போலீஸ் என்றாலே 'மாமூல்' என்ற அர்த்தம் பொதுமக்கள் மனதில் ஆழ்ந்து பதிந்துவிட்டது. பகிரங்கமாக
லஞ்சம் வாங்கும் டிராஃபிக் போலீஸ் முதல், லஞ்சப் புகாரில் சிக்கிய போலீஸ் உயர் அதிகாரிகள் வரை என எத்தனையோ பேரை பார்த்து மக்கள் அலுத்துப் போய்விட்டார்கள்.
இந்நிலையில், ''இதையும் தாண்டி லஞ்சத்துக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. தகிடுதத்தம் எதுவும் செய்யாமல் அரசாங் கத்திடமிருந்தே லட்சலட்சமாய் போலீஸார் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள்...'' என்றொரு தகவலை நம்மிடம் சொல்லி அதிர்ச்சிக்குள்ளாக்கினார் நம்முடைய போலீஸ் நண்பர் ஒருவர்.
''போலீஸ் துறையில் ரகசிய தகவல்களை திரட்டுவதற் காக 'ரகசியப் பணிச் செலவு' என்ற வகையில் அரசு ஆண்டுதோறும் பணம் ஒதுக்கி வருகிறது. உளவுத் தகவல்கள் திரட்டுவது, குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளைப் பற்றி துப்பு கொடுக்கும் இன்ஃபார்மர்களுக்கு பணம் செலவழிப்பது போன்றவற்றுக்குத்தான் இந்தப் பணம். காவல்துறையின் மிக முக்கியமான 27 பிரிவுகளுக்கு இப்படி ரகசியப் பணிச் செலவுக்கு பணம் ஒதுக்கப்படுகிறது. இதில்தான் ஊழல் நடக்கிறது'' என்றார் அந்த நண்பர்.
கீழ்நிலை காக்கிகள் வட்டாரத்தில் விசாரணையில் இறங்கினோம். ''பொதுவாக அரசாங்கத்தின் மற்ற துறைகளில் அதிகாரிகளோ, ஊழியர்களோ வெளியூர் பயணம் மேற்கொண்டால் அந்தத் தொகைக்கு உரிய பில்லோ,
வவுச்சரோ இல்லாமல் அரசிடமிருந்து பணம் வாங்கிவிட முடியாது. ஆனால், போலீஸ் துறையில் இன்ஃபார்மர்கள் மூலம் சேகரிக்கும் தகவல்களுக்காக செய்யப்படும் செலவில் மேற்கண்ட கட்டுப்பாடுகள் கிடையாது. காரணம், ரகசியத்தைக் காக்க வேண்டுமென்பதுதான்! அதனால், ஒரு வெள்ளைத் தாளில் இவ்வளவு செலவானது என்று வெறுமனே எழுதிக் கொடுத்தாலே பணம் கிடைத்துவிடும். இதை சாதகமாக்கிக் கொண்டுதான் 'ரகசியப் பணிச் செலவு' பணத்தை போலீஸ் அதிகாரிகள் கணக்கு வழக்கு இல்லாமல் ஏப்பம் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் சோர்ஸ்களுக்கும் இன்ஃபார்மர்களுக்கும் இந்த வகையில்பணம் வழங்கப்படும். இதையும் அதிகாரிகள் விழுங்கி விடுகிறார்கள். உண்மையில், மேற்படி சோர்ஸ் களிடமிருந்து தகவல்கள் சேகரிப்பது கீழ்நிலை போலீஸ்காரர்களான நாங்கள்தான். ஆனால், எங்களுக்கு இந்தப் பணத்தில் இருந்து நயா பைசாகூட தேறாது'' என தங்கள் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தார்கள்.
உளவுத்துறை போலீஸாரும்கூட, ''எதிர்க்கட்சி பிரமுகர் களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து சொல்வதற்கு நாங்கள் சிலரை சோர்ஸ்களாக வைத்திருப்போம். அவர் களுக்குத் தேவையான பணத்தை நாங்கள்தான் செலவு செய்வோம். ஆனால், உயர் அதிகாரிகள் இதற்கான பணத்தை தராமல் அவர்களே எடுத்துக் கொள்வார்கள்'' என்கிறார்கள்.
கருத்துரிமைக்கான மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு அமைப்பாளரும் சிந்தனை யாளருமான அ.மார்க்ஸிடம் இதுபற்றிப் பேசினோம். ''ராணுவம்,
|
Comments