Skip to main content

2006 தேர்தல்: அதிகபட்ச வாக்குப் பதிவு!


கடந்த 2006 சட்டசபைத் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக மதுரை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தலா 73 சதவீத வாக்குகள் வரை பதிவாகின. ஜெயலலிதா போட்டியிட்ட ஆண்டிப்பட்டியை
உள்ளடக்கிய தேனி மாவட்டத்தில்தான் குறைந்தபட்சமாக 57 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஆண்டிப்பட்டி தொகுதியில் 65 சதவீத வாக்குகளும் கருணாநிதி போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியில் 62 சதவீத வாக்குகளும் பதிவானது. நடிகர் விஜயகாந்த் போட்டியிட்ட விருத்தாச்சலம் தொகுதியில் 71 சதவீத வாக்குகள் பதிவானது. ஸ்டாலின் தொகுதியான ஆயிரம் விளக்கில் 60 சதவீதமும், ஓ. பன்னீர் செல்வத்தின் பெரியகுளத்தில் 63 சதவீதமும் பேராசிரியர் அன்பழகனின் துறைமுகம் தொகுதியில் 57 சதவீதமும், ஆற்காடு வீராசாமியின் அண்ணாநகர் தொகுதியில் 58 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சென்னையின் பிற தொகுதிகளான ராயபுரத்தில் 69 சதவீதமும், ஆர்.கே. நகரில் 65 சதவீதமும், பூங்கா நகரில் 62 சதவீதமும், பெரம்பூரில் 59 சதவீதமும், எழும்பூரில் 58 சதவீதமும், தி.நகரில் 55 சதவீதமும் திருவல்லிக்கேணியில் 55 சதவீதமும், மைலாப்பூரில் 63 சதவீதமும், சைதாப்பேட்டையில் 65 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. சென்னையைப் பொறுத்தவரை புரசைவாக்கம் தொகுதியில்தான் அதிகபட்சமாக 71 சதவீத வாக்குகள் பதிவாகின.

தமிழகத்தின் மிகப் பெரிய தொகுதியான வில்லிவாக்கத்தில் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2001 தேர்தலைவிட இது 20 சதவீதம் கூடுதலாகும். இந்தத் தொகுதியில் 9.5 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது பெரிய தொகுதியான தாம்பரத்தில் 65 சதவீத வாக்குகள் பதிவாகின.

Comments

தேர்தல் ஜீரம் பற்றிக் கொள்ளூம் போலும் உங்கள் இடுமையை படிக்கும் போது.. வாழ்த்துக்கள்
தோழர் வருகைக்கு நன்றி. பின்னுட்டங்களுக்கு பதில் சொல்ல நேரம் கிடைக்கவில்லை. கிட்டதட்ட தேர்தல் மேகங்கள் சூழ ஆரம்பித்துவிட்டன. பிப்ரவரி மத்தியில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம். தேர்தல் தொடர்பான எல்லா விஷயங்களையும் எவ்வளவு முடியுமோ அதற்குள் அடக்கிவிட முயன்று கொண்டிருக்கிறேன்.

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா...