Skip to main content

உழவர் கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை

அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், இந்திய குடியரசு கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை ஜெயலலிதா முடித்துவிட்டார். தே.மு.தி.க. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க. மட்டுமே பாக்கி.

தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு பா.ம.க.வுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்ற கழகம், முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துவிட்டார்கள். இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 25) காலை அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த கட்சியின் பொதுச் செயலாளர் திருநாவுக்கரசும் உடன் இருந்தார். தி.மு.க. சார்பில் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். உழவர் உழைப்பாளர் கட்சிக்கு ஒரு இடம் வழங்கப்படும் என்று தெரிகிறது. உதயசூரியன் சின்னத்தில்தான் அந்த கட்சி போட்டியிடுமாம்.

Comments

Anonymous said…
flash news potta innum nallaa irukkum.

azifair-sirkali.blogspot.com
Is the Sun is gonna rise again? Lets see...!

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா...