Skip to main content

ம‌.ம.க. தொகுதி உடன்பாடு குழு அமைப்பு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மனிதநேய மக்கள் கட்சி உயர்நிலைக் குழு தலைமை ஒருங்கினைப்பாளர் ஜவாஹிருல்லா தலைமையில் சென்னையில் கூடியது. மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக் குழுவின் உறுப்பினர்களான ஹைதர் அலி, அப்துல் சமது, ரஹமத்துல்லா,ஹாரூன் ரஷீத், ரிபாயி, தமிமுன் அன்சாரி, ஜெயினுல் ஆபிதீன், முகம்மது கவுஸ், சம்சுதீன் நாசர் உமரி, கோவை உமர், பேராசிரியர் ஹாஜாகனி, ஜுனைத், எம்.நாசர், உட்பட பலர் கலந்து கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடுகள் குறித்து அ.தி.மு.க.வுடன் ம.ம.க. சார்பில் பேச்சு வார்த்தை நடத்த ஐவர் குழு அமைக்கப்பட்டது. ஜவாஹிருல்லாஹ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர்அலி, ம.ம.க. பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது, த.மு.மு.க. பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லா, ம.ம.க. பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன்ரசீது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கூட்டணி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, ஊழல் மிகவும் மலிந்துள்ள நிலை தமிழகத்தில் நிலவுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் நாட்டையே அதிர வைத்துள்ளது. ஊழல் மிகுந்த திமுக ஆட்சியை அகற்ற, மனிதநேய மக்கள் கட்சி அங்கம் வகித்து வரும் அ.தி.மு.க. கூட்டணியை மேலும் பலப்படுத்தி, 2011 சட்டமன்றத் தேர்தலில், வெற்றி பெறப் பாடுபடுவது என தீர்மானிக்கப்படுகிறது.

ஜனவரி 31ம் தேதிக்குள் மாநில பொதுக் குழுவை நடத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா...