Skip to main content

2006 தேர்தல்: விஜயகாந்த் தனியே...தன்னந் தனியே!

2006 தேர்தலில் நடந்த இன்னொரு அதிசயம் விஜயகாந்த் என்ட்ரிதான். கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே 2006 சட்டசபைத் தேர்தல் வர தன்னந்தனியாக களமிறங்கினார் விஜயகாந்த். அந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட ஒரே கட்சி ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்‘தான். கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு ஆள் பிடிக்க அலைந்து கொண்டிருந்த நேரத்தில் தனியாக போட்டியிட்டார் கேப்டன்.

2006 தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் சென்ற இடம் எல்லாம் மக்கள் வெள்ளம். பெண்கள், இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு. அப்போது ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க.வை பெயருக்கு எதிர்த்துவிட்டு எதிர்கட்சியாக இருந்த தி.மு.க.வைதான் ஒரு பிடி பிடித்தார். அவருடைய கல்யாண மண்டப இடிப்பு விவகாரத்தில் தி.மு.க. மீது அவருக்கு கடுமையான கோபம் இருந்ததும் பிரச்சாரத்தில் எதிரொலித்தது.
விஜயகாந்துக்கு அடுத்தபடியாக ஓரளவு பரிச்சயமான முகம் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன்தான். அதோடு அவருடைய மைத்துனர் சுதிஷ் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தேர்தலில் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனாலும் தேர்தலில் விஜயகாந்த் கட்சி வாங்கி வாக்கு சதவீதம் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தது.

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...