Skip to main content

‘‘நயினா ஒண்டிக்கு ஒண்டி வர்றீயா...’’ !

2006 சட்டசபைத் தேர்தலில் எதிரொலித்த முக்கியமான கோஷம் இது. அந்த தேர்தலில் வழக்கம் போல சென்னையில்தான் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் கருணாநிதி. சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் நடந்த அந்த பிரச்சார கூட்டத்தில்தான் ‘‘நயினா ஒண்டிக்கு ஒண்டி வர்றீயா?’’ என்று சீறினார் தயாநிதி மாறன்.



தேர்தல் நெருக்கம் வரையில் கோபாலபுரத்தில் இருந்துவிட்டு அதிரடியாக போயஸ் கார்டனுக்கு தாவி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் வைகோ. ‘‘23 தொகுதிகள் கேட்டோம் தரவில்லை. அதனால் கூட்டணி மாறினோம்’’ என்று கூட்டணி தாவலுக்கு பொழிப்புரை கொடுத்தார் வைகோ. இதனால் தி.மு.க. தலைமை ஏக கொதிப்பில் இருந்தது. புரசைவாக்கம் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் எதிரொலித்தது. வைகோவின் பெயரை சொல்லாமலேயே ‘‘நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்துவிட்டார் தலைவர்’’ என்று சொல்லி சீறினார் தயாநிதி மாறன். அந்த மேடையில் இருந்த தா.பாண்டியன் ‘‘தயாநிதி மாறன் தடம்புரண்டு பேசக்கூடிய நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்’’ என்று சொல்லி ‘‘தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியின் அராஜகங்களை சொல்ல தயாநிதி மாறனை கதாநாயகனாகக் கொண்டு மனோகரா திரைப்படம் எடுத்தால் தி.மு.க. கூட்டணி பிரசாரமே செய்ய வேண்டாம்’’ என்றார். தா.பாண்டியன் அப்போது தி.மு.க. கூட்டணியில் இருந்தார்.

இதற்கு அந்த கூட்டத்திலேயே பதில் சொன்ன கருணாநிதி ‘‘மனோகரா திரைப்படம் எடுத்தால் வசந்தசேனைக்கு எங்கே போவது. தா. பாண்டியன் பேசியதை தயாநிதி மாறன், பாராட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மத்திய அமைச்சராக இருப்பவர் இப்படி பேசக் கூடாது. கோபம் வராவிட்டால் அவரது இளமைக்கு அர்த்தம் இல்லை. வாலிபத் துடிப்பு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பெரியார், அண்ணா பாசறையில் பயிற்சி பெற்றவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்’’ என்றார்.

Comments

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா...