Skip to main content

தமிழகத்தின் பெரிய தொகுதிகள்!

2006 சட்டசபைத் தேர்தல் வரையில் தமிழகத்தில் மட்டுமல்ல ஆசியாவிலேயே மிகப் பெரிய தொகுதியாக இருந்தது வில்லிவாக்கம் தொகுதி. தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு சில தொகுதிகள் நீக்கப்பட்டு புதிய தொகுதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. தொகுதி சீரமைப்புக்கு பிறகு முதல் சட்டசபைத் தேர்தல் இப்போதுதான் நடக்க போகிறது. இந்தநிலையில் மிகப் பெரிய தொகுதி என்கிற அந்தஸ்த்தை இழந்திருக்கிறது வில்லிவாக்கம் தொகுதி. வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் கடந்த டிசம்பர் மாதம் முடிந்து ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன‌. அதன்படி தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட பெரிய தொகுதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் சோழிங்கநல்லூர்தான்.

சோழிங்கநல்லூர் தொகுதியில், ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 834 ஆண்கள், ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 781 பெண்கள் என மொத்தம் 3 லட்சத்து 40 ஆயிரத்து 615 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அடுத்ததாக அதிக வாக்காளர்கள் கொண்ட இரண்டாவது தொகுதி கவுண்டம்பாளையம். இது கோவை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. 1 லட்சத்து 47 ஆயிரத்து 113 ஆண்களும் 1 லட்சத்து 42 ஆயிரத்து 799 பெண்களும் என்று மொத்தம் 2 லட்சத்து 89 ஆயிரத்து 912 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையை ஒட்டியிருக்கும் ஆவடிதான் அதிக வாக்காளர்கள் கொண்ட மூன்றாவது தொகுதி ஆகும். இங்கு 1 லட்சத்து 35 ஆயிரத்து 661 ஆண்களும் 1 லட்சத்து 30 ஆயிரத்து 228 பெண்களும் 25 திருநங்கைகள் என, 2 லட்சத்து 65 ஆயிரத்து 914 வாக்காளர்கள் இந்த தொகுதியில் இருக்கிறார்கள்.

Comments

நல்ல தகவல்
நன்று...

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...