Skip to main content

‘‘நயினா ஒண்டிக்கு ஒண்டி வர்றீயா...’’ !

2006 சட்டசபைத் தேர்தலில் எதிரொலித்த முக்கியமான கோஷம் இது. அந்த தேர்தலில் வழக்கம் போல சென்னையில்தான் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் கருணாநிதி. சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் நடந்த அந்த பிரச்சார கூட்டத்தில்தான் ‘‘நயினா ஒண்டிக்கு ஒண்டி வர்றீயா?’’ என்று சீறினார் தயாநிதி மாறன்.



தேர்தல் நெருக்கம் வரையில் கோபாலபுரத்தில் இருந்துவிட்டு அதிரடியாக போயஸ் கார்டனுக்கு தாவி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் வைகோ. ‘‘23 தொகுதிகள் கேட்டோம் தரவில்லை. அதனால் கூட்டணி மாறினோம்’’ என்று கூட்டணி தாவலுக்கு பொழிப்புரை கொடுத்தார் வைகோ. இதனால் தி.மு.க. தலைமை ஏக கொதிப்பில் இருந்தது. புரசைவாக்கம் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் எதிரொலித்தது. வைகோவின் பெயரை சொல்லாமலேயே ‘‘நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்துவிட்டார் தலைவர்’’ என்று சொல்லி சீறினார் தயாநிதி மாறன். அந்த மேடையில் இருந்த தா.பாண்டியன் ‘‘தயாநிதி மாறன் தடம்புரண்டு பேசக்கூடிய நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்’’ என்று சொல்லி ‘‘தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியின் அராஜகங்களை சொல்ல தயாநிதி மாறனை கதாநாயகனாகக் கொண்டு மனோகரா திரைப்படம் எடுத்தால் தி.மு.க. கூட்டணி பிரசாரமே செய்ய வேண்டாம்’’ என்றார். தா.பாண்டியன் அப்போது தி.மு.க. கூட்டணியில் இருந்தார்.

இதற்கு அந்த கூட்டத்திலேயே பதில் சொன்ன கருணாநிதி ‘‘மனோகரா திரைப்படம் எடுத்தால் வசந்தசேனைக்கு எங்கே போவது. தா. பாண்டியன் பேசியதை தயாநிதி மாறன், பாராட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மத்திய அமைச்சராக இருப்பவர் இப்படி பேசக் கூடாது. கோபம் வராவிட்டால் அவரது இளமைக்கு அர்த்தம் இல்லை. வாலிபத் துடிப்பு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பெரியார், அண்ணா பாசறையில் பயிற்சி பெற்றவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்’’ என்றார்.

Comments

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

சேலம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கங்கவல்லி (தனி) தொகுதி கங்கவல்லி தாலுக்கா, ஆத்தூர் தாலுக்கா (பகுதி) ஊனத்தூர், வேப்பநந்தம், வரகூர், சிறுவாச்சூர், மணிவழுதான், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சார்வாய், தேவியாக்குறிச்சி, தலைவாசல், பட்டுத்துறை, நாவக்குறிச்சி, புத்தூர், நத்தக்கரை, பெரியேரி, ஆறகளுர், தியாகனூர், ஆராத்தி அக்ரஹாரம், மும்முடி, காமக்காபாளையம், வடகுமரை, தென்குமரை, சாத்தப்பாடி, பனவாசல், நாவலூர், சித்தேரி, கோவிந்தம்பாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் கிராமங்கள்.

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி...