Skip to main content

ராசா மீது ந‌ட‌வ‌டிக்கையா? க‌ருணாநிதி பேட்டி

முத‌ல்வ‌ர் கருணாநிதி இன்று (டிச‌ம்ப‌ர் 20) சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கேள்வி: சி.பி.ஐ. சார்பில் இரண்டாவது முறையாக தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் ராஜா நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் எல்லாம் சோதனை நடைபெற்றுள்ளதே?

பதில்: இன்றைக்கா சோதனை நடந்துள்ளது. உங்கள் வீட்டில் ஏதோ சோதனை நடந்ததைப் போல பதற்றம் காட்டுகிறீர்களே?


கேள்வி: இந்தச் சோதனையை தி.மு.க.விற்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதுகிறீர்களா?

பதில்: அவமரியாதைகளையெல்லாம் தாங்கி வளர்ந்த இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்.

கேள்வி: ராஜாவிற்கு சி.பி.ஐ. சார்பில் இன்றைக்கு “சம்மன்” அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறதே?

பதில்: அது அவர்களுடைய வழக்கமான பாணி. இது போன்ற விஷயங்களில் சோதனைகள் நடைபெற்ற பிறகு கேள்விகள் கேட்பது வழக்கம். அந்த முறையில் கேள்விகளை அவர்கள் கேட்கக் கூடும். அதற்கு அவர் பதில் சொல்லுவார்.

கேள்வி: தி.மு.க.விற்கும் காங்கிரசுக்கும் உறவு எப்படி உள்ளது?

பதில்: உங்களால் வெட்ட முடியாது.

கேள்வி: ராஜா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்: குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை உண்டு என்று முன்பே கூறியிருக்கிறேன்.

கேள்வி: அமைச்சர் பூங்கோதையும் நீரா ராடியாவும் தொலைபேசியில் பேசியதைப் பற்றி?

பதில்: இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அதில் உங்களுக்கென்ன? அந்த அம்மையார் ஒரு வட நாட்டுப் பெண்மணி. இவர் தென் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி.

கேள்வி: சோனியா காந்தி நேற்று பேசும்போது ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பேசியிருக்கிறாரே?

பதில்: அதற்காக நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.

Comments

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா...

காஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை

1. சோழிங்கநல்லூர் தொகுதி தாம்பரம் தாலுக்கா: நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி, செம்மஞ்சேரி மற்றும் உத்தண்டி கிராமங்கள். புழதிவாக்கம் (உள்ளகரம்) (பேரூராட்சி), பெருங்குடி (பேரூராட்சி), கொட்டிவாக்கம் (சென்சஸ் டவுன்), ஈஞ்சம்பாக்கம் (சென்சஸ் டவுன்), பாலவாக்கம் (சென்சஸ் டவுன்), நீலாங்கரை (செசன்ஸ் டவுன்), ஒக்கியம்துரைப்பாக்கம் (சென்சஸ் டவுன்), பள்ளிக்கரணை (பேரூராட்சி), மடிப்பாக்கம் (செசன்ஸ் டவுன்), ஜல்லடியன்பேட்டை (செசன்ஸ் டவுன்) மற்றும் சோழிங்கநல்லூர் (பேரூராட்சி)