Skip to main content

பிரதமரை வரவேற்க‌ கருணாநிதி போகாதது ஏன்?

சென்னையில் ஜனவரி 3ம் தேதி நடக்கும் அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஞாயிற்றுக் கிழமை இரவு 7.30 மணிக்கு சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை வரவேற்க முதல்வர் கருணாநிதி செல்லவில்லை. துணை முதல்வர் ஸ்டாலின்தான் பிரதமரை வரவேற்றார். மன்மோகன் சிங் ஏர்போர்ட்டிற்கு வந்த போது கவிஞர் வைரமுத்து புத்தக வெளியிட்டு விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார்.




அடையாறு பூங்கா திறப்பு விழாவிற்காக பிரதமர் மன்மோகன் சிங் தேதி எல்லாம் கொடுத்த நிலையில் அந்த நிகழ்ச்சி இரண்டு நாட்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது. மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைக்காததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு காரணம் சொன்னது.  ஸ்பெக்டரம் விவகாரத்தில் காங்கிரஸுக்கும் தி.மு.க.வுக்கு இடையே உரசல்கள் வெடித்து வரும் நிலையில் அடையாறு பூங்கா திறப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது அரசியலில் அதிர்வலைகளை கிளம்ப்பி இருக்கிறது. இதற்கு பதிலடியாகதான் என்னவோ பிரதமரை வரவேற்க முதல்வர் கருணாநிதி ஏர்போட்டிற்கு செல்லாமல் புறக்கணித்திருக்கிறார். சென்னை வந்த பிரதமர் இரவு கவர்னர் மாளிகையில்தான் தங்கினார். அவரைக்கூட போய் நேரில் கருணாநிதி சந்திக்கவில்லை.  இதனால் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்குள் புகைச்சல்கள் அதிகமாகி வருகின்றன. இப்போது நடந்து வரும் சம்பவங்கள் எல்லாம் கூட்டணிக்கு வேட்டு வைப்பது போலவே இருக்கின்றன.

Comments

அருமையான பதிவு

இதையும் படிச்சி பாருங்க

எழுந்து நட லட்சியப் பாதையில்...
அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...

அன்புடன்,

வலைச்சரம் நிர்வாகம்.
ஏன் வரவேற்கப் போகலையா?

அது ஒன்னுமில்லை. தூக்கிட்டுப்போக ஆள் இருந்துருக்காது.... ஐ மீன் நடக்க முடியாதவரை......
பேரரசர் போனால் என்ன இளவரசர் போனால் என்ன?

மன்மோகன் வெறும் சொம்புதானே...
சாரி அம்புதானே...அதுக்கு இளவரசர் சென்றதே அதிகம். இளவரசர் உடன் இருக்கும் மாமா சுப்ரமணியம்...
இல்லை மா.சுப்ரமணியம் சென்றாலே போதும்.

நானாக இருந்தால் மீனம்பாக்கம் வார்டு கவுன்சிலரை மட்டுமே அனுப்பியிருப்பேன்.மன்மோகனுக்கு தனது தராதரம் தெரியாதா?

Popular posts from this blog

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா

திருச்சி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. மணப்பாறை தொகுதி மணப்பாறை தாலுக்கா (பகுதி) புதூர், வையமலைப்பாளையம், வெள்ளாளப்பட்டி, அனியாப்பூர், வீரமலை (ஆர்.எப்), சீகம்பட்டி, உசிலம்பட்டி, பொய்கைமலை (ஆர்.எப்), வடுகப்பட்டி, வேங்கைக்குறிச்சி, அமையபுரம், அமையபுரம் (ஆர்.எப்), நல்லாம்பிள்ளை, ஜை.கோவில்பட்டி, வி.பெரியப்பட்டி, தவளவீரம்படி, முகவனூர் (வடக்கு), முகவனூர் (தெற்கு), செக்கனம், பழையங்கோட்டை, ஐ.ரெட்டியாப்பட்டி, செட்டியாப்பட்டி, மலையாண்டிப்பட்டி, பொய்கைப்பட்டி, சாம்பட்டி, சுலியாப்பட்டி, ஆதம்பட்டி, எப்.கீழையூர், தொட்டியப்பட்டி, தாதனூர், ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகம்பட்டி, பண்ணப்பட்டி, (கிழக்கு), பண்ணப்பட்டி (மேற்கு), அயன்ரெட்டியாப்பட்டி, வையம்பட்டி, மூக்குரெட்டியாப்பட்டி, குமாரவாடி, நடுப்பட்டி, புதுவாடி, புதுக்கோட்டை, பொன்னம்பலப்பட்டி, எலமணம், கண்ணூத்து, குமரிக்கட்டிமலை (ஆர்.எப்), கருப்பூர், புத்தாநத்தம் திருநெல்லிப்பட்டி, வெள்ளையக்கோன்பட்டி, பிராம்பட்டி (வடக்கு), பிராம்பட்டி (தெற்கு), தேனூர், அயன்புதுப்பட்டி, ஊத்துக்குளி, வேம்பனூர், கண்ணுக்குழி, கொடும்பப்பட்டி, பல்லக்குறிச்சி, கலிங்கப்பட்டி கிழக்கு, பழுவஞ்சி மேற்கு, முத்தாழ்வார்பட்டி,