Skip to main content

பிரதமர் கலந்து கொள்ளும் தமிழக அரசு விழா திடீர் ரத்து

சென்னை அடையாறு ஏரியாவில் உள்ள பூங்காவை பல கோடி ரூபாய் செலவில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு மேம்படுத்தி வருகிறது. 'அடையாறு பூங்கா' என்ற பெயரில் அமைக்கப்பட்ட இந்த பூங்காவை பிரதமர் மன்மோகன் சிங் ஜனவரி 3ம் தேதி திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்து ராசா அமைச்சர் பதவி ராஜினாமா வரை போன நிலையில் இந்த விழா எதிர்ப்பார்ப்பை கூட்டியிருந்தது. ஆனால் திடிரென்று இந்த நிகழ்ச்சியை பிரதமர் மன்மோகன் சிங் ரத்து செய்திருக்கிறார்.


இந்த பூங்காவை பிரதமர் மன்மோகன் சிங்தான் திறந்து வைக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பே தமிழக அரசின் சார்பில் தேதி எல்லாம் வாங்கப்பட்டது. இதற்காக சில மாதங்கள் முன்பு டெல்லி வரை போய் பிரதமரை சந்தித்து பூங்கா திறப்பு விழாவிற்கு ஒப்புதல் எல்லாம் வாங்கி வந்தார் முதல்வர் கருணாநிதி.  ஸ்பெக்டரம் விவகாரம் சுப்ரீம் கோர்ட் வரை போய் நாடாளுமன்றமே நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, சி.பி.ஐ. ரெய்டு, விசாரணை என்று ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இந்த விழா ரத்து செய்யப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்புகின்றன.

இதுபற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு:
சுற்றுச் சூழல் பூங்காவைத் திறந்து வைப்பதற்காக பிரதமரை  தமிழக அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  த‌மிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மைக் குழுமம் இந்த பூங்காவை அமைப்பதற்கான தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு ஏற்கனவே அனுப்பியிருந்தது. ஆனால் மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் தற்பொழுதுவரை பெறப்படாததால் பிரதமர் ஜனவரி 3ம் தேதி இந்திய அறிவியல் மாநாட்டில் பங்கற்பதற்காக சென்னை வரும் போது பூங்கா திறப்பு நிகழ்ச்சியை சேர்க்கவில்லை. எனவே சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்கப்பெற்ற பின்பு இந்த பூங்கா திறந்து வைக்கப்படும் என்று செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

விழாவிற்காக அழைப்பிதழ்கள் எல்லாம் தயாரிக்கப்பட்டு பூங்காவை திறப்பதற்காக இறுதிக்கட்ட வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது இப்படி விழா ரத்து செய்வதற்கு காரணம் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்குள் நடக்கும் உரசல்கள்தான் என்று சொல்லப்படுகின்றன.

ராகுல் காந்தி கடந்த வாரம் தமிழகம் வந்து போனார். அதற்கு முன்பு தி.மு.க.வை விமர்ச்சித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதற்கு வீரபாண்டி ஆறுமுகம் பதிலடி கொடுத்திருந்தார். இதற்கும் இளங்கோவன் சளைக்காமல் பதில் சொன்னார்.  என்னவோ தெரியவில்லை. கூட்டணி இடியாப்ப சிக்கலை விட மோசமாகதான் இருக்கிறது.

Comments

butterfly Surya said…
கூட்டணி இப்போது உடையாது. புலி வாலை பிடித்த கதையாகதான் தி.மு.க. இப்போது இருக்கிறது. மத்திய அரசுக்கு தி.மு.க. வாபஸ் வாங்கினால் தமிழகத்தில் காங்கிரஸ் தயவில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசு கவிழும். ஜனாதிபதி ஆட்சி வரும்.

ஜனாதிபதி ஆட்சியில் தேர்தல் நடந்தால் தி.மு.க. ஜெயிக்க முடியுமா? என்ன நடந்தாலும் தாங்கிக் கொண்டுதான் இருப்பார் கருணாநிதி

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா...

காஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை

1. சோழிங்கநல்லூர் தொகுதி தாம்பரம் தாலுக்கா: நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி, செம்மஞ்சேரி மற்றும் உத்தண்டி கிராமங்கள். புழதிவாக்கம் (உள்ளகரம்) (பேரூராட்சி), பெருங்குடி (பேரூராட்சி), கொட்டிவாக்கம் (சென்சஸ் டவுன்), ஈஞ்சம்பாக்கம் (சென்சஸ் டவுன்), பாலவாக்கம் (சென்சஸ் டவுன்), நீலாங்கரை (செசன்ஸ் டவுன்), ஒக்கியம்துரைப்பாக்கம் (சென்சஸ் டவுன்), பள்ளிக்கரணை (பேரூராட்சி), மடிப்பாக்கம் (செசன்ஸ் டவுன்), ஜல்லடியன்பேட்டை (செசன்ஸ் டவுன்) மற்றும் சோழிங்கநல்லூர் (பேரூராட்சி)