Skip to main content

பிரத‌ம‌ரை ச‌ந்தித்தார் க‌ருணாநிதி

நேற்று சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை விமான நிலையத்தில் முதல்வர் கருணாநிதி வரவேற்க செல்ல‌வில்லை. அவ‌ருக்கு ப‌திலாக‌ துணை முத‌ல்வ‌ர் ஸ்டாலின்தான் ஏர்போர்ட் சென்றார். இர‌வு க‌வ‌ர்ன‌ர் மாளிகையில் த‌ங்கிய‌ பிர‌த‌ம‌ரைக்கூட‌ க‌ருணாநிதி போய் பார்க்காத‌ நிலையில் இன்று (ஜ‌ன‌வ‌ரி 3) காலை திடிரென்று ம‌ன்மோக‌ன் சிங்கை க‌ருணாநிதி ச‌ந்தித்தார்.

நேற்றைய தினம் வைரமுத்துவின் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கருணாநிதி நீண்ட நேரம் கலந்து கொண்டிருந்தபடியால், அங்கு செய்யப்பட்டிருந்த அதிக ஒளி ஏற்பாட்டின் காரணமாக கண்களில் நீர் வடிந்து கொண்டே இருந்ததால், பிரதமரை வரவேற்கவும், சந்திக்கவும் திட்டமிட்டிருந்தபடி செல்ல இயலாத நிலையேற்பட்டதால், பிரதமரை இன்று காலையில் சந்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலையில் கருணாநிதி டாக்டர் அகர்வால் மருத்துவமனைக்குச் சென்று, கண்ணுக்கு சிகிச்சை செய்து கொண்டு, நேரடியாக ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். பிரதமர் மன்மோகன் சிங் கருணாநிதியை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று, அரை மணி நேரத்திற்கு மேல் உரையாடினார். சந்திப்புக்குப் பின்னர் முதலமைச்சர் புறப்படும் நேரத்திலும் பிரதமர் கார் வரையில் வந்திருந்து வழியனுப்பி வைத்தார்.

இந்த‌ ச‌ந்திப்புக்கு பிற‌கு க‌ருணாநிதி அளித்த‌ பேட்டி:

கேள்வி: பிரதமரைச் சந்தித்த போது என்னென்ன விஷயங்கள் குறித்துப் பேசினீர்கள்?

பதில்: தமிழகத்தில் ஏற்பட்ட பெரு மழை, வெள்ளம் பற்றிப் பேசினோம். மீண்டும் மழை வரக் கூடும் என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு நிவாரண நிதியை நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசு இதற்கு விரைவில் நிதி உதவி அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.

கேள்வி: நேற்றைய தினம் பிரதமரைப் பார்க்க நீங்கள் செல்லாததால் நகரில் பெரிய பரபரப்பு ஏற்பட்டதே?

பதில்: நேற்றைய தினம் நான் ஏற்கனவே ஒப்புக் கொண்ட ஒரு நிகழ்ச்சி இருந்தது. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி. அதிலே பல பேர் பேச வேண்டியிருந்தது. அதனால் தாமதமாகி விட்டது. சந்திக்க முடியவில்லை. இன்று சந்தித்தேன்.

கேள்வி: பிரதமர் அடையார் பூங்காவைத் திறந்து வைக்காதது, தி.மு.கழகத்திற்கு, தமிழக அரசிற்கு வருத்தமாக இருக்கிறதா?

பதில்: வருத்தம் ஒன்றும் கிடையாது. பொருத்தமான காரணங்களைத்தானே சொல்லியிருக்கிறார்கள்.

கேள்வி: காங்கிரஸ் - தி.மு.க. உறவு எப்படி இருக்கிறது?

பதில்: எனக்கும் உங்களுக்கும் இருக்கிற அளவு இருக்கிறது.

Comments

தி.மு.க. உறவு எப்படி இருக்கிறது?

இருக்கிற அளவு இருக்கிறது



இதையும் படிச்சி பாருங்க

அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...!

Popular posts from this blog

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி