Skip to main content

பிரச்சார விதிமுறைகள்!


* எந்த ஒரு அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும், சாதி, இனம், மதம், மொழி ஆகியவற்றுக்கு இடையே வெறுப்பையும் துவேசத்தையும் தூண்டும் செயலில் ஈடுபடக்கூடாது.

* பிற கட்சிகளை பற்றி விமர்சிக்கும்போது அதன் முந்தைய செயல்பாடுகள், கொள்கைகள், திட்டங்கள், பணிகள் குறித்து மட்டுமே பேச வேண்டும்.

* பொது நடவடிக்கைக்கு தொடர்பில்லாத, தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசவோ கூடாது.


* சாதி, மத உணர்வுகளின் அடிப்படையில் வாக்கு சேகரிப்பதை தவிர்க்க வேண்டும். மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள், கோவில்கள் அல்லது மற்ற வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்யக்கூடாது.

* தனிப்பட்ட நபருக்கு சொந்தமான இடம், கட்டிடம் சுற்றுச்சுவர் ஆகியவற்றில் அனுமதியின்றி கொடி, பேனர் கட்டுதல், பிரசுரங்கள் ஒட்டுதல், வாசகங்கள் எழுதவோ கூடாது.

* அரசியல் கட்சி வேட்பாளர்கள் தாங்கள் நடத்த உத்தேசித்து உள்ள கூட்டங்களின் நாள், நேரம் ஆகிய விபரங்களை உள்ளூர் காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

* ஒருபகுதியில் கூட்டம் நடத்த திட்டமிடும் முன்னர் அந்த பகுதியில் தடை உத்தரவு ஏதேனும் உள்ளதா என்பதை தெரிந்து அதன்படி நடக்க வேண்டும். இதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரும் பட்சத்தில் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.

* ஒலிபெருக்கிகளை அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும்.

* கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்து உள்ளவர்கள் வேறு எவரெனும் அந்த கூட்டத்துக்கு இடர்பாடுகள் செய்தாலோ அல்லது பிரச்சினை ஏற்படுத்தினாலோ அவர்கள் மீது தாங்களாகவே எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. காவல்துறை உதவியை பெற்று அவர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பொது மைதானங்களில் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் கூட்டங்கள் நடத்தலாம். ஆனால் அனைத்து கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் இது தொடர்பாக சமமான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

* ஊர்வலம் நடத்த திட்டமிட்ட நாள், நேரம், ஊர்வலப்பாதை ஆகியவற்றை முன்கூட்டியே செய்து முடிக்க வேண்டும். ஏற்கனவே திட்டமிட்டதில் இருந்து மாற்றங்கள் செய்யக்கூடாது. இதுகுறித்து காவல்துறைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்.

* ஊர்வலம் நடத்தப்படுவதன் மூலம் அந்த ஊர்வலப்பாதையில் பொதுமக்களுக்கு ஏதாவது இடைïறு அல்லது போக்குவரத்துக்கு தடைகள் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* ஊர்வலம் மிக நீளமாக இருக்குமானால் சாலைகள் கூடும் இடங்கள் போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் பெரிய இடைïறுகள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு ஊர்வலத்தை பல தொகுதிகளாக பிரித்து இடைவெளிவிட்டு நடத்த ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

* இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் ஒரேநேரம், நாள், ஒரே இடத்தில் நடத்த உத்தேசித்து இருந்தால் அந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்கள் முன்னதாகவே ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு மோதல்கள், பிரச்சினைகள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு உள்ளூர் காவல்துறையின் உதவியை கேட்டுப்பெற வேண்டும்.

* ஊர்வலம் செல்லும்போது அதில் கலந்து கொள்பவர்கள் தேவையில்லாத பொருட்களை எடுத்துச் செல்லாமல் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

*  தனது கட்சியின் தொண்டர்கள், மற்ற தலைவர்களின் உருவ பொம்மைகளை எடுத்துச்செல்வதையோ அல்லது அதை எரிப்பதையோ தவிர்க்க வேண்டும்.

* இரவு 10 மணிக்கு பிறகு கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தக்கூடாது.

* அந்தப்பகுதியில் உள்ளூர் சட்ட நெறிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தட்பவெப்பநிலை, விழாக்காலங்கள், தேர்வுகள் முதலிய அம்சங்களை கணக்கில் கொண்டு ஊர்வலங்கள், கூட்டங்கள் நடத்த வேண்டும்.

* காலை 6 மணிக்கு முன்பும் இரவு 10 மணிக்கு பின்பும் ஒலிபெருக்கிகளை கட்டாயம் பயன்படுத்தக்கூடாது.

* ஒரு கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகளை மற்ற கட்சியினர் அகற்றக்கூடாது.

* வாக்குச்சாவடிக்கு அருகில் சிறு குறிப்பு சீட்டுகள் வழங்கும் இடத்துக்கு அருகில் சுவரொட்டிகள் ஒட்டவோ, சின்னங்கள் மற்றும் பிற விளம்பரங்கள் செய்யவோ கூடாது.

Comments

Popular posts from this blog

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி