Skip to main content

‘‘நயினா ஒண்டிக்கு ஒண்டி வர்றீயா...’’ !

2006 சட்டசபைத் தேர்தலில் எதிரொலித்த முக்கியமான கோஷம் இது. அந்த தேர்தலில் வழக்கம் போல சென்னையில்தான் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் கருணாநிதி. சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் நடந்த அந்த பிரச்சார கூட்டத்தில்தான் ‘‘நயினா ஒண்டிக்கு ஒண்டி வர்றீயா?’’ என்று சீறினார் தயாநிதி மாறன்.



தேர்தல் நெருக்கம் வரையில் கோபாலபுரத்தில் இருந்துவிட்டு அதிரடியாக போயஸ் கார்டனுக்கு தாவி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் வைகோ. ‘‘23 தொகுதிகள் கேட்டோம் தரவில்லை. அதனால் கூட்டணி மாறினோம்’’ என்று கூட்டணி தாவலுக்கு பொழிப்புரை கொடுத்தார் வைகோ. இதனால் தி.மு.க. தலைமை ஏக கொதிப்பில் இருந்தது. புரசைவாக்கம் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் எதிரொலித்தது. வைகோவின் பெயரை சொல்லாமலேயே ‘‘நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்துவிட்டார் தலைவர்’’ என்று சொல்லி சீறினார் தயாநிதி மாறன். அந்த மேடையில் இருந்த தா.பாண்டியன் ‘‘தயாநிதி மாறன் தடம்புரண்டு பேசக்கூடிய நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்’’ என்று சொல்லி ‘‘தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியின் அராஜகங்களை சொல்ல தயாநிதி மாறனை கதாநாயகனாகக் கொண்டு மனோகரா திரைப்படம் எடுத்தால் தி.மு.க. கூட்டணி பிரசாரமே செய்ய வேண்டாம்’’ என்றார். தா.பாண்டியன் அப்போது தி.மு.க. கூட்டணியில் இருந்தார்.

இதற்கு அந்த கூட்டத்திலேயே பதில் சொன்ன கருணாநிதி ‘‘மனோகரா திரைப்படம் எடுத்தால் வசந்தசேனைக்கு எங்கே போவது. தா. பாண்டியன் பேசியதை தயாநிதி மாறன், பாராட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மத்திய அமைச்சராக இருப்பவர் இப்படி பேசக் கூடாது. கோபம் வராவிட்டால் அவரது இளமைக்கு அர்த்தம் இல்லை. வாலிபத் துடிப்பு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பெரியார், அண்ணா பாசறையில் பயிற்சி பெற்றவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்’’ என்றார்.

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...