Skip to main content

ஜெயலலிதாவுடன் சோ சந்திப்பு

ஜெய‌ல‌லிதாவை இன்று (ஜ‌ன‌வ‌ரி 1)மாலை போய‌ஸ் கார்ட‌ன் இல்ல‌த்தில் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ சந்தித்து பேசினார்.கடந்த வியாழக் கிழமை அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்திருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. "சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு சில நாட்களில் கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியிடுவேன்" என்று பொதுக்குழுவில் ஜெயலலிதா அறிவித்தார். இந்த நிலையில் ஜெயலலிதாவை சோ சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது. தேர்தல் மூவ், கூட்டணி பற்றிதான் சோவுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியிருக்கலாம் அல்லது பி.ஜே.பி.யை கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ள சொல்லி சோ கேட்டிருக்கலாம் என்று இந்த சந்திப்புக்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன. துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா பொங்கல் தினத்தில் நடைபெறுவது வழக்கம். அந்த விழாவிற்கு ஜெயலலிதாவை சோ அழைத்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
சோ சந்திப்புக்கு பிறகு தமிழக சட்டசபைத் தேர்தல் தொடர்பாக போயஸ் கார்டனில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோச‌னை கூட்ட‌ம் நடைபெற்ற‌து. இந்த கூட்டத்தில், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைப்புச் செயலாளர் செம்மலை, தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் பாலகங்கா, மருத்துவ அணித் தலைவர் மைத்ரேயன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...