Skip to main content

காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி உடைகிறது. இன்று முடிவு எடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு

சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி தொடர்ந்து இழுபறியில் இருந்து வருகிறது. காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழுவை சேர்ந்த வாசன், ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், தங்கபாலு, ஜெயகுமார் ஆகியோர் தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவை சேர்ந்த ஸ்டாலின், பொன்முடி, ஆற்காட்டார், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோருடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் முடிவு எட்டப்படவில்லை. காங்கிரஸ் ஆரம்பத்தில் 80 தொகுதிகள் வரை கேட்டது. கடைசியில் 65 தொகுதிகளுக்கு இறங்கி வந்தது. தி.மு.க.வோ. 54 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று கையை விரித்தது. தொகுதி ஒதுக்கீடு தவிர ஆட்சியில் பங்கு, அமைச்சரைவையில் சரி பங்கு இடம், குறைந்தபட்ச செயல்திட்டம் என்று சில கோரிக்கைகளையும் காங்கிரஸ் வைத்தது.

இந்த நிலையில்தான் குலாம் நபி ஆசாத் சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். ஆனாலும் முடிவு எட்டப்படவில்லை. கடைசியில் டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் 65 தொகுதிகளுக்கு காங்கிரஸ் சம்மதம் தெரிவித்தது. இந்த நிலையில் இன்று (மார்ச் 4) இரவு 12 மணிக்கு திடிரென்று கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் 63 இடங்களை காங்கிரஸ் கேட்பது கொஞ்சமும் நியாயமில்லை. அப்படி கேட்பது சரிதானா? என்னென்ன தொகுதிகள் என்பதை காங்கிரஸ்தான் முடிவு செய்யும் என்பது சரிதானா? தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் உரிய முடிவு எடுப்போம். என்று சொல்லி இருக்கிறார்.

இதனால் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி உடையும் நிலை உருவாகி இருக்கிறது. மார்ச் 5ம் தேதி மாலை அறிவாலயத்தில் நடக்கும் தி.மு.க. உயர்மட்ட செயல்திட்ட குழு கூட்டத்தில் கூட்டணியை முறித்துக் கொள்வது பற்றி முடிவு எடுக்க தி.மு.க. தீர்மானித்திருக்கிறது. கூட்டணி முறிந்தால் மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலக நேரிடலாம். தி.மு.க. மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப் போவதாக செய்திகள் அடிபடுகின்றன. இதனால் தமிழகத்தில் தி.மு.க. அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெறலாம். அப்படி நடந்தால் தி.மு.க. அரசு கவிழ்ந்து கவர்னர் ஆட்சி அமலுக்கு வர வாய்ப்பு இருக்கிறது

Comments

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

காஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை

1. சோழிங்கநல்லூர் தொகுதி தாம்பரம் தாலுக்கா: நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி, செம்மஞ்சேரி மற்றும் உத்தண்டி கிராமங்கள். புழதிவாக்கம் (உள்ளகரம்) (பேரூராட்சி), பெருங்குடி (பேரூராட்சி), கொட்டிவாக்கம் (சென்சஸ் டவுன்), ஈஞ்சம்பாக்கம் (சென்சஸ் டவுன்), பாலவாக்கம் (சென்சஸ் டவுன்), நீலாங்கரை (செசன்ஸ் டவுன்), ஒக்கியம்துரைப்பாக்கம் (சென்சஸ் டவுன்), பள்ளிக்கரணை (பேரூராட்சி), மடிப்பாக்கம் (செசன்ஸ் டவுன்), ஜல்லடியன்பேட்டை (செசன்ஸ் டவுன்) மற்றும் சோழிங்கநல்லூர் (பேரூராட்சி)

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா...