Skip to main content

2006 தேர்தல்: கடலோர மாவட்டங்களில் வென்ற தி.மு.க.!


2006 தமிழக சட்டசபைத் தேர்தலில் கடலோர மாவட்டங்களில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சேது சமுத்திர திட்டம் துவக்கப்பட்ட சமயத்தில் மீனவர்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு எதிர்ப்பு இருந்ததாக பேச்சு எழுந்தது. கடலோர மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றியை குவித்ததால் அந்த எதிர்ப்பு வலுவிழந்தது.


அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த சமயத்தில்தான் தமிழகத்தில் சுனாமி பாதிப்பு ஏற்பட்டது. கடலோர மாவட்டங்களில் அ.தி.மு.க. அரசு தேவையான அளவிற்கு நிவாரண பணிகளை மேற்கொண்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்சி பேதமின்றி நிவாரண நிதி வழங்கப்பட்டன. குறிப்பாக சுனாமியால் பாதிப்பு ஏற்படாத ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட கோடிக் கணக்கில் சுனாமி நிதி வழங்கப்பட்டன. இதையெல்லாம் கணக்குப் போட்டு தேர்தலில் அ.தி.மு.க.விற்கு மீனவர்களின் ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சேதுசமுத்திர திட்டத்திற்கு மீனவர்களிடயே இருந்த எதிர்ப்பும் சேர்ந்து கொண்டதால் எப்படியும் அ.தி.மு.க.வே வாகை சூடும் என்று நினைத்தார்கள். ஆனால் தேர்தல் முடிவு வேறு மாதிரியாக மாறிவிட்டது.

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...