Skip to main content

2006 தேர்தல் கவர்ச்சி வாக்குறுதிகள்!

அரிசி, கலர் டி.வி., தரிசு நிலம் ஆகியவைதான் 2006 சட்டசபைத் தேர்தலில் முக்கியமான கவர்ச்சி அறிவிப்புகள். ரேஷனில் ரூ. 2-க்கு ஒரு கிலோ அரிசி, ஏழைக் குடும்பங்களுக்கு இலவச கலர் டி.வி., ஏழை விவசாயத் தொழிலாளருக்கு தலா 2 ஏக்கர் தரிசு நிலம் என தேர்தல் அறிக்கையில் அறிவித்தது தி.மு.க. ‘‘இதில் எதுவுமே சாத்தியமில்லை’’ என்று முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அப்போது எதிர்ப்பு காட்டியது. ஆனால், விஜயகாந்த் மட்டும் இதைக் குறை கூறவில்லை. ‘‘ஓர் அரசு நினைத்தால் எதையும் செய்ய முடியும்’’ என்றார்.


இப்படி அவர் சொல்ல காரணம் இருந்தது. ஏனென்றால், ‘ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும். ஏழைக் குடும்பங்களுக்கு 15 கிலோ இலவச அரிசி, வீட்டுக்கொரு சீமை பசு என்று அவரும் தன் பங்குக்கு 2006 தேர்தலில் ஜிகினா அறிவிப்புகளை விட்டார். தி.மு.க.வின் வாக்குறுதிகளை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த அ.தி.மு.க., ‘ரேஷனில் 10 கிலோ அரிசி இலவசம்’ என்று சொன்னது. “அண்ணன் கலைஞர் அவர்கள் ஒரு கிலோ அரிசி ரூ. 2-க்கு எப்படித் தரப் போகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்’’ என்றார் வைகோ. ‘‘இலவச டி.வி.யோடு கேபிள் இணைப்பையும் இலவசமாக தருவார்களா?’’ என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய போது, ‘‘தேவைப்பட்டால் அதையும் தருவேன்’’ என்றார் கருணாநிதி.

தரிசு நிலம் இலவசமாகத் தருவது தொடர்பாகவும் சர்ச்சை எழுந்தது. ‘‘இலவச நிலம் தி.மு.க.வால் தர முடியாது’’ என்று பிரச்சாரத்தில் முழங்கினார் ஜெயலலிதா. ஆனால் இதை அவரது கூட்டணியில் அப்போது இடம்பெற்ற வைகோவும் திருமாவளவனும் எதிர்க்கவில்லை. காரணம் இதே போன்ற வாக்குறுதிகள் அவர்களுடைய தேர்தல் அறிக்கைகளிலும் இடம் பெற்றிருந்தன. ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக ம.தி.மு.க.வும், 5 ஏக்கர் நிலம் தர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளும் சொல்லியிருந்தன.

தேர்தலில் தி.மு.க. ஜெயிக்க காரணமாக இருந்த கதாநாயகன் கவர்ச்சி தேர்தல் அறிக்கைதான். கலர் டி.வி., காஸ் அடுப்பு, சத்துணவில் முட்டை, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்ற அறிவிப்புகள் சக்சஸ் ஆயின. இதில் இலவச நிலம் போன்ற அறிவிப்புகள் ‘புஸ்’ ஆகிப் போனது.

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...