Skip to main content

அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.


அ.தி.மு.க. கூட்டணியில். விஜயகாந்தின் தே.மு.தி.க. சேருமா? என்று கடந்த சில மாதங்களாக நிலவி வந்த செய்திக்கு இன்று முற்றுப்புள்ளி விழுந்திருக்கிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் வந்து கூட்டணி உறுதி செய்தனர்.


தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம் பெறும் வகையில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் அ.தி.மு.க. அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது அ.தி.மு.க. சார்பில் சார்பில், தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்களான, பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில், அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன், இளைஞர் அணிச் செயலாளரும் விஜயகாந்தின் மச்சானுமான எல்.கே. சுதீஷ் ஆகியோர் பங்கு பெற்றனர்.

பேச்சுவார்த்தை முடிந்த பிறகு பண்ருட்டி ராமசந்திரன் பேட்டி அளித்தார். அ.தி.மு.க.வுடன் இணைந்து தொகுதிகளை பங்கீட்டு தேர்தலை சந்திக்க முடிவு செய்திருக்கிறோம். அது தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்திருக்கிறது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்." என்றார்.

கேள்வி: கூட்டணி மந்திரி சபை பற்றி பேசினீர்களா?

பதில்: ஏற்கனவே அதை நாங்கள் தெளிவு படுத்தி விட்டோம். தி.மு.க. ஆட்சி விரட்டி அடிக்கப்பட வேண்டும் அது ஒன்றுதான் முதல் குறிக்கோள். மக்கள் விருப்பத்திற்கு இணங்க அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்திருக்கிறோம்.

கேள்வி: மக்களுடனும் தெய்வத்துடன்  தான் கூட்டணி என்று விஜயகாந்த் சொல்லி வந்த நிலையில் அ.தி.மு.க.வோடு எப்படி கூட்டணி சேர்ந்தீர்கள்?

பதில்:  தி.மு.க. ஆட்சி தொலைய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்ப்பார்ப்புக்கு வடிவம் கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தி.மு.க.வை வீழ்த்த முடிவு செய்தோம். தெய்வத்தின் ஆசியும் அதுதான்

Comments

தி.மு.க ஜெயிப்பது கஷ்டம் தான்..

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா...

காஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை

1. சோழிங்கநல்லூர் தொகுதி தாம்பரம் தாலுக்கா: நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி, செம்மஞ்சேரி மற்றும் உத்தண்டி கிராமங்கள். புழதிவாக்கம் (உள்ளகரம்) (பேரூராட்சி), பெருங்குடி (பேரூராட்சி), கொட்டிவாக்கம் (சென்சஸ் டவுன்), ஈஞ்சம்பாக்கம் (சென்சஸ் டவுன்), பாலவாக்கம் (சென்சஸ் டவுன்), நீலாங்கரை (செசன்ஸ் டவுன்), ஒக்கியம்துரைப்பாக்கம் (சென்சஸ் டவுன்), பள்ளிக்கரணை (பேரூராட்சி), மடிப்பாக்கம் (செசன்ஸ் டவுன்), ஜல்லடியன்பேட்டை (செசன்ஸ் டவுன்) மற்றும் சோழிங்கநல்லூர் (பேரூராட்சி)