Skip to main content

திருமண மண்டபம், விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்


*  திருமண மண்டபங்களில் முன் பதிவு விவரங்களை சம்பந்தப்பட்ட மண்டப உரிமையாளர்கள் அவ்வப்போது தாலுகா அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களில் தெரிவிக்க வேண்டும். இதற்கான படி வங்கள் மண்டப உரிமை யாளர்களுக்கு வழங்கப்படும்.

* அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி காது குத்து, திருமண விழா என்ற பெயரில் முன்பதிவு செய்து திருமண மண்டபங்களை பயன்படுத்துவது தெரிய வந்தால் மண்டப உரிமையாளர்கள் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையம் மற்றும் தாலுகா அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.



* அன்னதான நிகழ்ச்சி, பிரியாணி விருந்து நிகழ்ச்சிகளுக்கும் பரிசு பொருட்களை பட்டுவாடா செய்வதற்கும் திருமண மண்டபங்களை பயன்படுத்த உரிமையாளர்கள் அனுமதிக்க கூடாது.

* த‌னியார் விடுதிகளில் அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கி பணப்பட்டுவாடா மற்றும் டோக்கன் வினி யோகம் செய்வது போன்ற நடைமுறையில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட விடுதி உரிமையாளர்கள் உடனடியாக போலீசுக்கும், தாலுகா அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

* விதிமுறைகளை மீறும் திருமண மண்டப உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 123-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...