீறிபிரசாரம் செய்தால் 2 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். * வேட்பாளருக்காக வேறு யாரும் செலவு செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அதுசட்டப்படி குற்றமாகும். * கள்ள ஓட்டுப்போட்டால் 1 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை கிடைக்கும். * ஓட்டுப் போட வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.  * வாக்காளர்களை வாகனங்களில் ஓட்டுச் சாவடிக்குஅழைத்துச் செல்பவர்களுக்கு 3 மாத கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். * ஓட்டுச் சாவடி ஊழியரோ அல்லது காவலில் நிற்கும் போலீஸாரோ குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக பேசினாலோ அல்லது ஓட்டுப் போடும்படி தூண்டினாலோ 6 மாத கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமோ சேர்த்து விதிககப்படும். * வாக்குச் சாவடி தலைமை அதிகாரிக்குக் கீழ்படிய மறுத்து கலாட்டா, ரகளைசெய்பவர்களுக்கு 3 மாத கடுங்காவல் த

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்:அன்புமணி

''மக்கள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த நிலங்களை சிறப்பு பொருளாதர மண்டலம் என்ற பெயரில் பறித்து, தொழிற்சாலைகள் அமைத்துள்ளனர். ஆனால், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. மின்வெட்டு பிரச்னையால் தமிழ்நாட்டில் உள்ள 80 சதவிகிதம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மின் வெட்டால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்படைந்திருக்கிறது.'' - 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணி முழக்கம். (2009 மே 6 இருங்காட்டுக்கோட்டை மேவலூர்குப்பம் பிரச்சாரம்).

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ராமதாஸ்

''இன்னும் ஒரே தடவை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடே இருண்டு போய்விடும். அவர் ஒரு நடிகைதான், ஆனால் அரசியலில் நடிக்கக் கூடாது. ஜெயலலிதாவின் ஒரே சாதனை ஆண்டுக்கு ரூ. 24,000 கோடிக்கு மது விற்றதும் பல லட்சம்பேரை குடிக்கு அடிமையாக்கியதும்தான். சசிகலாவின் பினாமிகள் பிழைப்பதற்காக அரசே மதுக் கடைகளை எடுத்து நடத்தி, மக்களை குடிக்கு அடிமையாக்கியுள்ளது. தன்னை சேது சமுத்திரத் திட்ட நாயகன் என்று சொல்லிக் கொள்ளும் வைகோ, இப்போது அந்தத் திட்டத்தைஎதிர்க்கும் ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார். இதற்குப் பெயர் தான் பச்சை சந்தர்ப்பவாதம்.''    -  2006 தேர்தலில் ராமதாஸ் முழக்கம். (2006 ஏப்ரல் 7 கும்மிடிப்பூண்டி) .

டாப் 3 சிறிய, பெரிய‌ தொகுதிகள்!

தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட பெரிய தொகுதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் சோழிங்கநல்லூர்தான். டாப் 3 பெரிய தொகுதிகள் இங்கே... 1. சோழிங்கநல்லூர்: ஆண் வாக்காளர்கள்: 1,73,834 பெண் வாக்காளர்கள்: 1,66,781 மொத்த வாக்காளர்கள்: 3,40,615 2. கவுண்டம்பாளையம்: ஆண் வாக்காளர்கள்: 1,47,113 பெண் வாக்காளர்கள்: 1,42,799 மொத்த வாக்காளர்கள்: 2,89,912

எரிக்கப்பட்ட கலைஞர் டி.வி. ஆவணங்கள்: ஜெயலலிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (பிப்ரவரி 20) வெளியிட்ட அறிக்கை: கிரிமினல் புத்தியோடு செயல்படுவதில் வல்லவரான கருணாநிதியை எதிர்கொள்வதில் எந்த அளவுக்கு சாமார்த்தியமாக, விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையை ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்து ஆய்வு நடத்திக் கொண்டு இருக்கும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் உணராதது துரதிர்ஷ்டவசமானது.

2006 தேர்தலில் களத்தில் நின்ற கட்சிகள்!

கடந்த 2006 தமிழக சட்டசபைத் தேர்தலில் தேசியக் கட்சிகளின் சார்பில் 472 வேட்பாளர்களும் மாநிலக் கட்சிகள் சார்பில் 386 வேட்பாளர்களும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் சார்பில் 307 வேட்பாளர்களும் சுயேட்சைகள் 1,222 பேரும் போட்டியிட்டனர். மொத்தமாக 2,586 வேட்பாளர்கள் களத்தில் நின்றார்கள்.

2006 தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள்!

2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சிக்கு 48 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த 48 பேரில் ஏற்கனவே எம்.எல்.ஏ.களாக இருந்த 18 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தேர்தலில் 34 பேர் மட்டுமே வெற்றி பெற்றார்கள். எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், வள்ளல் பெருமான், பாரமலை போன்றவர்கள் தோல்வி அடைந்தார்கள். காங்கிரஸ் சட்டமன்ற் கட்சித் தலைவர் சுதர்சனம், போளூர் வரதன் ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.களும் இறந்துவிட்டனர். இடைத் தேர்தல்களில் கிடைத்த வெற்றியையும் சேர்த்து தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 34 எம்.எல்.ஏ.கள் இருக்கிறார்கள்.

2006 தேர்தல்: சி.பி.ஐ. வேட்பாளர்கள்!

2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அந்த கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. வேட்பாளர்கள் விவரம்: 1. திருத்துறைப்பூண்டி:  உலகநாதன் 2. நன்னிலம்: பத்மாவதி 3. மன்னார்குடி: சிவபுண்ணியம் 4. கோவில்பட்டி: ராஜேந்திரன் 5. அவிநாசி (தனி): ஆறுமுகம் 6. ஆலங்குடி: ராஜசேகரன் 7. தளி: நாகராஜன் 8. பெருந்துறை: பெரியசாமி 9. ஸ்ரீவில்லிபுத்தூர்: ராமசாமி

கே.வி.குப்பம் தொகுதியில் செ.கு.தமிழரசன் போட்டி?

தொகுதி மறுசீரமைப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி கே.வி.குப்பம். தனித் தொகுதியான இந்த தொகுதியில் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளும் கே.வி. குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளும் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 2 ஊராட்சிகளும் இணைத்து 73 ஊராட்சிகள் கொண்டிருக்கிறது.

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 31 தொகுதி, 1 ராஜ்யசபா

கோபாலபுரத்தில் இன்று (பிப்ரவரி 18) காலை முதல்வர் கருணாநிதியை சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இந்த சந்திப்பின் போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, டி.ஆர். பாலு, துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர். கூட்டணியில் சேர்வது தொடர்பாக பா.ம.க.வுக்கு தி.மு.க.வுக்கு இடையே உரசல்கள் இருந்து வந்த நிலையில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. கூட்டணியில் பா.ம.க.வை சேர்த்துக் கொள்ள தி.மு.க. முடிவு செய்தது. இது தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறதாம். கடந்த 2006 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் வழங்கப்பட்டன. இப்போது அதே 31 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதோடு ஒரு ராஜ்ய சபா இடமும் அளிக்கப்பட்டுள்ளது என்று ராமதாஸுடன் சென்றவர்கள் குறிப்பிட்டார்கள்

கருணாநிதியை சந்தித்தார் ராமதாஸ்

கருணாநிதியை அவருடைய கோபாலபுரம் இல்லத்தில் இன்று (பிப்ரவரி 18) காலை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்தார். அவருடன் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியும் வந்திருந்தார். சந்திப்பின் போது கருணாநிதிக்கு ராமதாஸ் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்தார். பதிலுக்கு ராமதாஸுக்கு கருணாநிதியும் சால்வை போட்டார். அப்போது டி.ஆர். பாலுவும் துரைமுருகனும் உடன் இருந்தனர். கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளும் கொஞ்ச நேரம் அங்கே இருந்தார்.

ஜாதகத்தின் விதியை மாற்றவே கனிமொழி கைது நாடகம்: ஜெயலலிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (பிப்ரவரி 17) வெளியிட்ட அறிக்கை: கருணாநிதியின் மகள் கனிமொழி 16.2.2011 அன்று காலையில் “கைது” செய்யப்பட்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் பதுக்கப்பட்டதில் கனிமொழிக்கு பங்கு உள்ளதாக கூறப்படுவது குறித்து மத்திய புலனாய்வுத் துறையால் கனிமொழி கைது செய்யப்படவில்லை. தனது தந்தையான கருணாநிதியின் காவல் படையால் கைது செய்யப்பட்டார் கனிமொழி. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் நிலையை வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு “மறியல்” செய்த காரணத்திற்காக கனிமொழி கைது செய்யப்பட்டார்.

மூ.மு.க.வுக்கு ஒரு தொகுதி: ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது அகில‌ இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம். அந்த கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ந. சேதுராமன் இன்று (பிப்ரவரி 17) போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவை தமது கட்சியின் நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்தார். அப்போது, நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் ஒரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது என ஒப்பந்தம் ஆனது.

2006 தேர்தல்: அ.தி.மு.க. பிரச்சாரத்தில் சிவனாண்டி!

இப்போது உளவுத்துறையில் இருக்கும் ஜாபர் சேட் மீது விமர்சனங்கள் எழுந்திருப்பது போல கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த சிவனாண்டி மீது ஏகப்பட்ட புகார்கள். 2006 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு கட்சிகளை இழுத்து வர ரொம்பவே உழைத்தார். அதோடு தேர்தல் பிரச்சாரத்திலும் பங்கெடுத்துக் கொண்டார். ஜெயலலிதா பிரச்சாரம் போன இடங்களில் எல்லாம் சிவனாண்டியும் தவறாமல் ஆஜர் ஆனார்.

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: கருணாநிதி

''ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சகிகலாவின் உற்றார், உறவினர் , நெருங்கிய சொந்தக்காரர்கள் நடத்தும் மிடாஸ் மதுபான ஆலையில் என்ன நடக்கிறது?. குறைந்த விலைக்கு மட்டமான சரக்குகளை வைத்து, உயர்ந்த சரக்கின் லேபிள் ஒட்டிஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடிக்கின்றனர். மது விற்பனையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இன்று மன்னார்குடி கும்பலுக்கு போய்க் கொண்டிருக்கிறது. அந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை தடுத்தாலே இலவச கலர் டிவி பெட்டிகளை வாங்குவதற்கு நிச்சயமாக பணம் கிடைக்கும்.

பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகள்!

த‌மிழ‌க‌த்தின் 234 தொகுதிகளில் 2 கோடியே 30 லட்சத்து 36 ஆயிரத்து 295 ஆண் வாக்காளர்களும் 2 கோடியே 28 லட்சத்து 63 ஆயிரத்து 481 பெண் வாக்காளர்களும் 844 திருநங்கைகளும் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள் தமிழகத்தில் உள்ளனர். 234 தொகுதிகளில் 93 தொகுதிகளில் மட்டும் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். அதன் விவரம் மாவட்ட வாரியாக இங்கே...

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: சீதாராம் யெச்சூரி

''கடந்த 5 வருடமாக தமிழகத்தில் என்ன நடந்தது? சட்டசபையில் ஜனநாயகத்துக்கே இடமில்லாமல் போனது. அரசு ஊழியர்களை கூண்டோடு சிறையில் போட்டார்கள். கல்வியையும் சுகாதாரத்தையும் தனியாரிடம் தாரை வார்த்துவிட்டார்கள். 500க்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளிகளை மூடிவிட்டார் ஜெயலலிதா. பிக்பாக்கெட் அடிப்பது மாதிரி மக்களுக்குத் தரப்பட்ட பல சலுகைளைப் பறித்துக் கொண்டார் ஜெயலலிதா. அந்த பிக்பாக்கெட்டுக்கு கூட்டாளியாக சேர்ந்திருக்கிறார் வைகோ. ஜெயலலிதா அரசை பாஸிஸ ஆட்சி என்று சொன்னவர் வைகோ. நாங்கள் கூட அப்படிச் சொல்லவில்லை. ஜெயலலிதாவைத் தோற்கடிப்பது ஏதேச்சதிகாரத்தை தோற்கடிப்பது மாதிரி. அதைச் செய்து காட்டுங்கள்'' -  ‍கடந்த 2006 தேர்தலில் ஏப்ரல் 5, 2006 அன்று சென்னை சைதாப்பேட்டை பிரச்சார கூட்டத்தில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி பேசியது.

புதிய தமிழகம், குடியரசு கட்சி தொகுதி பங்கீடு படங்கள்!

அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசு கட்சிக்கு ஒரு இடமும், புதிய தமிழகம் கட்சிக்கு இரண்டு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் இரண்டு கட்சிகளும் கையெழுத்திட்டுள்ளன. புதிய தமிழகம் கிருஷ்ணசாமியுடன் நிர்வாகிகள் குடியரசு கட்சி செ.கு.தமிழரசுடன் நிர்வாகிகள்

புதிய தமிழகம் 2, குடியரசு கட்சி 1 அ.தி.மு.க. தொகுதி பங்கீடு அறிவிப்பு

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று (பிப்ரவரி 15) மாலை இந்திய குடியரசு கட்சியின் தலைவர் டாக்டர் செ.கு. தமிழரசன் நிர்வாகிகளுடன் ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது, நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், இந்திய குடியரசு கட்சி ஒரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது என ஒப்பந்தம் ஆனது.

தமிழகத்தின் சிறிய‌ தொகுதிகள்!

கருணாநிதி வெற்றி பெற்ற சேப்பாக்கம் தொகுதிதான் 2006 சட்டசபைத் தேர்தல் வரையில் தமிழகத்தில் மிக சிறிய தொகுதியாக இருந்தது. தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு சில தொகுதிகள் நீக்கப்பட்டு புதிய தொகுதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதனால் சேப்பாக்கம் தொகுதிக்கு அருகில் இருந்த திருவல்லிக்கேணி தொகுதி நீக்கப்பட்டு சேப்பாக்கம் தொகுதியோடு இணைக்கப்பட்டன. இதனால் இப்போது சேப்பாக்கம் -  ‍ திருவல்லிக்கேணி என்று புதிய தொகுதி உருவானது. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு முதல் சட்டசபைத் தேர்தல் இப்போதுதான் நடக்க போகிறது. இந்தநிலையில் மிக சிறிய தொகுதி என்கிற அந்தஸ்த்தை இழந்திருக்கிறது சேப்பாக்கம் தொகுதி. வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் கடந்த டிசம்பர் மாதம் முடிந்து ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன‌. அதன்படி தமிழகத்தில் குறைந்த‌ வாக்காளர்கள் கொண்ட மிக சிறிய தொகுதி நாகை மாவட்டத்தில் இருக்கும் கீழ்வெள்ளூர் (தனி) தொகுதிதான்.

தமிழகத்தின் பெரிய தொகுதிகள்!

2006 சட்டசபைத் தேர்தல் வரையில் தமிழகத்தில் மட்டுமல்ல ஆசியாவிலேயே மிகப் பெரிய தொகுதியாக இருந்தது வில்லிவாக்கம் தொகுதி. தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு சில தொகுதிகள் நீக்கப்பட்டு புதிய தொகுதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. தொகுதி சீரமைப்புக்கு பிறகு முதல் சட்டசபைத் தேர்தல் இப்போதுதான் நடக்க போகிறது. இந்தநிலையில் மிகப் பெரிய தொகுதி என்கிற அந்தஸ்த்தை இழந்திருக்கிறது வில்லிவாக்கம் தொகுதி. வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் கடந்த டிசம்பர் மாதம் முடிந்து ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன‌. அதன்படி தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட பெரிய தொகுதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் சோழிங்கநல்லூர்தான்.

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: அன்புமணி

''2001ம் ஆண்டில் ஜெயலலிதாவிடம் 27 தொகுதிகளைக் கேட்டோம். ஆனால், நாம் கேட்டதில் 8 மட்டுமே தந்த ஜெயலலிதா மிச்ச தொகுதிகளை தன் மனம் போல கொடுத்தார். ஆனால், இந்த முறை கருணாநிதிடம் 31 கேட்டோம். அதில் 29யை நாம் கேட்ட தொகுதிகளாகவே தந்தார்.கேட்டதைத் தந்தவர் கலைஞர். சொல்வதைச் செய்பவரும் அவரே.

தமிழக எம்.எல்.ஏ.களின் பட்டியல்!

2006 சட்டசபைத் தேர்தலில் வென்றவர்கள் விவரம் மாவட்ட வாரியாக இங்கே.... சென்னை மாவட்டம் 1. பேராசிரியர் க. அன்பழகன் (தி.மு.க.): துறைமுகம் 2. வி.எஸ். பாபு (தி.மு.க.): புரசைவாக்கம் 3. பரிதி இளம்வழுதி (தி.மு.க.): எழும்பூர் 4. ஆற்காடு வீராசாமி (தி.மு.க.): அண்ணா நகர் 5. மு.க. ஸ்டாலின் (தி.மு.க.): ஆயிரம்விளக்கு 6. கருணாநிதி (தி.மு.க.): சேப்பாக்கம் 7. டி. ஜெயக்குமார் (அ.தி.மு.க.): ராயபுரம் 8. பி.கே. சேகர் பாபு (அ.தி.மு.க.): ராதாகிருஷ்ணன் நகர் * 9. கு. சீனிவாசன் (அ.தி.மு.க.): பூங்கா நகர் 10. கலைராஜன் (அ.தி.மு.க.): தியாகராய நகர் 11. பதர் சையீத் (அ.தி.மு.க.): திருவல்லிக்கேணி 12. எஸ். வி. சேகர் (அ.தி.மு.க.): மைலாப்பூர் * 13. செந்தமிழன் (அ.தி.மு.க.): சைதாப்பேட்டை 14. எஸ்.கே. மகேந்திரன் (சி.பி.எம்): பெரம்பூர்

கருணாநிதியின் தங்க கிரீடம் 55 லட்சத்துக்கு ஏலம் போனது!

சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் சிலையை முதல்வர் கருணாநிதி இன்று (பிப்ரவரி 9) திறந்து வைத்தார். மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டையில் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கருணாநிதி தங்க கிரிடமும் தங்க வாளும் பரிசளிக்கப்பட்டது. அதனை சிலை திறப்பு விழாவில் கருணாநிதி முன்பு ஏலம் விட்டார்கள். காமராஜ் என்பவர் அதை 55 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். இந்த தொகையை ம.பொ.சி.யின் குடும்பத்தினருக்கு வழங்க போகிறார்கள்.

சுப்பிரமணியன் சுவாமிக்கு சட்டசபையில் கருணாநிதி விளக்கம்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் அரசு விரும்புரிமை கோட்டாவில் வீடுகள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருக்கிறது என்று சொல்லி கவர்னர் மாளிகையில் புகார் கொடுத்தார் சுப்பிரமணியன் சுவாமி. முதல்வர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டிருந்தார் சுவாமி. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் இதுபற்றி விளக்கம் கொடுத்திருக்கிறது தமிழக அரசு. சட்டசபையில் இன்று (பிப்ரவரி 8) சட்டப் பேரவை விதி 110இன் கீழ் முதலமைச்சர் கருணாநிதி படித்த அறிக்கை:

2006 தேர்தல்: விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள்!

2006 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற விடுதலைச் சிறுத்தைகளுக்கு 9 தொகுதிகள் வழங்கப்பட்டன. அதேபோல புதுவையில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள்

1. விருத்தாசலம்: ஆர்.கிருஷ்ணமூர்த்தி 2. குன்னம்: பி.ஜெயசீலன் 3. அரியலூர்: சி.பாஸ்கர் 4. லால்குடி: டாக்டர் பார்க்கவன் பச்சமுத்து 5. நெல்லை: எஸ்.மதன்

2006 தேர்தல்: வி.சி. போட்டியிட்ட தொகுதிகள்!

 2006 தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 7 தனித் தொகுதிகள். 2 பொதுத் தொகுதிகள். அந்த தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோவில் மணி சின்னத்தில் போட்டியிட்டது. 2001 தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். 2006ல் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டும் என்று விரும்பி தனியாக ‘கோவில் மணி’ சின்னத்தில் போட்டியிட்டது.

ஸ்டாலின் ஊக்கை விழுங்கி விட்டான்: கருணாநிதி

சென்னை பெரம்பூர் லோக்கோ ஓர்க்ஸ் கூடுதல் மேம்பாலம் திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை: இந்த விழா நிகழ்ச்சியில் பாலத்தின் அருமையையும், பாலங்களுடைய வரலாறுகளையும் எனக்கு முன்னால் பேசிய நம்முடைய துணை முதலமைச்சர் தம்பி ஸ்டாலின் அவர்களும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தம்பி தயாநிதி மாறன் அவர்களும், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் அவர்களும் மிக விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

''பட்ஜெட் நிதி எந்த ‘நிதி’ களின் கைகளுக்கு செல்லப் போகிறதோ?'': ஜெயலலிதா

தமிழக அரசின் பட்ஜெட் தொடர்பாக ஜெயலலிதா இன்று (பிப்ரவரி 5) வெளியிட்ட அறிக்கை: இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற குறிக்கோள் இல்லாத ஒரு வெத்து வேட்டு அறிக்கையாக அமைந்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக, அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் எடுத்த முடிவிற்கு முற்றிலும் எதிராக, ராகு காலத்தை மனதில் வைத்து, கேள்வி நேரத்தை புகுத்தி, அதற்குப் பிறகு காலை 10.30 மணிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது, கருணாநிதியின் “பகுத்தறிவிற்கு” ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!

ம.ம.க. நிர்வாகிகள் ஜெயலலிதாவுடன் சந்திப்பு

அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் தொகுதி பங்கீடு குழு சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவில் இடம் பெற்றிருக்கும் ஓ. பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

2006 தேர்தல்: தி.மு.க. அதிருப்தியாளர்கள்

தேர்தலில் எப்படியாவது போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகிவிட வேண்டும் கனவில் கரை வேட்டி கட்டியவர்கள்தான் அதிகம். 2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.வில் எதிர்பார்த்த பலருக்கு ஸீட் கிடைக்கவில்லை. சில தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டதால் பலர் அதிருப்தி அடைந்தனர்.

தொகுதி பங்கீடு: ம.தி.மு.க. பேச்சுவார்த்தை

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தொகுதிப் பங்கீடு குறித்து அ.தி.மு.க.வோடு பேச்சுவார்த்தை நடத்தியது. அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்களான, பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆகியோர், இன்று (பிப்ரவரி 4) மாலை, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி. மாரியப்பன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் க. சோமு, தலைமை நிலையச் செயலாளர் தாயகம் குருநாதன் ஆகியோருடன் முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கருணாநிதி ஆட்சி வீழ்ச்சி அடையும்: ஜெயலலிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (பிப்ரவரி 4) வெளியிட்ட் அறிக்கை: கேரள மாநிலம் வல்லார்படத்தில் சர்வதேச பெட்டக மாற்று முனையத்தை அமைக்க அனுமதி கொடுத்ததன் மூலம் தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார் கருணாநிதி.

செல்போன் கட்டணத்தை குறைத்து சாதனை படைத்தவர் ராசா: கருணாநிதி பேச்சு

தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற தி.மு.க. பொதுக் குழுத் தீர்மானங்கள் விளக்கப் பொதுக் கூட்டம் சென்னையில் நடந்து. அதில் முதலமைச்சர் கருணாநிதி பேசினார். அதன் விவரம்: தென்சென்னையிலே இவ்வளவு கோலாகலமாக இத்தகைய எழுச்சியோடு இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு என்ன காரணம் என்பதை நான் எண்ணிப்பார்க்கிறேன்.  “அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்” என்று கிராமப்புறங்களிலே ஒரு பழமொழி உண்டு.  அதைப்போலத்தான் தம்பி அன்பழகனை அடிமேல் அடி அடித்து இந்த அம்மியை நகரச்செய்திருக்கிறேன் என்றுதான் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஆனால் “அம்மி” நகர்ந்ததுமாத்திரம் அல்ல, நமக்கு முன்னால் அது “கும்மி”யும் அடிப்பதைப்போல் மகத்தான விழாவாக இந்த விழாவை அவரும், நண்பர்களும் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

2006 தேர்தல்: திண்டிவனத்தாரை கழற்றிவிட்ட போயஸ் கார்டன்!

2006 சட்டசபைத் தேர்தல் நெருங்குவதற்கு சில காலம் வரையில் காங்கிரஸில் செல்வாக்கான தலைவராக இருந்தார் திண்டிவனம் ராமமூர்த்தி. அப்போது காங்கிரஸுக்குள்ளேயே இருந்து கொண்டு ஜெயா புகழாராம் பாடிக் கொண்டிருந்தார். வன்னியர்களுக்கு காங்கிரஸில் மரியாதை இல்லை என்று புது குண்டு போட்டு சத்தியமூர்த்தி பவனில் இருந்து விலகினார் ராமமூர்த்தி. பிறகு போயஸ் கார்டனில் ஐக்கியமானார். அங்கே அவருக்கு ஆரம்பத்தில் நல்ல மரியாதை கிடைத்தது. ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் அந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் திண்டிவனத்தாரின் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது.

2006 தேர்தல்: கடலோர மாவட்டங்களில் வென்ற தி.மு.க.!

2006 தமிழக சட்டசபைத் தேர்தலில் கடலோர மாவட்டங்களில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சேது சமுத்திர திட்டம் துவக்கப்பட்ட சமயத்தில் மீனவர்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு எதிர்ப்பு இருந்ததாக பேச்சு எழுந்தது. கடலோர மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றியை குவித்ததால் அந்த எதிர்ப்பு வலுவிழந்தது.

2006 தேர்தல்: கட்சிவாரியாக வென்ற பெண் எம்.எல்.ஏ.கள்!

தி.மு.க. எம்.எல்.ஏ.கள்: 1. அச்சரப்பாக்கம்:& சங்கரி நாராயணன் 2. சங்கராபுரம்: அங்கயற்கண்ணி 3. தாராபுரம்: பிரபாவதி 4. சமயநல்லூர்: தமிழரசி 5. தூத்துக்குடி: கீதா ஜீவன் 6. ஆலங்குளம்: பூங்கோதை 7. உப்பிலியாபுரம்: ராணி

2006 தேர்தல்: பேராசிரியர் அன்பழகன் ‘பரிதாப’ வெற்றி!

2006 சட்டசபைத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் அன்பழகன் வெறும் 410 ஓட்டுகள் வித்தியாசத்தில் ‘பரிதாப வெற்றி’ பெற்றார். அன்பழகன் வாங்கிய ஓட்டுகள் 26 ஆயிரத்து 545. அன்பழகனை எதிர்த்துப் போட்டியிட்ட ம.தி.மு.க.வேட்பாளர் சீமா பஷீர் 26 ஆயிரத்து 135 ஓட்டுகள் பெற்றார்.

சட்டசபையில் 22 பெண்கள்!

2006 தமிழக சட்டசபைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 பேரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட 22 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் தலா ஏழு பெண் எம்.எல்.ஏ.களும் காங்கிரஸ், சி.பி.எம். கட்சிகளில் இருந்து தலா மூன்று பெண் எம்.எல்.ஏ.களும் சி.பி.ஐ., பா.ம.க. கட்சிகளில் தலா ஒரு பெண் எம்.எல்.ஏ.களும் வெற்றி பெற்றார்கள்.

தொகுதி பங்கீடு: புதிய தமிழகம், மூ.மு.க. பேச்சுவார்த்தை

தமிழக சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்துடன் தொகுதிப் பங்கீடு குறித்து, அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்களான, பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இன்று (பிப்ரவரி 1 செவ்வாய்) மாலை 6.00 மணியளவில், அ.தி.மு.க. தலைமைக் அலுவலகத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ந. சேதுராமன், மாநில பொதுச் செயலாளர் இசக்கிமுத்து ஆகியோருடன் முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கூட்டணியில் பா.ம.க. விலகல்: சென்னை திரும்பிய கருணாநிதி பேட்டி

உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாகவும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்காகவும் டெல்லி போன முதல்வர் கருணாநிதி இன்று (பிப்ரவரி 1) சென்னை திரும்பினார். அதன்பிறகு அறிவாலயத்தில் கருணாநிதி பேட்டி அளித்தார். அதன் விவரம்: கேள்வி: உங்கள் டெல்லிப் பயணம் எப்படி அமைந்தது? பதில்:  வானம் நிர்மலமாக இருந்தது - வழியில் தடைகள் எதுவும் இல்லை - பொதுவாக நன்றாக பயணம் அமைந்தது.

2006 தேர்தல்: 163 இடங்களில் வென்ற தி.மு.க. கூட்டணி!

2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 163 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தி.மு.க. 96 தொகுதிகளிலும் காங்கிரஸ் 34 தொகுதிகளிலும் பா.ம.க. 18 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி 9 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தி.மு.க.வுக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் 96 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப் பெரும் கட்சியாக விளங்கியது.

கூட்டணிக்கு குழு அமைக்கப்படுகிறது: கருணாநிதி பேட்டி

உள் நாட்டு பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி நேற்று (ஜனவரி 30) டெல்லி சென்றார். அங்கே பத்திரிகையாளர்களுக்கு கருணாநிதி பேட்டி அளித்த போது வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. அணியில் பா.ம.க. இடம் பெறும் என்று கருணாநிதி தெரிவித்தார். இந்த நிலையில் திங்கள் கிழமை காலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார்.

கருணாநிதி டெல்லி பேட்டி முழு விவரம்

உள் நாட்டு பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி இன்று (ஜனவரி 30) டெல்லி சென்றார். அங்கே பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கேள்வி: டெல்லிக்கு வந்திருக்கிறீர்கள். யார் யாரைச் சந்திக்க இருக்கிறீர்கள்? பதில்: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியையும், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கையும் சந்திக்கவிருக்கிறேன்.

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.: கருணாநிதி பேட்டி

உள் நாட்டு பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி இன்று (ஜனவரி 30) டெல்லி சென்றார். அங்கே பத்திரிகையாளர்களுக்கு கருணாநிதி பேட்டி அளித்தார். வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. அணியில் பா.ம.க. இடம் பெறும் என்று கருணாநிதி தெரிவித்தார். தி.மு.க. கூட்டணி கட்சிகள் விவரம்: 1. தி.மு.க. 2. காங்கிரஸ் 3. பா.ம.க. 4. விடுதலைச் சிறுத்தைகள் 5. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 6. புரட்சி பாரதம்

மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழு தீர்மானங்கள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் பிரிவான மனித நேய மக்கள் கட்சியின் பொதுக் குழு இன்று (ஜனவரி 30) சென்னையில் கூடியது. ஜவாஹிருல்லாஹ் தலைமையில் தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தலைமை நிர்வாகிகள் எஸ்.ஹைதர் அலி, ப. அப்துல் சமது, ஒ.யு. ரஹ்மதுல்லாஹ், ஹாரூன் ரஷீத், ஜே.எஸ். ரிபாயி, எம். தமிமுன் அன்சாரி, குணங்குடி அனிபா உட்பட 4000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து வந்து பங்குக் கொண்டார்கள்.

2006 தேர்தல்: வாக்குப் பதிவு ஹைலைட்ஸ்!

2006 சட்டசபைத் தேர்தலில் வாக்குப்பதிவின் போது நடைபெற்ற ஹைலைட்ஸ் விஷயங்கள் இங்கே அணிவகுக்கின்றன. * ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 70.22 சதவீதம் வாக்குகள் பதிவானது. * 49 சதவீதம் பெண்களும் 51 சதவீத ஆண்களும் ஓட்டுப் போட்டனர். * கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் சராசரியாக 70 சதவீத வாக்குகள் பதிவானது.

2006 தேர்தல்: அதிகபட்ச வாக்குப் பதிவு!

கடந்த 2006 சட்டசபைத் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக மதுரை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தலா 73 சதவீத வாக்குகள் வரை பதிவாகின. ஜெயலலிதா போட்டியிட்ட ஆண்டிப்பட்டியை உள்ளடக்கிய தேனி மாவட்டத்தில்தான் குறைந்தபட்சமாக 57 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆண்டிப்பட்டி தொகுதியில் 65 சதவீத வாக்குகளும் கருணாநிதி போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியில் 62 சதவீத வாக்குகளும் பதிவானது. நடிகர் விஜயகாந்த் போட்டியிட்ட விருத்தாச்சலம் தொகுதியில் 71 சதவீத வாக்குகள் பதிவானது. ஸ்டாலின் தொகுதியான ஆயிரம் விளக்கில் 60 சதவீதமும், ஓ. பன்னீர் செல்வத்தின் பெரியகுளத்தில் 63 சதவீதமும் பேராசிரியர் அன்பழகனின் துறைமுகம் தொகுதியில் 57 சதவீதமும், ஆற்காடு வீராசாமியின் அண்ணாநகர் தொகுதியில் 58 சதவீத வாக்குகளும் பதிவாகின. சென்னையின் பிற தொகுதிகளான ராயபுரத்தில் 69 சதவீதமும், ஆர்.கே. நகரில் 65 சதவீதமும், பூங்கா நகரில் 62 சதவீதமும், பெரம்பூரில் 59 சதவீதமும், எழும்பூரில் 58 சதவீதமும், தி.நகரில் 55 சதவீதமும் திருவல்லிக்கேணியில் 55 சதவீதமும், மைலாப்பூரில் 63 சதவீதமும், சைதாப்பேட்டையில் 65 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. சென்

2006 தேர்தல்: மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்!

2006 சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் மாவட்டவாரியாக பதிவான வாக்கு சதவீதம் 1. சென்னை 58.28 சதவீதம் 2. திருவள்ளூர் 68.57 சதவீதம் 3. காஞ்சிபுரம் 68.14 சதவீதம் 4. வேலூர் 71.17 சதவீதம் 5. திருவண்ணாமலை 73.71 சதவீதம்

2006 தேர்தல்: எத்தனை போட்டி? எத்தனை வெற்றி?

தி.மு.க.கூட்டணி: கட்சி - போட்டி - வெற்றி தி.மு.க. -  130  -  96 காங்கிரஸ் - 48 -  34 பா.ம.க.  -  31  -  18 சி.பி.எம்.  -  13  -  9 சி.பி.ஐ.  -  10  -  6 முஸ்லிம் லீக் -  2  -  2 மொத்தம் -  234  -  163

2006 தேர்தல் முடிவு!

தி.மு.க.கூட்டணி: 163 தி.மு.க.: 95 காங்கிரஸ்: 35 பா.ம.க.: 18 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: 9 இந்திய கம்யூனிஸ்ட்: 6 * தி.மு.க. வெற்றி பெற்ற 95 இடங்களில் முஸ்லிம் லீக்கு இரண்டு இடமும் புரட்சி பாரத்திற்கு ஒரு இடமும் அடங்கும். இந்த கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் தேர்தல் கமிஷனின் கணக்குப்படி தி.மு.க.வுக்கு 95 இடங்கள்தான்.

ஸ்பெக்ட்ரம் தாவூத் இப்ராஹிம் தொடர்பு: ஜெயலலிதா அறிக்கை

ஸ்பெக்ட்ரம் தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: கடந்த சில மாதங்களாக 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் ஊடகங்களை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டது.  இருப்பினும், ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு எத்தனை பூஜ்யங்கள் என்ற அளவில்தான் இந்த ஊழல் ஒவ்வொருவரையும் ஈர்த்ததே தவிர, இதில் உள்ள மிக ஆபத்தான பிரச்சினைகள் கவனிக்கப்படவில்லை. மரங்களை கண்டு வனத்தை கவனிக்காதது போல், அற்பமானவற்றில் அக்கறை செலுத்தி, முக்கியமானவற்றை தவறவிட்டுவிட்டதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்!

தி.மு.க. கூட்டணி கட்சிகள்!

1. தி.மு.க. 2.   பா.ம.க. 3. விடுதலைச் சிறுத்தைகள் 4.  கொங்குநாடு முன்னேற்ற கழகம் 5. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 6. புரட்சி பாரதம்

அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள்!

1. அ.தி.மு.க. 2. தே.மு.தி.க. 3. ம.தி.மு.க. 4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்) 5. இந்திய கம்யூனிஸ்ட் (சி.பி.எம்) 6. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மனிதநேய மக்கள் கட்சி

தனித் தொகுதிகளில் அதிகம் போட்டியிட்ட அ.தி.மு.க.!

2006 சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 45 தனித் தொகுதிகள் இருந்தன. இதில் அ.தி.மு.க.தான் அதிகபட்சமாக 34 தொகுதிகளில் களமிறங்கியது. தி.மு.க. 28 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த இரண்டு திராவிட கட்சிகளுமே 24 தனித்தொகுதிகளில் நேரடியாக மோதின.

பன்னீர்செல்வத்துக்கு கிடைத்த கௌரவம்!

2001 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றபோதும் அந்த தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியவில்லை. நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் எல்லாமே தள்ளுபடி ஆனது. எம்.எல்.ஏ. ஆகாமலேயே முதல்வர் நாற்காலியில் அப்போது அமர்ந்தார் ஜெயலலிதா. அதன்பிறகு சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பிறகு சில மாதங்களிலேயே பதவியில் இருந்து இறங்கினார் ஜெயலலிதா. அந்த சமயத்தில் முதல்வர் சான்ஸ் ஒ. பன்னீர்செல்வத்துக்கு அடித்தது. சில மாதங்கள் வரை முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

களைக்கட்டிய 2006 தேர்தல் பிரச்சாரம்!

2006 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற வைகோ, தி.மு.க., கருணாநிதி, அவரது குடும்பம், சன் டி.வி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி அனல் பிரச்சாரம் செய்தார். ஆனால் ஜெயலலிதாவோ அவருக்கு எதிர்மறையாக இருந்தது. தனது 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை பிரச்சாரத்தில் அடுக்கினார். நடிகர்கள் எஸ்.எஸ். சந்திரன், ராதாரவி, முரளி, ஆனந்தராஜ், சிம்ரன், விந்தியா எனத் திரையுலகமே அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்துப் பிரசாரம் செய்தது.

தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்!

ஜெயலலிதா, தொண்டர்களுக்கு இன்று (ஜனவரி 16) கடிதம் எழுதியிருக்கிறார். கடித விவரம்: இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே!

மகளிர் இடஒதுக்கீடு. 2016ல்தான் சாத்தியம்!

நாடாளுமன்றம் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை இன்னும் எத்தனை காலங்களுக்குதான் பேசிக் கொண்டிருக்க போகிறார்களோ தெரியவில்லை. நீண்ட வருடங்களாக சொல்லி வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த 2010 மார்ச் 9ம் தேதி நாடாளுமன்ற ராஜ்ய சபாவில் நிறைவேறியது. இன்னும் மக்களவையில் இந்த மசோதா நிறைவேறவில்லை.

2006 தேர்தல்: விஜயகாந்த் தனியே...தன்னந் தனியே!

2006 தேர்தலில் நடந்த இன்னொரு அதிசயம் விஜயகாந்த் என்ட்ரிதான். கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே 2006 சட்டசபைத் தேர்தல் வர தன்னந்தனியாக களமிறங்கினார் விஜயகாந்த். அந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட ஒரே கட்சி ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்‘தான். கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு ஆள் பிடிக்க அலைந்து கொண்டிருந்த நேரத்தில் தனியாக போட்டியிட்டார் கேப்டன்.

மண்ணை கவ்விய பார்வர்டு பிளாக்!

‘அகில இந்திய பார்வர்டு பிளாக்’ கட்சி 2006 தேர்தலில் ஏக எதிர்பார்ப்புடன் களமிறங்கி ‘புஸ்’வானமானது. எந்த பெரிய கூட்டணியிலும் சேராமல் தனித்தே போட்டியிட்டது. 60 வேட்பாளர்கள் ‘அகில இந்திய பார்வர்டு பிளாக்’ சார்பில் போட்டியிட்டனர்.

இளைஞன் படத்தை பார்த்தார் கருணாநிதி

ஸ்பெக்ட்ரம், அழகிரி முறுக்கல், சென்னை சங்கமம், சட்டசபை, என்று 1.70 லட்சம் கோடிகள் பிரச்சனை இருந்தாலும் சினிமா பார்க்கவும் கருணாநிதிக்கு நேரம் எப்படிதான் கிடைக்கிறதோ தெரியவில்லை. கலைஞரின் வசனத்தில் வெற்றிகரமாக தியேட்டரை விட்டு போடப்போகும் இளைஞன் படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

தி.மு.க. ‍காங்கிரஸ் கூட்டணிக்கு பாடம் புகட்டுங்கள்: ஜெயலலிதா

ஜெயலலிதா இன்று (ஜனவரி 13) வெளியிட்ட அறிக்கை: ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்த விசாரணை இரண்டு வாரங்களுக்கு முன்பு சரியான பாதையில் செல்வது போல் தோற்றமளித்தது. இந்த ஊழல் குறித்த கடுமையான அறிக்கையை இந்திய நாடாளுமன்றத்தின் முன்பு இந்தியாவின் உயரிய தணிக்கை அமைப்பான, இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில் கைபேசி சேவைகளுக்கான 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் தவறான கொள்கையை கடைபிடித்ததன் காரணமாக இந்திய நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலில் வென்ற கட்சிகள், முதல்வர்கள்!

தமிழக சட்டசபைத் தேர்தல் வரலாற்றில் இதுவரை 13 பொதுத் தேர்தல்கள் நடந்திருக்கின்றன. அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தலா ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் மூன்று முறை மட்டுமே ஆட்சியை பிடித்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் வென்ற கட்சிகள், முதல்வர்கள் விவரம் இங்கே... ஆண்டு - வென்ற கட்சி - முதல்வர் 1952 - காங்கிரஸ் - ராஜாஜி, காமராஜர் 1957 - காங்கிரஸ் - காமராஜர் 1962 - காங்கிரஸ் - காமராஜர், பக்தவத்சலம் 1967 - தி.மு.க. - அண்ணாதுரை, கருணாநிதி 1971 - தி.மு.க. - கருணாநிதி 1977 - அ.தி.மு.க. - எம். ஜி.ஆர். 1980 - அ.தி.மு.க. - எம். ஜி.ஆர். 1984 - அ.தி.மு.க. - எம். ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன் 1989 - தி.மு.க. - கருணாநிதி 1991 - அ.தி.மு.க. - ஜெயலலிதா 1996 - தி.மு.க. - கருணாநிதி 2001 - அ.தி.மு.க. - ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதா 2006 - தி.மு.க. - கருணாநிதி

வாக்குகள் வசப்படுமா?: கருணாநிதி பேச்சு

“சென்னை சங்கமம்” தொடக்க விழா இன்று (ஜனவரி 12) சென்னையில் நடைபெற்றது. தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சியில் நடந்த இந்த விழாவில் முதலில் “வானம் வசப்படும்” என்று இசை நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கனிமொழி, ஜெகத் கஸ்பர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

தேர்தல் பட்டிமன்ற படங்கள்!

தமிழ் புத்தாண்டு முதல் நாள். பொங்கல் திருநாளில் சிறப்பு பட்டி மன்றத்தை ஒளிபரப்ப போகிறது கலைஞர் டி.வி. பட்டிமன்றத்தின் தலைப்பு. தி.மு.க.வின் செல்வாக்கும் புகழும் வளரக் காரணம் கலைஞரின் சமூக தொண்டே! கலை இலக்கிய பணியே! ஆட்சித் திறனே! கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், சுப.வீரபாண்டியன், கி.வீரமணி, ஜெகத்ரட்சகன், பீட்டர் அல்போன்ஸ், என்று அறிவாலயத்தின் ஆஸ்தான வித்துவான்கள்தான் பேசுகிறார்கள். பட்டிமன்றத்தின் நடுவர் இனமான பேராசிரியர் அன்பழகன்தான்

எதிரெதிர் முகாம்களில் நண்பர்கள்!

தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் பா.ம.க.வின் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகளின் திருமாவளவன், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் சேதுராமன் ஆகியோர் முக்கிய தூண்கள். 2006 சட்டசபைத் தேர்தலில் இந்த நட்பு தொடர முடியாமல் போனது. தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளை சேர்க்க தேர்தல் நேரத்தில் முயற்சி எடுத்தார் ராமதாஸ். ‘‘பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் ஸீட்டில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடலாம்’’ என்றார் கருணாநிதி. இதனை விரும்பாத திருமாவளவன், அ.தி.மு.க. கூட்டணியில் ஐக்கியமானார். தேர்தல் நெருங்கும் வரையில் தி.மு.க. கூட்டணியில் இருந்த சேதுராமன், தேர்தலில் போட்டியிடச் சொல்லி தன்னை கருணாநிதி வற்புறுத்தியதாக சொல்லி தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகினார் சேதுராமன். தமிழுக்காக கைகோர்த்தவர்கள், தேர்தலில் எதிர் முகாம்களில் களத்தில் நின்றனர்.

49 ஓ - அப்படின்னா என்னங்க?

போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் பிடிக்காமல், யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனில், அதையும் பதிவு செய்யும் வசதிதான் 49 ஓ. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இதற்கென ஒரு பட்டனை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தேர்தலுக்கு தேர்தல் கோரிக்கையாகவே இருந்து வருகிறது. இதுகுறித்த வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல்: ஜெயலலிதா பேச்சு

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஒன்றியம், சுவாமித் தோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் சுவாமி தலைமை பதியில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்ச்சியில் ஜெயலலிதா இன்று (ஜனவரி 9) கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் போனார் ஜெயலலிதா. அய்யா வைகுண்டர் சுவாமி தலைமை பதியில் வழிபாடு செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா ஆற்றிய உரை:

2006 தேர்தல் கவர்ச்சி வாக்குறுதிகள்!

அரிசி, கலர் டி.வி., தரிசு நிலம் ஆகியவைதான் 2006 சட்டசபைத் தேர்தலில் முக்கியமான கவர்ச்சி அறிவிப்புகள். ரேஷனில் ரூ. 2-க்கு ஒரு கிலோ அரிசி, ஏழைக் குடும்பங்களுக்கு இலவச கலர் டி.வி., ஏழை விவசாயத் தொழிலாளருக்கு தலா 2 ஏக்கர் தரிசு நிலம் என தேர்தல் அறிக்கையில் அறிவித்தது தி.மு.க. ‘‘இதில் எதுவுமே சாத்தியமில்லை’’ என்று முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அப்போது எதிர்ப்பு காட்டியது. ஆனால், விஜயகாந்த் மட்டும் இதைக் குறை கூறவில்லை. ‘‘ஓர் அரசு நினைத்தால் எதையும் செய்ய முடியும்’’ என்றார்.

தமிழக‌ சட்டசபை கலாட்டா காட்சி படங்கள்!

தமிழ்நாடு சட்டசபையில் இன்று (ஜனவரி 7) கவர்னர் உரையாற்றினார். ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க. ம.தி.மு.க. கட்சி எம்.எல்.ஏ.கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.கள் கருப்பு துண்டு அணிந்து வந்தார்கள்.

பிரச்சாரம் செய்யாமலேயே வென்ற‌ செங்கோட்டையன்!

அரசியல் கட்சிகளின் பெரிய தலைவர்களே தாங்கள் போட்டியிடும் தொகுதியில் பிரசாரம் செய்வதற்கு சில நாட்களை ஒதுக்குவது வழக்கம். ஆனால், சொந்தத் தொகுதியில் பிரசாரமே செய்யாமல், வெற்றி பெற்றுவிடும் நம்பிக்கையில் தன்னுடைய கட்சித் தலைவியின் பிரசாரப் பயணத்தில் ஓடினார் ஒருவர். அவர் யாருமல்ல செங்கோட்டையன்தான். கடந்த சட்டசபைத் தேர்தலில் நடந்த விஷயம் இது.

கனிமொழி பிறந்தநாள்: கருணாநிதி ஆசி

கனிமொழிக்கு இன்று (ஜனவரி 5)பிறந்தநாள். சி.ஐ.டி. காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு போன முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ஆசி வழங்கினார். ஸ்பெக்ட்ரம் விவகாரம், நீரா ராடியாவுடன் ராஜாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோர் பேசிய‌ டேப் உரையாடல்கள் என்று அரசியல் பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கும் சமயத்தில் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல கருணாநிதி போயிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கருணாநிதி ஆட்சி முடங்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது: ஜெயலலிதா

ஜெயலலிதா இன்று (ஜனவரி 5) வெளியிட்ட அறிக்கை: “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பது போல், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தற்போது நிலவும் அலங்கோல நிலையை வைத்தே தமிழ்நாட்டின் அவல நிலையை தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்.  அந்த அளவுக்கு நிர்வாகத் திறமையற்ற, ஊழல் மிகுந்த, கொடுங்கோல் குடும்ப ஆட்சி தமிழ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  தற்போது தமிழ் நாட்டில் செயல்பட்டு வரும் எட்டு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வருகின்றன.

கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க.வின் விருது உற்சவம்!

தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிடும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதிக்கு உழைத்திடும் பெருமக்கள் ஆகியோரில் சிறந்தோரைத் தேர்வு செய்து சான்றோர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2011ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சில மாதங்களில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் வருவதால் கூட்டணிக் கட்சிகளை குளிர்விக்கும் வகையில் விருதுகள் தரப்பட்டிருக்கின்றன.    

ம‌.ம.க. தொகுதி உடன்பாடு குழு அமைப்பு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மனிதநேய மக்கள் கட்சி உயர்நிலைக் குழு தலைமை ஒருங்கினைப்பாளர் ஜவாஹிருல்லா தலைமையில் சென்னையில் கூடியது. மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக் குழுவின் உறுப்பினர்களான ஹைதர் அலி, அப்துல் சமது, ரஹமத்துல்லா,ஹாரூன் ரஷீத், ரிபாயி, தமிமுன் அன்சாரி, ஜெயினுல் ஆபிதீன், முகம்மது கவுஸ், சம்சுதீன் நாசர் உமரி, கோவை உமர், பேராசிரியர் ஹாஜாகனி, ஜுனைத், எம்.நாசர், உட்பட பலர் கலந்து கலந்து கொண்டனர்.

5 முனைப்போட்டியை சந்தித்த 2006 தேர்தல்!

2006 சட்டசபைத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் 5 முனைப்போட்டி ஏற்பட்டது. அ.தி.மு.க., தி.மு.க., பி.ஜே.பி. கூட்டணிகள், நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க. ஆகியவை எல்லா தொகுதிகளிலும் போட்டியிட்டன. அகில இந்திய பார்வர்டு பிளாக் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், புதிய தமிழகம் உள்ளிட்ட வேறு சில கட்சிகள் பல தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டன. அதனால் எல்லா தொகுதிகளிலும் 4 கூட்டணிகளின் வேட்பாளர்கள் தவிர, வேறொரு கட்சியின் ஒரு வேட்பாளரும் களத்தில் இருந்தார். அந்த வகையில் 2006 சட்டசபைத் தேர்தலில் 5 முனைப்போட்டி ஏற்பட்டது.

‘‘நயினா ஒண்டிக்கு ஒண்டி வர்றீயா...’’ !

2006 சட்டசபைத் தேர்தலில் எதிரொலித்த முக்கியமான கோஷம் இது. அந்த தேர்தலில் வழக்கம் போல சென்னையில்தான் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் கருணாநிதி. சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் நடந்த அந்த பிரச்சார கூட்டத்தில்தான் ‘‘நயினா ஒண்டிக்கு ஒண்டி வர்றீயா?’’ என்று சீறினார் தயாநிதி மாறன்.

பிரத‌ம‌ரை ச‌ந்தித்தார் க‌ருணாநிதி

நேற்று சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை விமான நிலையத்தில் முதல்வர் கருணாநிதி வரவேற்க செல்ல‌வில்லை. அவ‌ருக்கு ப‌திலாக‌ துணை முத‌ல்வ‌ர் ஸ்டாலின்தான் ஏர்போர்ட் சென்றார். இர‌வு க‌வ‌ர்ன‌ர் மாளிகையில் த‌ங்கிய‌ பிர‌த‌ம‌ரைக்கூட‌ க‌ருணாநிதி போய் பார்க்காத‌ நிலையில் இன்று (ஜ‌ன‌வ‌ரி 3) காலை திடிரென்று ம‌ன்மோக‌ன் சிங்கை க‌ருணாநிதி ச‌ந்தித்தார்.

பிரதமரை வரவேற்க‌ கருணாநிதி போகாதது ஏன்?

சென்னையில் ஜனவரி 3ம் தேதி நடக்கும் அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஞாயிற்றுக் கிழமை இரவு 7.30 மணிக்கு சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை வரவேற்க முதல்வர் கருணாநிதி செல்லவில்லை. துணை முதல்வர் ஸ்டாலின்தான் பிரதமரை வரவேற்றார். மன்மோகன் சிங் ஏர்போர்ட்டிற்கு வந்த போது கவிஞர் வைரமுத்து புத்தக வெளியிட்டு விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார்.

பிரதமரை விட தமிழுக்குதான் பெருமை சேர்ப்பேன்: கருணாநிதி பேச்சு

கவிஞர் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் நூலை முதல்வர் கருணாநிதி இன்று (ஜனவரி 2) வெளியிட்டார். இந்த விழாவில் ரஜினி, கமல், ஏ.ஆர்.ரஹ்மான், பாலசந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், வாலி, மணிரத்தினம் என்று நிறைய பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். விழாவில் கருணாநிதி ஆற்றிய உரை இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.க. அரசு குரல் கொடுத்தது என்பதைக் காரணமாகக் காட்டி - 1991 ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில் தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது.  அப்படிக் கலைக்கப்பட்ட போது, “குங்குமம்” வார இதழில் வைரமுத்து அவர்கள் எழுதிய ஒரு கவிதை வெளிவந்தது.

ஜெயலலிதாவுடன் சோ சந்திப்பு

ஜெய‌ல‌லிதாவை இன்று (ஜ‌ன‌வ‌ரி 1)மாலை போய‌ஸ் கார்ட‌ன் இல்ல‌த்தில் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ சந்தித்து பேசினார்.கடந்த வியாழக் கிழமை அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்திருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. "சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு சில நாட்களில் கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியிடுவேன்" என்று பொதுக்குழுவில் ஜெயலலிதா அறிவித்தார். இந்த நிலையில் ஜெயலலிதாவை சோ சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது. தேர்தல் மூவ், கூட்டணி பற்றிதான் சோவுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியிருக்கலாம் அல்லது பி.ஜே.பி.யை கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ள சொல்லி சோ கேட்டிருக்கலாம் என்று இந்த சந்திப்புக்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன. துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா பொங்கல் தினத்தில் நடைபெறுவது வழக்கம். அந்த விழாவிற்கு ஜெயலலிதாவை சோ அழைத்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

தி.மு.க.வின் சாதனைகளை காங்கிரசும் சொல்லும்: கருணாநிதி பேச்சு

இலவச சர்க்கரைப் பொங்கல் பொருள்கள், இலவச வேட்டி சேலைகள் வழங்கும் திட்டத்தைத் முதல்வர் கருணாநிதி இன்று (ஜனவரி 1) சென்னை பல்லாவரத்தில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் ஆற்றிய உரை: இன்றையதினம் இனிய நாள்; இனிப்பான நாள். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கான பொருள்களை இலவசமாக வழங்கும் விழா. தமிழர்கள் தங்களுடைய மொழியை, கலையை, நாகரிகத்தை, இனச் செழுமையை எண்ணிப் பார்த்து பூரிப்படைகிற நாள்; பொங்கல் திருநாள்.  இந்தப் பொங்கல் திருநாளை “தமிழர் திருநாள்” என்று நாம் கொண்டாடுகின்றோம். நாம் என்றால்  இன்றைக்குக் கொண்டாடுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த நாம் அல்ல.  நமக்கு முன்பே, நம்முடைய இன உணர்வுக்கு மெருகேற்றிய, இன உணர்வு தீப்பந்தத்தை ஓங்கிப் பிடித்த மறைமலையடிகளார் போன்றவர்கள், திரு.வி.க. போன்றவர்கள், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்கள், நமச்சிவாயனார்  போன்றவர்கள் இத்தகைய   தமிழ்ப் பெரியோர்கள், சான்றோர்கள், ஆன்றோர்கள்  எல்லாம் ஒன்று கூடி, எல்லா மொழிக்காரர்களுக்கும் ஒரு ஆண்டுக் கணக்கு இருக்கின்றது.