Skip to main content

Posts

Showing posts from September, 2018

விறுவிறு புதிய சட்டப் பேரவை விழா... 'ஆடு பாம்பே விளையாடு பாம்பே!'

இ ந்திய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா, தமிழக முதல்வர் கருணாநிதி என்று மேடையில் முப் பெரும் அரசியல் தலைகள் சேர்ந்திருக்க... தமிழகத்தின் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகத் திறப்பு விழா, ஜம்மென்று நடந்து முடிந் திருக்கிறது..! மொத்தம் இரண்டு பிளாக்கு கள் கொண்டது இந்த வளாகம். சட்டசபைக்கு ஒன்று... தலைமைச் செயலகத்துக்கு ஒன்று! இதில் சட்டசபை கட்டட வளாகத்தில்தான் விழா. வெளியே நீட்டியபடி இருந்த கம்பிகளும், சிமென்ட் பூச்சு இல்லாத சுவர்களும் 'இன்னும் வேலை முடியவில்லை' என்பதை சொல்லிக் கொண்டே இருந்தன. சில இடங்களில் துணி களைக் கட்டி மறைத்திருந்தார்கள். 'புதிய சட்டசபை திறப்பு விழாவுக்குப் புறப்பட்டு வா...' என்று உடன்பிறப்புக்கு கருணாநிதி கடிதம் எழுதி அழைத்திருக்க... ஏராளமான தொண்டர்கள் குவிந்துவிட்டனர். ஆனால், பிரதமர் வருகையால் அவர்களை போலீஸ் உள்ளே விடாமல் விரட்டியது. உடன் பிறப்புகள் உஷ்ணம் காட்டியும், காக்கிகள் அசரவில்லை! மேடையே பிரமாண்ட செட் போல போடப்பட்டிருக்க... மேடைக்கு முன்பு நீதிபதிகள், மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.எல்.ஏ-

அரசியல் தீ பற்ற வைத்த படம் !

ம காத்மா காந்தி, ராஜாஜி, திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், பெரியார், அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், காயிதேமில்லத் முகம்மது இஸ்மாயில், எம்.ஜி.ஆர் ஆகிய 10 பேர் படங் களுக்கு மட்டும் தமிழக சட்டசபையில் நிரந்தர இடம் உண்டு. இந்த வரிசையில் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தையும் வைக்க, தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, 'கருணாநிதியின் படத்தை வைக்கக் கூடாது' என்று காட்டமாக அறிக்கை விட்டிருக்கும் ஜெயலலிதா, ''அடுத்து அதி.மு.க. ஆட்சிக்கு வரும்போது இந்த மரபுமீறிய செயல்கள் மாற்றி அமைக்கப்படும்!'' என்றும் காரம் வீசியிருக் கிறார். இதுபற்றி சட்டசபை செயலக வட்டாரத்தில் விசாரித்தோம். ''சட்டசபையில் முதன்முதலாக காந்தி உருவப்படத்தை, ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்தபோது 24.7.1948-ல் திறந்து வைத்தார். 'வாழ்க நீ எம்மான்' என்கிற பாடலை எம்.எஸ்.சுப்பு லட்சுமி பாட... சர்.முத்தையா செட்டியார் வழங்கிய காந்தி படம் திறக்கப்பட்டது. பிறகு ராஜாஜியின் படத்தை பிரதமராக இருந்த நேரு திறந்தார். அதைத்தொடர்ந்து, திருவள்ளுவ

ம.தி.மு.க. மாநாடும் தீவு ஆராய்ச்சியும்!

இ து 'மாநாடு சீஸன்'... கடலூரில் தி.மு.க-வின் மகளிர் அணி மாநில மாநாடு முடிந்த நிலையில், சென்னை மண்டல மாநாட்டை நிறைய நெருக்கடிகளைத் தாண்டி, ஜூன் 18-ம் தேதி சென்னைத் தீவுத் திடலில் நடத்தி முடித்திருக்கிறது ம.தி.மு.க. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை யிலிருந்து தீவுத் திடல் நோக்கிப் புறப்பட்ட தொண்டரணிப் படையை தனிமேடையில் நின்று சல்யூட் வைத்து ரசித்தார் வைகோ. ம.தி.மு.க. கொடிகளுடன் நடந்த தொண்டர் கள், 'லெஃப்ட் ரைட்'டுக்குப் பதிலாக 'இடம் வலம்' என்று தமிழில் சொல்லிக்கொண்டு மிடுக்கு நடை போட்டதைப் பொதுமக்கள் ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள். அணிவகுப்பு, தீவுத் திடல் வந்து சேர்ந்ததும் மாநாடு களை கட்ட ஆரம்பித்தது. தலைமைச் செயலகம் மாடலில் சீரியல் விளக்குகள் மின்னிய பந்தலில், காக்கிச் சட்டைகளுக்கு வேலை வைக்காமல் கட்டுக்கோப்பாக இருந்தனர் தொண்டர்கள். கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் வழக்கம் போலவே வெளுத்துக் கட்ட ஆரம்பித்தார். ''பதினான்கு வருஷ வனவாசத்துக்குப் பிறகு ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது இதிகாச வரலாறு. ம.தி.மு.க. 14 ஆண்டுகள் கடந்து 15-ம் ஆண்டில் அடியெடு

கடலூர் தி.மு.க. மாநாடு... கனிமொழியின் உயர்ந்த கைகள்!

ஏ ற்கெனவே இரண்டுமுறை தள்ளிப்போன தி.மு.க. மகளிர் அணி மாநாடு ஒருவழியாக கோலாகலமாக கடலூரில் நடந்து முடிந்துவிட்டது. 'கனிமொழியை அரசியலில் முன்னிலைப்படுத்துவதற்காக நடத்தப் படுகிறது' என்று பேசப்பட்ட இந்த மாநாடு மு.க.ஸ்டாலின் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கலந்துகொள்ளாததை அடுத்து பல யூகங்களை கட்சித் தொண்டர்கள் மனதில் விதைத்துவிட்டு முடிந்திருக்கிறது. இந்நிலையில், மகளிர் அணி மாநாடு ஜூ.வி-யின் பார்வையில்... கண்ணீர்விட்ட வசந்தி கணேசன்... மாநாட்டு முகப்பில் இருக்கும் கொடியை கருணாநிதி தொட்டுக் கொடுத்த பிறகு வசந்தி கணேசன் அதை ஏற்றுவதாகத் திட்டம். கருணாநிதி வருவதற்கு முன்பே கொடியை ஏற்றி இறக்கி ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த போது... அது வானில்  பறந்து கொண்டிருந்த நிலையில்... மாநாட்டுக்கு வந்துவிட்டார் கருணாநிதி! 'தலைவர் எடுத்து கயிற்றைத் தராமலே தன்னிச்சையாக கொடியேற்றியிருக்கிறீர்கள். இதற்காக நான் வருத்தப் படவில்லை. பெண்கள் எப்போதுமே தன்னிச்சையாக செயல்படவேண்டும். அந்தத் துணிவு வந்திருக்கிறது என்பதற்காகப் பெருமைபடுகிறேன்' என்று தன் பேச்சில் கருணாநிதி தனக்கே உரிய பாணியில் இதுபற்றி சொல்