Skip to main content

ம‌.ம.க. தொகுதி உடன்பாடு குழு அமைப்பு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மனிதநேய மக்கள் கட்சி உயர்நிலைக் குழு தலைமை ஒருங்கினைப்பாளர் ஜவாஹிருல்லா தலைமையில் சென்னையில் கூடியது. மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக் குழுவின் உறுப்பினர்களான ஹைதர் அலி, அப்துல் சமது, ரஹமத்துல்லா,ஹாரூன் ரஷீத், ரிபாயி, தமிமுன் அன்சாரி, ஜெயினுல் ஆபிதீன், முகம்மது கவுஸ், சம்சுதீன் நாசர் உமரி, கோவை உமர், பேராசிரியர் ஹாஜாகனி, ஜுனைத், எம்.நாசர், உட்பட பலர் கலந்து கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடுகள் குறித்து அ.தி.மு.க.வுடன் ம.ம.க. சார்பில் பேச்சு வார்த்தை நடத்த ஐவர் குழு அமைக்கப்பட்டது. ஜவாஹிருல்லாஹ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர்அலி, ம.ம.க. பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது, த.மு.மு.க. பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லா, ம.ம.க. பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன்ரசீது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கூட்டணி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, ஊழல் மிகவும் மலிந்துள்ள நிலை தமிழகத்தில் நிலவுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் நாட்டையே அதிர வைத்துள்ளது. ஊழல் மிகுந்த திமுக ஆட்சியை அகற்ற, மனிதநேய மக்கள் கட்சி அங்கம் வகித்து வரும் அ.தி.மு.க. கூட்டணியை மேலும் பலப்படுத்தி, 2011 சட்டமன்றத் தேர்தலில், வெற்றி பெறப் பாடுபடுவது என தீர்மானிக்கப்படுகிறது.

ஜனவரி 31ம் தேதிக்குள் மாநில பொதுக் குழுவை நடத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...