Skip to main content

கூட்டணிக்கு குழு அமைக்கப்படுகிறது: கருணாநிதி பேட்டி

உள் நாட்டு பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி நேற்று (ஜனவரி 30) டெல்லி சென்றார். அங்கே பத்திரிகையாளர்களுக்கு கருணாநிதி பேட்டி அளித்த போது வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. அணியில் பா.ம.க. இடம் பெறும் என்று கருணாநிதி தெரிவித்தார். இந்த நிலையில் திங்கள் கிழமை காலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார்.

சோனியா சந்திப்பு மாலையில் நடப்பதற்கு முன்பே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திடிரென்று ராசாவை அழைத்து சி.பி.ஐ. விசாரித்தது. அதோடு ஸ்பெக்ட்ரம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சிவராஜ் பாட்டீல் தனது அறிக்கையை பிரதமரிடம் வழங்கினார். இந்த பரபரப்புக்கு இடையே சோனியாவை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார்.

சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து முக்கால் மணி நேரத்திற்கு மேல் உரையாடினார். அப்போது நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு,  மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் உடன் இருந்தனர். இந்தச் சந்திப்புக்குப் பின் முதலமைச்சர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி: சோனியா காந்தியை சந்தித்த போது என்ன பேசினீர்கள், எவ்வளவு நேரம் பேசினீர்கள், அதன் விவரம் கூற முடியுமா?

பதில்: சோனியா காந்தி அம்மையாருடன் முக்கால் மணி நேரம்  விவாதித்தோம். காங்கிரஸ்,  திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி தொடருகிறது. தொகுதிகளைப் பற்றி விவரங்கள், எண்ணிக்கை பற்றி  விவாதிக்க காங்கிரஸ் சார்பில் ஒரு குழுவினை அமைக்கிறார்கள். அந்தக் குழுவில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பதை விரைவில் அறிவிப்பார்கள்.   அதன் பிறகு எங்களுடைய கூட்டணிப் பணிகள் தொடரும்.

கேள்வி : அந்தக் குழுவின் கூட்டம் எப்போது நடைபெறும்?

பதில்: குழு அமைத்த பிறகு.

கேள்வி : பேச்சுவார்த்தை எப்படி இருந்தது?

பதில்: திருப்திகரமாக அமைந்தது.

இப்படி கருணாநிதி சொன்னாலும் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லையாம். 80 தொகுதிகள் வரை தர வேண்டும் என்று காங்கிரஸ் விடப்பிடியாக இருக்கிறதாம். அதனால்தான் குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்று கருணாநிதி சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

Comments

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா...

காஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை

1. சோழிங்கநல்லூர் தொகுதி தாம்பரம் தாலுக்கா: நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி, செம்மஞ்சேரி மற்றும் உத்தண்டி கிராமங்கள். புழதிவாக்கம் (உள்ளகரம்) (பேரூராட்சி), பெருங்குடி (பேரூராட்சி), கொட்டிவாக்கம் (சென்சஸ் டவுன்), ஈஞ்சம்பாக்கம் (சென்சஸ் டவுன்), பாலவாக்கம் (சென்சஸ் டவுன்), நீலாங்கரை (செசன்ஸ் டவுன்), ஒக்கியம்துரைப்பாக்கம் (சென்சஸ் டவுன்), பள்ளிக்கரணை (பேரூராட்சி), மடிப்பாக்கம் (செசன்ஸ் டவுன்), ஜல்லடியன்பேட்டை (செசன்ஸ் டவுன்) மற்றும் சோழிங்கநல்லூர் (பேரூராட்சி)