Skip to main content

இளைஞன் படத்தை பார்த்தார் கருணாநிதி

ஸ்பெக்ட்ரம், அழகிரி முறுக்கல், சென்னை சங்கமம், சட்டசபை, என்று 1.70 லட்சம் கோடிகள் பிரச்சனை இருந்தாலும் சினிமா பார்க்கவும் கருணாநிதிக்கு நேரம் எப்படிதான் கிடைக்கிறதோ தெரியவில்லை. கலைஞரின் வசனத்தில் வெற்றிகரமாக தியேட்டரை விட்டு போடப்போகும் இளைஞன் படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது.


அந்த படத்தை இன்று (ஜனவரி 13) மாலை சென்னை ஃபோர் பிரேம் தியேட்டரில் முதல்வர் கருணாநிதி பார்த்து ரசித்தார். மனைவி தயாளு அம்மாள், துணை முதல்வர் ஸ்டாலின், ஸ்டாலின் மனைவி துர்கா, வைரமுத்து, அமைச்சர் துரைமுருகன், மகன் மு.க.தமிழரசு, மகள் செல்ல்வி, இயக்குநர் அமிர்தம், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், படத்தின் தயாரிப்பாளர் மார்ட்டின், படத்தின் கதாநாயகனும் கவிஞருமான பா.விஜய், உதயநிதி ஸ்டாலின் என்று நிறைய வி.ஐ.பி.கள் படத்தை பார்த்து ரசித்தார்களாம்.

படம் பார்க்கும் படங்கள்


Comments

விலைவாசி உயர்வு,சட்டம் ஒழுங்கு சீர்கேடு,ஆளும்கட்சியினரின் அராஜகம்,வாழ்விழந்த ஈழத்தமிழரின் வயிற்றெறிச்சல்,என தமிழ் இனமே,மனம் தீப்பற்றியெரியும் வேலையில்,பிடில் வாசித்த நீரோ மண்ணன் போல சினிமா கூத்தாடிகளை வைத்து தனக்கு தானே பாராட்டுவிழா நடத்துவதும்,பிராடுகும்பல்களின் தயவில் கதைவசனம் எழுதி படம் எடுப்பதும்,அதை தனக்குதானே ரசிப்பது என தறிகெட்டதனத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டார் கருணாநிதி. விரைவில மக்கள் பதிலுக்கு எழுதபோகும் கதைவசனத்தத கருணாநிதி சந்திக்கதான் வேண்டும்...!

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...