Skip to main content

எதிரெதிர் முகாம்களில் நண்பர்கள்!

தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் பா.ம.க.வின் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகளின் திருமாவளவன், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் சேதுராமன் ஆகியோர் முக்கிய தூண்கள். 2006 சட்டசபைத் தேர்தலில் இந்த நட்பு தொடர முடியாமல் போனது. தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளை சேர்க்க தேர்தல் நேரத்தில் முயற்சி எடுத்தார் ராமதாஸ். ‘‘பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் ஸீட்டில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடலாம்’’ என்றார் கருணாநிதி. இதனை விரும்பாத திருமாவளவன், அ.தி.மு.க. கூட்டணியில் ஐக்கியமானார். தேர்தல் நெருங்கும் வரையில் தி.மு.க. கூட்டணியில் இருந்த சேதுராமன், தேர்தலில் போட்டியிடச் சொல்லி தன்னை கருணாநிதி வற்புறுத்தியதாக சொல்லி தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகினார் சேதுராமன். தமிழுக்காக கைகோர்த்தவர்கள், தேர்தலில் எதிர் முகாம்களில் களத்தில் நின்றனர்.


கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அப்படியே ரிவர்ஸ் ஆனது. ராமதாஸ் போயஸ்கார்டனிலும் திருமாவளவன் கோபாலபுரத்திலும் ஐக்கியமாகி இருந்தார்கள். வரும் சட்டசபைத் தேர்தலில் ராமதாஸ் தி.மு.க. கூட்டணியில் இணைந்தால் எதிரெதிர் துருவங்க்ள் ஒரே கூட்டணிக்குள்.

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...