Skip to main content

தமிழக‌ சட்டசபை கலாட்டா காட்சி படங்கள்!

தமிழ்நாடு சட்டசபையில் இன்று (ஜனவரி 7) கவர்னர் உரையாற்றினார். ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க. ம.தி.மு.க. கட்சி எம்.எல்.ஏ.கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.கள் கருப்பு துண்டு அணிந்து வந்தார்கள்.



காய்கறி தட்டுகளை ஏந்தியும் காய்கறிகளையும் மாலையாக கழுத்தில் போட்டும் அவர்கள் அவைக்கு வந்தார்கள். கவர்னர் பர்னாலா உரையாற்ற தொடங்கியதுமே கோஷம் எழுப்பினார்கள். தொடர்ந்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். உடனே சபாநாயகர் ஆவுடையப்பன் அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். இதனால் அவையில் கலாட்டா உருவானது. சபை காவலர்கள் எதிர்க்கட்சியினரை குண்டுக்கட்டாக தூக்கி உறுப்பினர்களை வெளியேற்றினர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் வெளியேற்ற முற்பட்ட போது அவருக்கு சபை காவலர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. சபை காவலர்களை அவர் அடிக்க பாய்ந்தார்.

பொள்ளாச்சி ஜெயாராமனை சபை காவலர்கள் வெளியேற்றும் காட்சிகள்





Comments

உங்களது தேர்தல் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.

நல்ல முயற்சி பாராட்டுக்கள்.

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா...