Skip to main content

2006 தேர்தல்: அ.தி.மு.க. பிரச்சாரத்தில் சிவனாண்டி!


இப்போது உளவுத்துறையில் இருக்கும் ஜாபர் சேட் மீது விமர்சனங்கள் எழுந்திருப்பது போல கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த சிவனாண்டி மீது ஏகப்பட்ட புகார்கள். 2006 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு கட்சிகளை இழுத்து வர ரொம்பவே உழைத்தார். அதோடு தேர்தல் பிரச்சாரத்திலும் பங்கெடுத்துக் கொண்டார். ஜெயலலிதா பிரச்சாரம் போன இடங்களில் எல்லாம் சிவனாண்டியும் தவறாமல் ஆஜர் ஆனார்.


சசிகலாவின் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அப்போது சிவனாண்டிக்கு ஏக மரியாதை, போலீஸ் துறையில் அதிக அதிகாரம் என்று வலம் வந்தார். முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு வருவதாகக் சொல்லிக் கொண்டே ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்தை வழி வகுத்தார். பிரச்சாரத்திலேயே மக்கள் மனநிலை என்ன? 'யாருக்கு ஓட்டு போடுவீங்க..' என்றெல்லாம் சிவனாண்டி கேட்டது அப்போது சலசலப்பை உண்டாக்கியது. கிட்டத்தட்ட அ.தி.மு.க. மாவட்ட செயலாளராகவே மாறிப் போயிருந்தார் சிவனாண்டி.

ஜெயலலிதாவின் பிரச்சாரத்திற்கு கூட்டம் வரவில்லை என்றால் அதை எப்படி கொண்டு வருவது என்று நிறைய வேலைகளை பார்த்தார். தனது வீட்டையே அ.தி.மு.க. அலுவலகத்துக்கு எதிரில் மாற்றினார். இதெல்லாம் பார்த்து தி.மு.க. ஏகத்துக்கும் கொதித்தது. தொடர்ந்து தேர்தல் கமிஷனுக்கு தி.மு.க. புகார்களை தட்டவே.. வேறு வழியில்லாமல் அந்த பதவியில் இருந்து சிவனாண்டியை தூக்கியது தேர்தல் கமிஷன்.

இதேல்லாம் போன தேர்தலில் அரங்கேறிய விஷயம். தி.மு.க. ஆட்சிக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே நிலைமை தலை கீழாக மாறியது. கொஞ்ச நாட்களுக்கு சிவனாண்டியை ஒதுக்கி வைத்த தி.மு.க., அதன்பிறகு அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்தது. எந்த சிவனாண்டிக்காக வானத்திற்கும் பூமிக்கு குதித்ததோ, இன்று சிவனாண்டியை நல்ல இடத்தில் உட்கார வைத்து தி.மு.க. அழகு பார்க்கும் கொடுமையை எங்கே போய் சொல்ல.

கேடு கெட்ட அரசியல் இது.

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...