Skip to main content

தமிழ்நாடு, புதுச்சேரிக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. புது டெல்லியில் இன்று (மார்ச் 1) தலைமை தேர்தல் ஆணையர் டாக்டர் எஸ் ஓய் குரேஷி பேட்டி அளித்த அளித்தார். பேட்டி விவரம்:

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும். மேற்கு வங்காளத்தில் 6 கட்டங்களாக ஏப்ரல் 18, 23, 27 மற்றும் மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும். அசாம் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 4 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறும்.
 
தமிழ்நாட்டில் இந்த மாதம் 19ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கும். வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் மார்ச் 26. வேட்புமனு பரிசீலனை மார்ச் 28.வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் மார்ச் 30. வாக்கு எண்ணிக்கை மே 13.

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 44 தொகுதிகள் தாழ்த்தப்பட்டோருக்கும், இரண்டு தொகுதிகள் பழங்குடியினத்தவருக்கான ரிசர்வ் தொகுதிகளாகும். மொத்தம் 54,016 வாக்குச்சாவடியில் தேர்தல் நடைபெறும். தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 பேர்.
 
தமிழ்நாட்டில் 99.85 சதவீதம் பேருக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை 100 சதவீத அளவிற்கு அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புகைப்படம் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் அருகில் உள்ள தேர்தல் பதிவு அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்து வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புதுச்சேரி மாநிலத்திற்கு ஏப்ரல் 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 5 தொகுதிகள் ரிசர்வ் தொகுதிகளாகும். 851 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். அனைத்து வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் வாக்குசாவடிக்கு அடையாள அட்டையுடன் சென்று வாக்குப்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் விவரங்கள் அடையாள அட்டையை கொண்டு கணினி முறையில் சரிபார்க்கப்படும்.
 
தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். தேர்தல் ஆணையம் இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது.

ஒவ்வொரு மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் நியமிக்கப்பட்டு அந்த மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தேர்தலுக்கான திட்டத்தை தயாரிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுடன் அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துறை சார்ந்த அலுவலர்கள் ஆலோசனையுடன் இதற்கான திட்டம் தயாரிக்கப்படும். பதற்றம் உள்ள பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு வீடியோவில் பதிவு செய்யப்படும். இதற்காக மாவட்ட தேர்தல் அலுவலர் போதிய அளவு வீடியோ மற்றும் டிஜிட்டல் கேமராக்களை முன்னேற்பாடாக செய்து வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மனுதாக்கல், மனு பரீசிலனை, தேர்தல் சின்னம் ஒதுக்கீடு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முதல் கட்ட பரிசோதனை தயார்நிலை மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பு, பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், பிரச்சாரம், தேர்தல் வாக்கு எண்ணிக்கை உட்பட அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும். பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகள் தேவைப்படுவோருக்கு சிடி-க்களாக கட்டண அடிப்படையில் வழங்கப்படும்.

தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நடத்தை நெறிமுறைகள் இன்று முதல் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்படும்.

வாக்காளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் நேரடியாக அவர்களுக்கான வாக்குச்சாவடி, வரிசை எண், வாக்காளர் பதிவு எண் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சாவடி சீட்டை (பூத் சிலிப்) அளிப்பார்கள் என்பது தேர்தல் ஆணையத்தின் முக்கியமான நடவடிக்கையாகும்.

இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...