Skip to main content

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: கருணாநிதி

''ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சகிகலாவின் உற்றார், உறவினர் , நெருங்கிய சொந்தக்காரர்கள் நடத்தும் மிடாஸ் மதுபான ஆலையில் என்ன நடக்கிறது?. குறைந்த விலைக்கு மட்டமான சரக்குகளை வைத்து, உயர்ந்த சரக்கின் லேபிள் ஒட்டிஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடிக்கின்றனர். மது விற்பனையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இன்று மன்னார்குடி கும்பலுக்கு போய்க் கொண்டிருக்கிறது. அந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை தடுத்தாலே இலவச கலர் டிவி பெட்டிகளை வாங்குவதற்கு நிச்சயமாக பணம் கிடைக்கும்.


தமிழ்நாட்டில் உள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 156 லட்சம். இதில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 53 லட்சம். 2 ஆண்டு காலத்தில் தொலைகாட்சி பெட்டிகள் அனைத்தையும் கொடுத்து விடலாம். 53 லட்சம் தொலைகாட்சி பெட்டிகள் ரூ. 2,000 செலவில் வழங்க ரூ. 1,600 கோடிதான் ஆகும்.''  -  ‍கடந்த தேர்தலில் ஏப்ரல் 6, 2006 அன்று சென்னை புரசைவாக்கம் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கருணாநிதி முழங்கியது.

ஜெயலலிதாவின் உறவினர்கள் நடத்தும் மிடாஸ் மது ஆலையை பற்றி சொன்ன கருணாநிதி ஆட்சியில்தான் அவருக்கு வேண்டப்பட்ட கலைஞர் டி.வி. சரத்குமார் என்று பலருக்கு மது தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். இந்த கொடுமையை எங்கே போய் சொல்ல.

Comments

என்னத்த சொல்றதப்பு.
1.75 லட்சம் கோடி இருந்தால் இந்தியாவில் எல்லோருக்கும் கலர் டி.வி, கேஸ் அடுப்பு, 2 ஏகர் நிலம் வழங்கலாம்.

கலைஞருக்கு யாராவது எடுத்துச் சொல்லக்கூடாதா?

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா...