Skip to main content

Posts

'சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்தானா?’ அங்கிட்டு சௌதாலா...இங்கிட்டு ஜெயலலிதா!

 2015 ஏப்ரல் 18 தேதியிட்ட ஜுனியர் விகடனில் எழுதிய கட்டுரை இது ! இது  ஓர் அபூர்வமான புகைப்படம்! தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா ஆகிய இருவர் மீதும் இவ்வளவு மீடியா வெளிச்சம் பாய்ந்தது இப்போது அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு, போயஸ் கார்டனில் கேமரா விழுங்கிய இந்தக் காட்சிக்குத் தனிக் கதை உண்டு. 2007ம் ஆண்டு அகில இந்திய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் இறங்கினார் ஜெயலலிதா. முலாயம் சிங், சந்திரபாபு நாயுடு, சௌதாலா உட்பட இந்தியாவின் முக்கியத் தலைகளை போயஸ் கார்டனுக்கு அழைத்து விருந்து கொடுத்தார். மூன்றாவது அணிக்கு 'ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி’ என்றெல்லாம் அப்போது பெயர் வைத்தார் ஜெயலலிதா. அரசியல் சூழலில் அந்த அணி காணாமல் போனது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க போயஸ் கார்டன் வந்த சௌதாலாவை ஜெயலலிதா வாசலில் காத்திருந்து வரவேற்றார். அப்போது எடுத்த படம்தான் இது. வெவ்வேறு கட்சிகளை... மாநிலங்களைச் சேர்ந்த ஜெயலலிதாவுக்கும் சௌதாலாவுக்கும் இப்போது ஓர் அரசியல் ஒற்றுமை உண்டு. ஊழல் வழக்கில...

'ரகசிய' போலீஸ் 7,67,00,000 !

2008 ஆகஸ்ட் 3 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது ! 'ரகசிய' போலீஸ் 7,67,00,000! போ லீஸ் என்றாலே 'மாமூல்' என்ற அர்த்தம் பொதுமக்கள் மனதில் ஆழ்ந்து பதிந்துவிட்டது. பகிரங்கமாக லஞ்சம் வாங்கும் டிராஃபிக் போலீஸ் முதல், லஞ்சப் புகாரில் சிக்கிய போலீஸ் உயர் அதிகாரிகள் வரை என எத்தனையோ பேரை பார்த்து மக்கள் அலுத்துப் போய்விட்டார்கள். இந்நிலையில், ''இதையும் தாண்டி லஞ்சத்துக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. தகிடுதத்தம் எதுவும் செய்யாமல் அரசாங் கத்திடமிருந்தே லட்சலட்சமாய் போலீஸார் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள்...'' என்றொரு தகவலை நம்மிடம் சொல்லி அதிர்ச்சிக்குள்ளாக்கினார் நம்முடைய போலீஸ் நண்பர் ஒருவர். ''போலீஸ் துறையில் ரகசிய தகவல்களை திரட்டுவதற் காக 'ரகசியப் பணிச் செலவு' என்ற வகையில் அரசு ஆண்டுதோறும் பணம் ஒதுக்கி வருகிறது. உளவுத் தகவல்கள் திரட்டுவது, குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளைப் பற்றி துப்பு கொடுக்கும் இன்ஃபார்மர்களுக்கு பணம் செலவழிப்பது போன்றவற்றுக்குத்தான் இந்தப் பணம். காவல்துறையின் மிக முக்கியமா...

முறிந்த கூட்டணி...: பரபரப்பான சர்வே முடிவுகள்!

2008 ஜூன் 25 தேதியிட்ட ஜூனிய விகடன் இதழில் எழுதிய கட்டுரை ! நா ளரு குத்தலும், மணிக்கொரு முணுமுணுப்புமாக 'கூட்டணி தாம்பத்யம்' நடத்திக்கொண்டிருந்த பா.ம.க-வை ஒருவழியாக தி.மு.க. 'விவாகரத்து' செய்துவிட்டது. இந்த முறிவு, அரசியல் அரங்கில் கொஞ்சங்காலமாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்ததுதான் என்பதால், அதிர்ச்சி அலைகள் பெரிதாக இல்லை. ஆனால், 'அடுத்து என்ன?' என்பது சுவாரஸ்யத்தை ரொம்பவே கூட்டுகிற கேள்வி. இந்த நிலையில், மக்களின் மனநிலை குறித்து அறிய, மின்னல் வேக சர்வே மேற்கொண்டோம். ஜூ.வி. சர்வே டீம் நேரில் சந்தித்தது 961 பேரை. விகடன் டாட்காம் இணையதளம் மூலம் கருத்துப் பதிவு செய்தவர்கள் 1,698. ஆக மொத்தம் 2,659 பேர் கலந்து கொண்டார்கள். நேரிலும், இணையதளத்திலுமாக 'பா.ம.க-வை தி.மு.க கூட்டணியை விட்டு அனுப்பியதே சரி' என்பது பெருவாரியான மனநிலை. அதிலும், 'விகடன் டாட்காம்' இணையதள வாசகர்களுக்கு, பா.ம.க. மீது அப்படியொரு கோபம். பத்துக் கேள்விகளுக்கும் 'டிக்' அடித்ததோடு, படு காரமாக விமர்சனங்களும் வைத்திருக்கிறார்கள்...

தியாகுவின் ஜெயில் நினைவுகள்!

2009 மார்ச் 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ''பா ரதிராஜாவின் 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தின் படப்பிடிப்பு, நான் சிறையில் இருந்தபோதுதான் நடந்தது. அப்போது சிறையில் இரண்டு கறுப்புப் பூனைகள் இருக்கும். ஒன்றை நாங்கள் வளர்த்தோம். மற்றொன்றை சிறைக் கண்காணிப்பாளர் விஜய நாராயணன் வளர்த்து வந்தார். அவர் அறையில் இருக்கும் போன் பெல் அடித்தாலே, அவரை அழைத்து வரும் அளவுக்குத் திறமையானது அந்தக் கறுப்புப் பூனை. இதைப் பார்த்த பாரதிராஜா, அந்தப் பூனையைப் படத்தில் நடிக்க வைத்தார்...'' பொதுமக்களின் திடீர் பிக்னிக் ஸ்பாட்டாக தற்போது மாறியிருக்கும் இடம் சென்னை சென்ட்ரல் ஜெயில். மத்திய சிறை புழலுக்கு மாற்றப்பட்டு விட்டதால், பழைய சிறையை இடிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.அப்படி இடிப்பதற்கு முன்பு, அதை பொதுமக்களின் காட்சிக்காகக் காவல் துறை திறந்து வைத்திருக்கிறது. நாமும் நம் பங்குக்கு 'தமிழ்த் தேசிய விடுதலை இயக்க'த்தின் பொதுச்செயலாளர் தியாகுவுடன் சிறைவலம் வந்தோம். அப்போதுதான் மேற்கண்ட 'பாரதிராஜ...

விறுவிறு புதிய சட்டப் பேரவை விழா... 'ஆடு பாம்பே விளையாடு பாம்பே!'

இ ந்திய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா, தமிழக முதல்வர் கருணாநிதி என்று மேடையில் முப் பெரும் அரசியல் தலைகள் சேர்ந்திருக்க... தமிழகத்தின் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகத் திறப்பு விழா, ஜம்மென்று நடந்து முடிந் திருக்கிறது..! மொத்தம் இரண்டு பிளாக்கு கள் கொண்டது இந்த வளாகம். சட்டசபைக்கு ஒன்று... தலைமைச் செயலகத்துக்கு ஒன்று! இதில் சட்டசபை கட்டட வளாகத்தில்தான் விழா. வெளியே நீட்டியபடி இருந்த கம்பிகளும், சிமென்ட் பூச்சு இல்லாத சுவர்களும் 'இன்னும் வேலை முடியவில்லை' என்பதை சொல்லிக் கொண்டே இருந்தன. சில இடங்களில் துணி களைக் கட்டி மறைத்திருந்தார்கள். 'புதிய சட்டசபை திறப்பு விழாவுக்குப் புறப்பட்டு வா...' என்று உடன்பிறப்புக்கு கருணாநிதி கடிதம் எழுதி அழைத்திருக்க... ஏராளமான தொண்டர்கள் குவிந்துவிட்டனர். ஆனால், பிரதமர் வருகையால் அவர்களை போலீஸ் உள்ளே விடாமல் விரட்டியது. உடன் பிறப்புகள் உஷ்ணம் காட்டியும், காக்கிகள் அசரவில்லை! மேடையே பிரமாண்ட செட் போல போடப்பட்டிருக்க... மேடைக்கு முன்பு நீதிபதிகள், மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.எல்.ஏ-...

அரசியல் தீ பற்ற வைத்த படம் !

ம காத்மா காந்தி, ராஜாஜி, திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், பெரியார், அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், காயிதேமில்லத் முகம்மது இஸ்மாயில், எம்.ஜி.ஆர் ஆகிய 10 பேர் படங் களுக்கு மட்டும் தமிழக சட்டசபையில் நிரந்தர இடம் உண்டு. இந்த வரிசையில் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தையும் வைக்க, தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, 'கருணாநிதியின் படத்தை வைக்கக் கூடாது' என்று காட்டமாக அறிக்கை விட்டிருக்கும் ஜெயலலிதா, ''அடுத்து அதி.மு.க. ஆட்சிக்கு வரும்போது இந்த மரபுமீறிய செயல்கள் மாற்றி அமைக்கப்படும்!'' என்றும் காரம் வீசியிருக் கிறார். இதுபற்றி சட்டசபை செயலக வட்டாரத்தில் விசாரித்தோம். ''சட்டசபையில் முதன்முதலாக காந்தி உருவப்படத்தை, ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்தபோது 24.7.1948-ல் திறந்து வைத்தார். 'வாழ்க நீ எம்மான்' என்கிற பாடலை எம்.எஸ்.சுப்பு லட்சுமி பாட... சர்.முத்தையா செட்டியார் வழங்கிய காந்தி படம் திறக்கப்பட்டது. பிறகு ராஜாஜியின் படத்தை பிரதமராக இருந்த நேரு திறந்தார். அதைத்தொடர்ந்து, திருவள்ளுவ...

ம.தி.மு.க. மாநாடும் தீவு ஆராய்ச்சியும்!

இ து 'மாநாடு சீஸன்'... கடலூரில் தி.மு.க-வின் மகளிர் அணி மாநில மாநாடு முடிந்த நிலையில், சென்னை மண்டல மாநாட்டை நிறைய நெருக்கடிகளைத் தாண்டி, ஜூன் 18-ம் தேதி சென்னைத் தீவுத் திடலில் நடத்தி முடித்திருக்கிறது ம.தி.மு.க. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை யிலிருந்து தீவுத் திடல் நோக்கிப் புறப்பட்ட தொண்டரணிப் படையை தனிமேடையில் நின்று சல்யூட் வைத்து ரசித்தார் வைகோ. ம.தி.மு.க. கொடிகளுடன் நடந்த தொண்டர் கள், 'லெஃப்ட் ரைட்'டுக்குப் பதிலாக 'இடம் வலம்' என்று தமிழில் சொல்லிக்கொண்டு மிடுக்கு நடை போட்டதைப் பொதுமக்கள் ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள். அணிவகுப்பு, தீவுத் திடல் வந்து சேர்ந்ததும் மாநாடு களை கட்ட ஆரம்பித்தது. தலைமைச் செயலகம் மாடலில் சீரியல் விளக்குகள் மின்னிய பந்தலில், காக்கிச் சட்டைகளுக்கு வேலை வைக்காமல் கட்டுக்கோப்பாக இருந்தனர் தொண்டர்கள். கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் வழக்கம் போலவே வெளுத்துக் கட்ட ஆரம்பித்தார். ''பதினான்கு வருஷ வனவாசத்துக்குப் பிறகு ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது இதிகாச வரலாறு. ம.தி.மு.க. 14 ஆண்டுகள் கடந்து 15-ம் ஆண்டில் அடியெடு...