Skip to main content

பிரத‌ம‌ரை ச‌ந்தித்தார் க‌ருணாநிதி

நேற்று சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை விமான நிலையத்தில் முதல்வர் கருணாநிதி வரவேற்க செல்ல‌வில்லை. அவ‌ருக்கு ப‌திலாக‌ துணை முத‌ல்வ‌ர் ஸ்டாலின்தான் ஏர்போர்ட் சென்றார். இர‌வு க‌வ‌ர்ன‌ர் மாளிகையில் த‌ங்கிய‌ பிர‌த‌ம‌ரைக்கூட‌ க‌ருணாநிதி போய் பார்க்காத‌ நிலையில் இன்று (ஜ‌ன‌வ‌ரி 3) காலை திடிரென்று ம‌ன்மோக‌ன் சிங்கை க‌ருணாநிதி ச‌ந்தித்தார்.

நேற்றைய தினம் வைரமுத்துவின் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கருணாநிதி நீண்ட நேரம் கலந்து கொண்டிருந்தபடியால், அங்கு செய்யப்பட்டிருந்த அதிக ஒளி ஏற்பாட்டின் காரணமாக கண்களில் நீர் வடிந்து கொண்டே இருந்ததால், பிரதமரை வரவேற்கவும், சந்திக்கவும் திட்டமிட்டிருந்தபடி செல்ல இயலாத நிலையேற்பட்டதால், பிரதமரை இன்று காலையில் சந்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலையில் கருணாநிதி டாக்டர் அகர்வால் மருத்துவமனைக்குச் சென்று, கண்ணுக்கு சிகிச்சை செய்து கொண்டு, நேரடியாக ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். பிரதமர் மன்மோகன் சிங் கருணாநிதியை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று, அரை மணி நேரத்திற்கு மேல் உரையாடினார். சந்திப்புக்குப் பின்னர் முதலமைச்சர் புறப்படும் நேரத்திலும் பிரதமர் கார் வரையில் வந்திருந்து வழியனுப்பி வைத்தார்.

இந்த‌ ச‌ந்திப்புக்கு பிற‌கு க‌ருணாநிதி அளித்த‌ பேட்டி:

கேள்வி: பிரதமரைச் சந்தித்த போது என்னென்ன விஷயங்கள் குறித்துப் பேசினீர்கள்?

பதில்: தமிழகத்தில் ஏற்பட்ட பெரு மழை, வெள்ளம் பற்றிப் பேசினோம். மீண்டும் மழை வரக் கூடும் என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு நிவாரண நிதியை நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசு இதற்கு விரைவில் நிதி உதவி அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.

கேள்வி: நேற்றைய தினம் பிரதமரைப் பார்க்க நீங்கள் செல்லாததால் நகரில் பெரிய பரபரப்பு ஏற்பட்டதே?

பதில்: நேற்றைய தினம் நான் ஏற்கனவே ஒப்புக் கொண்ட ஒரு நிகழ்ச்சி இருந்தது. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி. அதிலே பல பேர் பேச வேண்டியிருந்தது. அதனால் தாமதமாகி விட்டது. சந்திக்க முடியவில்லை. இன்று சந்தித்தேன்.

கேள்வி: பிரதமர் அடையார் பூங்காவைத் திறந்து வைக்காதது, தி.மு.கழகத்திற்கு, தமிழக அரசிற்கு வருத்தமாக இருக்கிறதா?

பதில்: வருத்தம் ஒன்றும் கிடையாது. பொருத்தமான காரணங்களைத்தானே சொல்லியிருக்கிறார்கள்.

கேள்வி: காங்கிரஸ் - தி.மு.க. உறவு எப்படி இருக்கிறது?

பதில்: எனக்கும் உங்களுக்கும் இருக்கிற அளவு இருக்கிறது.

Comments

தி.மு.க. உறவு எப்படி இருக்கிறது?

இருக்கிற அளவு இருக்கிறது



இதையும் படிச்சி பாருங்க

அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...!

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...