Skip to main content

களைக்கட்டிய 2006 தேர்தல் பிரச்சாரம்!

2006 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற வைகோ, தி.மு.க., கருணாநிதி, அவரது குடும்பம், சன் டி.வி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி அனல் பிரச்சாரம் செய்தார். ஆனால் ஜெயலலிதாவோ அவருக்கு எதிர்மறையாக இருந்தது. தனது 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை பிரச்சாரத்தில் அடுக்கினார். நடிகர்கள் எஸ்.எஸ். சந்திரன், ராதாரவி, முரளி, ஆனந்தராஜ், சிம்ரன், விந்தியா எனத் திரையுலகமே அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்துப் பிரசாரம் செய்தது.



2001 ‍ 2006 ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் நடைபெற்ற மோசமான சம்பவங்கள், அ.தி.மு.க  கூட்டணியில் சேருவதற்கு முன்னர், ஜெயலலிதா குறித்தும், அ.தி.மு.க. குறித்தும் வைகோ பேசிய பேச்சுகளை சி.டி.களாக போட்டு பிரச்சாரம் செய்தது தி.மு.க. சாலைப் பணியாளர்கள் வேலை நீக்கம், அரசுப் பணியாளர்கள் ஒட்டுமொத்தமாகப் பணிநீக்கம், நள்ளிரவில் நடந்த கருணாநிதி கைது சம்பவம், சென்னை எம்.ஜி.ஆர்.நகர் கூட்ட நெரிசல் மரணங்கள் போன்ற பல காட்சிகளை உள்ளடக்கி சி.டி.களை வெளியிட்டு பரபரப்பை பற்ற வைத்தது தி.மு.க.

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...