Skip to main content

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: விஜயகாந்த்

''பெண்கள் மீதும், தாய்மார்கள் மீதும் நான் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவன். என்னைப் பற்றி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பழி சொல்லி அறிக்கை விட்டிருப்பதை நான் ச‌ற்றும் எதிர்பார்க்கவில்லை.

இரவு பகல் பாராமல் கடந்த ஓராண்டு காலமாக பொதுமக்களையும், தொண்டர்களையும் தமிழ்நாடு முழுவதும் தேர்தலில் நான் சந்தித்துள்ளேன். நான் எப்படிப்பட்டவன் என்பதை பொது மக்கள் நேரிலேயே பார்த்து வருகின்றனர்.



நான் குடித்து விட்டு குளு குளு அறையில் கிடப்பவன் அல்ல. ஊழலை ஒழிப்பதும், வீட்டுக்கு வீடு ரேஷன் பொருள் வழங்குவதும் ஜெயலலிதாவுக்கு வேண்டுமானால் குடிகாரன் பேச்சாகத் தெரியலாம். வீடு தோறும் அரசின் வசதிகளை கொண்டு செல்வது அரசுகளின் கடமை என்பது இந்த நவீன அரசியல் யுகத்தில் கடைப்பிடிக்கப்படுவதுதான். வீடு தோறும் ரேஷன் பொருட்களை வழங்குவது என்பது மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பவருக்கு தெளிவாகும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு இமயம். என்னைக் கருப்பு எம்.ஜி.ஆர். என்று நான் ஒரு போதும் சொல்லிக் கொண்டதில்லை. ஜெயலலிதாவைப் போல மேரி மாதா, அன்னை தெரசா என்ற அந்தஸ்துக்கும் என்னை உயர்த்திக் கொண்டதும் இல்லை. அதை நான் விரும்பவும் இல்லை. எம்.ஜி.ஆர். இல்லையே என்ற ஏக்கத்தில் நாட்டு மக்கள்தான் என்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்று அழைக்கிறார்களே தவிர வேறல்ல. அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பையும், மரியாதையையும், பாசத்தையும் வைத்திருப்பவன் நான். அவர் வாழ்வில் இரண்டற கலந்து வாழ்ந்த ஜானகி ராமச்சந்திரன் இதை நன்கு அறிந்து, எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பிரசார வண்டியை எனக்குப் பரிசாக அளித்துள்ளார். அவர் வாழ்ந்து காட்டிய நெறியில், நான் உழைத்து சம்பாதித்த பணத்தில் ஆண்டு தோறும் என் பிறந்த நாளில் 25 லட்சம் ரூபாய் ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வருகிறேன்.
1992ம் ஆண்டு முதல் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு எனது சொந்தப் பணத்தில் இருந்து ஐம்பதாயிரம் ரூபாய் ஆண்டு தோறும் வழங்கி வருகிறேன். இன்றளவும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ஆசி எனக்கு என்றும் உண்டு. இன்றும் என்றும் அவரையே எனது அரசியல் ஆசானாக கொண்டுள்ளேன்.

ஆளுநர் சென்னா ரெட்டியையே கொச்சைப்படுத்திய ஜெயலலிதா, என்னைப் பற்றி அவதூறாகப் பேசுவதில் எந்த வியப்பும் இல்லை. யார் என் மீது சேற்றை வாரி வீசினாலும், அவற்றை சந்தனமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை நான் பெற்றிருக்கிறேன். இதுபோன்ற விமர்சனத்தை தவிர்த்து ஆக்கப்பூர்வமான ஆரோக்கியமான மக்கள் மதிக்கத்தக்க அரசியல் ரீதியான விமர்சனங்களையும், அறிக்கைகளையும் என்றைக்குமே நான் வரவேற்பேன்.

எம்.ஜி.ஆர். கனவு பற்றிப் பேசும் ஜெயலலிதா அவரது கனவுகளை இரண்டு முறை முதல்வராக இருந்த போது நிறைவேற்றாதது ஏன்? எம்.ஜி.ஆர். இதய தெய்வம் என்றும், நிறுவனத் தலைவர் என்றும், பாரத ரத்னா என்றும் தங்கள் வாயால் புகழ வைத்ததையே எனக்குக் கிடைத்த பெரும் பேறாக கருதுகிறேன். என்னால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரை இத்தனை தடவை உச்சரித்தீர்களே, அதற்காக எனது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை தி.மு.க. ஆட்சியை அகற்றுவதே குறிக்கோள். ஜெயலலிதா போன்றோர் நம் மீது பாய்வது திசை திருப்பும் முயற்சி. இந்த சதி வலையில், சிக்காமல், முயல் வேட்டையை விட வேல் ஏந்திச் செல்லும் யானை வேட்டையே மேல் என்ற அடிப்படையில் ஜனநாயகத்தை காப்பாற்ற கழகத் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.'' -
ஜெயலலிதாவின் குடிகாரன் அறிகைக்கு விஜயகாந்த் கொடுத்த பதிலடி அறிக்கை (2006 அக்டோபர் 24)

''ஜெயலலிதா எல்லாம் தெரிந்த மாதிரி பேசுகிறாரே அவர் ப‌க்க‌த்தில் இருந்து ஊற்றிக் கொடுத்தாரா?'' என்றெல்லாம் பிற‌கு காட்ட‌மாக‌ கேட்டார் விஜ‌ய‌காந்த். அந்த காட்டம் இப்போதும் இருக்கிறதா? தே.மு.தி.க‌. கப்ப‌ல் போய‌ஸ் கார்ட‌னில் க‌ரை ஒதுங்கியிருக்கிற‌து. சிரஞ்சீவிக்கு வந்த நிலை கேப்டனுக்கும் வந்துவிட்டதோ.

Comments

MUTHU said…
Yavaram Nalla Pogutham
இது போல் மருத்துவர் ஐயா கலைஞரைப் பற்றி சென்ற தேர்தலின் போது பேசியதும், காங்கிரசு பற்றி கலைஞர் பல தேர்தலில் பேசியதும், எடுத்து எழுதிக் கொண்டிருந்தால் ஆயிரம் பதிவுகள் போதுமானதல்ல.

Popular posts from this blog

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி