Skip to main content

49 ஓ - அப்படின்னா என்னங்க?

போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் பிடிக்காமல், யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனில், அதையும் பதிவு செய்யும் வசதிதான் 49 ஓ. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இதற்கென ஒரு பட்டனை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தேர்தலுக்கு தேர்தல் கோரிக்கையாகவே இருந்து வருகிறது. இதுகுறித்த வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.




எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைப் பதிவு செய்ய விண்ணப்பம் 17 -ஏ -வைப் பூர்த்தி செய்து தரலாம் என 1961-ம் ஆண்டு தேர்தல் சட்டம் பிரிவு 49 ‘ஓ’வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன்படி வாக்காளர்கள், வாக்குச் சாவடிக்குச் சென்று 17 -ஏ விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கையெழுத்திட்டு அங்குள்ள தேர்தல் அதிகாரியிடம் அளிக்கலாம். எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை, அதேசமயம் இந்தியக் குடிமகனாக தனது வாக்கைப் பதிவு செய்ய விரும்புவோர் இந்த புதிய முறையைத் தேர்ந்தெடுக்கலாம்.

Comments

Anonymous said…
In this method there is a lack of privacy
இதற்க்கு பதிலாக வேற ஏதும் முறை இல்லையா ..
ஏனெனில் நமது privacy பறிக்கப்படுகிறது ..

வாக்குச் சாவடிக்குச் சென்று 17 -ஏ விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கையெழுத்திட்டு அங்குள்ள தேர்தல் அதிகாரியிடம் அளிக்கலாம்.

அந்த அதிகாரி நம்மை ஒரு மர் பார்ப்பர்..(மற்றவர்களும் தான்).
ஓட்டு போடும் இயந்திரதில்யே இந்த வசதி இருந்தால் நல்லா இருக்கும்
Anonymous said…
எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு எந்திரத்திலேயே இந்த வசதி இருந்தால்தான் சரியாக இருக்கும். ஓட்டுப்பதிவு எந்திரத்தை கொண்டு வர முடிந்தவர்களுக்கு இந்த வசதியையும் கொண்டு வர என்ன சிரமம் என்பதுதான் புரியவில்லை. வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. வரும் தேர்தலுக்கு சாத்தியமில்லை.
பயனுள்ள பதிவு
நன்றி

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...

திருவண்ணாமலை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. செங்கம் (தனி) தொகுதி செங்கம் தாலுக்கா (பகுதி) குப்பநத்தம், பரமனந்தல், தீத்தாண்டப்பட்டு, வளயெம்பட்டு, புதுப்பட்டு, ஆலப்புத்தூர், குயிலம், அன்வராபாத், செ.நாச்சிப்பட்டு, காயம்பட்டு, சென்னசமுத்திரம், பக்கிரிப்பாளையம், அரசன்கன்னி, மேல்செங்கம், மேல்செங்கம் (ஆர்.எப்), அந்தனூர், மேல்புலதியூர், பெரும்பட்டம், மண்மலை, கரியமங்கலம், பிஞ்சூர், வேடங்குப்பம், மேல்பள்ளிப்பட்டு, மேல்வணக்கம்பாடி, ஆனந்தவாடி (ஆர்.எப்), ஆனந்தவாடி, கட்டமடுவு, நரடாப்பட்டு, மேல்ராவந்தவாடி, கரியமலைப்பாடி, ஆண்டிப்பட்டி, தம்புநாய்க்கன்பட்டி, மண்ணாண்டிப்பட்டி, பொரசப்பட்டு, தாழையூத்து, அரட்டவாடி, அரியாகுஞ்சூர், சொரப்பனந்தல், மேல்பொஎன்னாத்தூர், உச்சிமலைக்குப்பம், விண்ணவனுர், பாய்ச்சல், நல்லூர், கண்ணக்குருக்கை, சின்னகோளப்பாடி, பாலியப்பட்டு, அஸ்வனகாசுருணை, பெரியகோளப்பாடி, பீமானந்தல், மேல்கரிப்பூர், கோழுந்தம்பட்டு, சாத்தனூர், சாத்தனூர் அணை, நீப்பத்துறை, வெள்ளாலம்பட்டி, இளங்குன்னி, குருமப்பட்டி, கல்லடாவி, மணிக்கல், புளியம்பட்டி, கருங்காலிப்பாடிபட்டி, வேப்பூர்செக்கடி, வீரணம், தரடாப்பட்டு, கணக்கந்தல், நெடுங்கவாடி, செ.அகரம், பெரும்பாக...