Skip to main content

கருணாநிதி ஆட்சி வீழ்ச்சி அடையும்: ஜெயலலிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (பிப்ரவரி 4) வெளியிட்ட் அறிக்கை:

கேரள மாநிலம் வல்லார்படத்தில் சர்வதேச பெட்டக மாற்று முனையத்தை அமைக்க அனுமதி கொடுத்ததன் மூலம் தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார் கருணாநிதி.


தூத்துக்குடி துறைமுகம் வளர்ந்து வரும் துறைமுகமாகும். திருப்பூர், அவினாசி, ஈரோடு, கரூர், சிவகாசி, கோவை பகுதிகளிலிருந்து வெளி நாடுகளுக்கு செல்லும் சரக்குகள் தூத்துக்குடியில் இருக்கும் சிறிய கப்பல் மூலம் கொழும்பில் உள்ள சர்வதேச பெட்டக மாற்று முனையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள தாய் கப்பலில் அனைத்துச் சரக்குகளும் ஏற்றப்படும். இதன் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மாதந்தோறும் 16,000 பெட்டக ஏற்றுமதியும், 14,000 பெட்டக இறக்குமதியும் நடைபெற்று வருகிறது.

தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது, கேரள மாநிலம், கொச்சிக்கு அருகில் உள்ள வல்லார்படம் என்ற இடத்தில் முதன் முதலாக சர்வதேச பெட்டக மாற்று முனையம் அமைக்க மத்திய அரசால் அனுமதி கொடுக்கப்பட்டது.  தற்போது இந்த முனையம் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளது.

இந்த முனையம் செயல்பாட்டிற்கு வந்துவிட்டால், திருப்பூர், அவினாசி, கரூர், ஈரோடு, கோவை பகுதிகளில் உள்ள ஏற்றுமதியாளர்கள் தங்கள் சரக்குகளை தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்குப் பதிலாக, நேரடியாக கேரள மாநிலம், வல்லார்படத்தில் உள்ள சர்வதேச பெட்டக மாற்று முனையத்திற்கு அனுப்பி விடுவார்கள். இதனையடுத்து, தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள தற்போதைய ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் வெகுவாக குறைந்து, தென் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் நிலை ஏற்படும்.  தூத்துக்குடி துறைமுகத்தின் முக்கியத்துவம் வெகுவாக குறைவதோடு மட்டுமல்லாமல், இதை நம்பியுள்ள தொழிலாளர்கள், வியாபாரிகள், சுங்க முகவர்கள், மற்றும் இதர பணியாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்து கொண்டு தமிழக மக்களுக்கு “நன்மை” செய்கின்ற கருணாநிதியின் லட்சணம் இது தான்! கருணாநிதியின் இந்தச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி துறைமுகத்தின் வளர்ச்சியை தடுத்து, தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ள கருணாநிதியின் ஆட்சி விரைவில் வீழ்ச்சியடையும்.

Comments

Unknown said…
ம்ம்ம்... அப்புறம் .... இந்த அம்மா வந்து நிமித்திடுவாங்களாமா?

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா...

காஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை

1. சோழிங்கநல்லூர் தொகுதி தாம்பரம் தாலுக்கா: நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி, செம்மஞ்சேரி மற்றும் உத்தண்டி கிராமங்கள். புழதிவாக்கம் (உள்ளகரம்) (பேரூராட்சி), பெருங்குடி (பேரூராட்சி), கொட்டிவாக்கம் (சென்சஸ் டவுன்), ஈஞ்சம்பாக்கம் (சென்சஸ் டவுன்), பாலவாக்கம் (சென்சஸ் டவுன்), நீலாங்கரை (செசன்ஸ் டவுன்), ஒக்கியம்துரைப்பாக்கம் (சென்சஸ் டவுன்), பள்ளிக்கரணை (பேரூராட்சி), மடிப்பாக்கம் (செசன்ஸ் டவுன்), ஜல்லடியன்பேட்டை (செசன்ஸ் டவுன்) மற்றும் சோழிங்கநல்லூர் (பேரூராட்சி)