Skip to main content

மகளிர் இடஒதுக்கீடு. 2016ல்தான் சாத்தியம்!

நாடாளுமன்றம் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை இன்னும் எத்தனை காலங்களுக்குதான் பேசிக் கொண்டிருக்க போகிறார்களோ தெரியவில்லை. நீண்ட வருடங்களாக சொல்லி வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த 2010 மார்ச் 9ம் தேதி நாடாளுமன்ற ராஜ்ய சபாவில் நிறைவேறியது. இன்னும் மக்களவையில் இந்த மசோதா நிறைவேறவில்லை.


மகளீர் இடஒதுக்கீடு மசோதா முழுமையாக நிறைவேறினால், மக்களவையில் குறைந்தபட்சமாக 181 பெண் உறுப்பினர்களும் மற்றும் 28 மாநில சட்டமன்றங்களில் மொத்தமுள்ள 4,109 இடங்களில் 1,370 இடங்கள் பெண்களுக்கு கிடைக்கும். தேர்தலில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அமலுக்கு வர... இன்னும் பல நடைமுறைகளை தாண்ட வேண்டும். ராஜ்ய சபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட போதே ‘‘மகளிர் இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம்’’ என்று சொன்னார் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி.

மகளிர் இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்பட்ட பிறகும் இன்னும் சில நடைமுறைகள் இருக்கின்றன. எந்தெந்த தொகுதிகளை பெண்கள் போட்டியிடும் தொகுதிகளாக அறிவிப்பது பற்றி தீர்மானிக்க குழு அமைக்கப்படும். மகளிருக்கான தொகுதிகளை எந்த அடிப்படையில் பிரிப்பது என்பது உள்ளிட்ட விஷயங்களை குழு ஆராயும். அதுபற்றி அரசியல் கட்சிகள் உட்பட எல்லா தரப்பினரின் கருத்துகளும் கேட்டறியப்படும். இதன்பிறகே, மகளிர் போட்டியிடும் தொகுதிகள் குறித்து குழு பரிந்துரை செய்யும். இந்த பணிகள் எல்லாம் முடிவதற்குள் 2011 தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்துவிடும். அதனால் அடுத்த 2014 நாடாளுமன்றத் தேர்தலிலோ அல்லது 2016 சட்டசபைத் தேர்தலிலோதான் பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அதுவரை வழக்கம் போலவே அரசியல் கட்சிகள் கத்திக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

இந்த தேர்தலிலேயே இதனை கொண்டு வர வாய்ப்பும் இருக்கிறது. சட்டம் வரும் வரையில் காத்திருக்க வேண்டியதில்லை. தாங்களாகவே பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அரசியல் கட்சிகள் கொடுக்க முன்வந்தால் அதை எந்த சட்டத்தால் தடுக்க முடியும். ஆனால் தர மாட்டார்கள். காரணம் அதுதான் அரசியல்.

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...