Skip to main content

''பட்ஜெட் நிதி எந்த ‘நிதி’ களின் கைகளுக்கு செல்லப் போகிறதோ?'': ஜெயலலிதா


தமிழக அரசின் பட்ஜெட் தொடர்பாக ஜெயலலிதா இன்று (பிப்ரவரி 5) வெளியிட்ட அறிக்கை:

இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற குறிக்கோள் இல்லாத ஒரு வெத்து வேட்டு அறிக்கையாக அமைந்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக, அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் எடுத்த முடிவிற்கு முற்றிலும் எதிராக, ராகு காலத்தை மனதில் வைத்து, கேள்வி நேரத்தை புகுத்தி, அதற்குப் பிறகு காலை 10.30 மணிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது, கருணாநிதியின் “பகுத்தறிவிற்கு” ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!


2010-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில், 2010-2011 ஆம் ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை 16,222.13 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், இன்று சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில், நிதிப் பற்றாக்குறை 17,607.71 கோடி ரூபாய் அளவுக்கு உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது மட்டுமல்லாமல், 31.3.2011 அன்று தமிழ்நாடு அரசின் மொத்தக் கடன் 1,01,541 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதுதான் கருணாநிதியின் ஐந்தாண்டு கால சாதனை!

தற்போது தமிழக மக்களை முக்கியமாக பாதித்துள்ள பிரச்சினை விலைவாசி உயர்வு.  இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை பற்றி குறிப்பிடாமல், விலை உயர்விற்கான காரணங்களை நிதிநிலை அறிக்கையில் பட்டியலிட்டு இருப்பது வருத்தமளிக்கும் செயலாகும்.

அடுத்த முக்கியமான பிரச்சினை மின்வெட்டு.  சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில், வரும் நிதியாண்டில் 1,400 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கூடுதலாக நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இது குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. இதன் மூலம் மின்வெட்டு தொடரும் என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது.

விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதை தடுத்து நிறுத்துவது குறித்தும், கரும்பு உற்பத்தி தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்து வருவதை சீர் செய்வது குறித்தும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாதது வேதனை அளிக்கும் செயல் ஆகும்.

வீட்டு வசதித் திட்டம் குறித்து இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தம்பட்டம் அடிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தி.மு.க. அரசுக்கு இருந்தால், முழுச் செலவையும் அரசே ஏற்றுக் கொண்டு இந்தத் திட்டத்தை செயல்படுத்தி இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதை வீட்டு வசதித் திட்டம் என்று அறிவிக்க முடியும்.  இப்பொழுது இந்த அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தை “ஏழை மக்களை கடனாளிகளாக ஆக்கும் திட்டம்” என்று சொல்வதுதான் பொருத்தமாகும்.

“முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் பணி இந்த ஆண்டே தொடங்கப்படும்” என்ற கேரள அரசின் அறிவிப்பு தொடர்பான மேல் நடவடிக்கை குறித்தோ, திருப்பூர் சாய, சலவை ஆலைகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கை குறித்தோ, மேட்டூர் அணையில் நீர் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் கர்நாடக அரசு மீது உறுதியான நடவடிக்கை எடுப்பது குறித்தோ, மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு குறித்தோ ஏதும் குறிப்பிடப்படவில்லை. இதிலிருந்து தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்பதிலும், தொழில்களை பாதுகாப்பதிலும் இந்த அரசுக்கு அக்கறை ஏதுமில்லை என்பது தெளிவாகிறது.

சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில், பாலைப் பதப்படுத்தும் வகையிலும், மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருள்களை உற்பத்தி செய்ய ஏதுவாகவும், 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை ஆவின் நிறுவனம் நவீனமயமாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  ஆனால், இதற்கான பணிகள் இன்று வரை துவக்கப்படவில்லை.  இது குறித்து இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.  தற்போதைய உண்மை நிலை என்னவென்றால், ஆவின் பால் வரத்தில் ஆறு லட்சம் லிட்டர் அளவுக்கு சரிவு ஏற்பட்டு, இதன் விளைவாக ஆவின் பாலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பது தான்.

தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதும், சட்ட விரோதக் கும்பலின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும், மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்தான சூழ்நிலை நிலவுகிறது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.  இந்தச் சூழ்நிலையில் சட்டம் ஒழுங்கை காக்க 3,239 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த நிதி எந்த ‘நிதி’ களின் கைகளுக்கு செல்லப் போகிறதோ?

மொத்தத்தில், வளர்ச்சித் திட்டங்கள் மூலம் எழுச்சிப் பாதையில் செல்ல வேண்டிய தமிழகம், கவர்ச்சித் திட்டங்கள் மூலம் வறட்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதைத் தான் இந்த நிதிநிலை அறிக்கை படம் பிடித்துக் காட்டி இருக்கிறது.

Comments

Popular posts from this blog

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி