Skip to main content

தேர்தல் பட்டிமன்ற படங்கள்!

தமிழ் புத்தாண்டு முதல் நாள். பொங்கல் திருநாளில் சிறப்பு பட்டி மன்றத்தை ஒளிபரப்ப போகிறது கலைஞர் டி.வி. பட்டிமன்றத்தின் தலைப்பு. தி.மு.க.வின் செல்வாக்கும் புகழும் வளரக் காரணம் கலைஞரின் சமூக தொண்டே! கலை இலக்கிய பணியே! ஆட்சித் திறனே! கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், சுப.வீரபாண்டியன், கி.வீரமணி, ஜெகத்ரட்சகன், பீட்டர் அல்போன்ஸ், என்று அறிவாலயத்தின் ஆஸ்தான வித்துவான்கள்தான் பேசுகிறார்கள். பட்டிமன்றத்தின் நடுவர் இனமான பேராசிரியர் அன்பழகன்தான்


இந்த பட்டிமன்றத்தின் படப்பிடிப்பு இன்று (ஜனவரி 11) மாலை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. பட்டிமன்றத்தை பார்ப்பதற்காக முதல்வர் கருணாநிதியும் வந்தார். அவருடன் ராசாத்தி அம்மாள், துணை முதல்வர் ஸ்டாலின், வைரமுத்து, ஆர்.எம்.வீரப்பன், லியோனி என்று நிறைய பிரபலங்கள் பட்டிமன்றத்தை ரசித்து கேட்டிருக்கிறார்கள். சில மாதங்களில் தேர்தல் வருவதால் இந்த பட்டிமன்றம் அரசியல் சாயம் பூசிக் கொண்டது.

பட்டிமன்ற படங்களையும் பார்த்து ரசியுங்கள்!





Comments

தேர்தல் சிறப்பு வலை பூ ...

உடனுக்குடன் செய்திகளை தர நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கது ...

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா...