Skip to main content

தமிழக‌ சட்டசபை கலாட்டா காட்சி படங்கள்!

தமிழ்நாடு சட்டசபையில் இன்று (ஜனவரி 7) கவர்னர் உரையாற்றினார். ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க. ம.தி.மு.க. கட்சி எம்.எல்.ஏ.கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.கள் கருப்பு துண்டு அணிந்து வந்தார்கள்.



காய்கறி தட்டுகளை ஏந்தியும் காய்கறிகளையும் மாலையாக கழுத்தில் போட்டும் அவர்கள் அவைக்கு வந்தார்கள். கவர்னர் பர்னாலா உரையாற்ற தொடங்கியதுமே கோஷம் எழுப்பினார்கள். தொடர்ந்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். உடனே சபாநாயகர் ஆவுடையப்பன் அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். இதனால் அவையில் கலாட்டா உருவானது. சபை காவலர்கள் எதிர்க்கட்சியினரை குண்டுக்கட்டாக தூக்கி உறுப்பினர்களை வெளியேற்றினர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் வெளியேற்ற முற்பட்ட போது அவருக்கு சபை காவலர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. சபை காவலர்களை அவர் அடிக்க பாய்ந்தார்.

பொள்ளாச்சி ஜெயாராமனை சபை காவலர்கள் வெளியேற்றும் காட்சிகள்





Comments

உங்களது தேர்தல் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.

நல்ல முயற்சி பாராட்டுக்கள்.

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...