Skip to main content

பிரதமர் கலந்து கொள்ளும் தமிழக அரசு விழா திடீர் ரத்து

சென்னை அடையாறு ஏரியாவில் உள்ள பூங்காவை பல கோடி ரூபாய் செலவில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு மேம்படுத்தி வருகிறது. 'அடையாறு பூங்கா' என்ற பெயரில் அமைக்கப்பட்ட இந்த பூங்காவை பிரதமர் மன்மோகன் சிங் ஜனவரி 3ம் தேதி திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்து ராசா அமைச்சர் பதவி ராஜினாமா வரை போன நிலையில் இந்த விழா எதிர்ப்பார்ப்பை கூட்டியிருந்தது. ஆனால் திடிரென்று இந்த நிகழ்ச்சியை பிரதமர் மன்மோகன் சிங் ரத்து செய்திருக்கிறார்.


இந்த பூங்காவை பிரதமர் மன்மோகன் சிங்தான் திறந்து வைக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பே தமிழக அரசின் சார்பில் தேதி எல்லாம் வாங்கப்பட்டது. இதற்காக சில மாதங்கள் முன்பு டெல்லி வரை போய் பிரதமரை சந்தித்து பூங்கா திறப்பு விழாவிற்கு ஒப்புதல் எல்லாம் வாங்கி வந்தார் முதல்வர் கருணாநிதி.  ஸ்பெக்டரம் விவகாரம் சுப்ரீம் கோர்ட் வரை போய் நாடாளுமன்றமே நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, சி.பி.ஐ. ரெய்டு, விசாரணை என்று ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இந்த விழா ரத்து செய்யப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்புகின்றன.

இதுபற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு:
சுற்றுச் சூழல் பூங்காவைத் திறந்து வைப்பதற்காக பிரதமரை  தமிழக அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  த‌மிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மைக் குழுமம் இந்த பூங்காவை அமைப்பதற்கான தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு ஏற்கனவே அனுப்பியிருந்தது. ஆனால் மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் தற்பொழுதுவரை பெறப்படாததால் பிரதமர் ஜனவரி 3ம் தேதி இந்திய அறிவியல் மாநாட்டில் பங்கற்பதற்காக சென்னை வரும் போது பூங்கா திறப்பு நிகழ்ச்சியை சேர்க்கவில்லை. எனவே சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்கப்பெற்ற பின்பு இந்த பூங்கா திறந்து வைக்கப்படும் என்று செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

விழாவிற்காக அழைப்பிதழ்கள் எல்லாம் தயாரிக்கப்பட்டு பூங்காவை திறப்பதற்காக இறுதிக்கட்ட வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது இப்படி விழா ரத்து செய்வதற்கு காரணம் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்குள் நடக்கும் உரசல்கள்தான் என்று சொல்லப்படுகின்றன.

ராகுல் காந்தி கடந்த வாரம் தமிழகம் வந்து போனார். அதற்கு முன்பு தி.மு.க.வை விமர்ச்சித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதற்கு வீரபாண்டி ஆறுமுகம் பதிலடி கொடுத்திருந்தார். இதற்கும் இளங்கோவன் சளைக்காமல் பதில் சொன்னார்.  என்னவோ தெரியவில்லை. கூட்டணி இடியாப்ப சிக்கலை விட மோசமாகதான் இருக்கிறது.

Comments

butterfly Surya said…
கூட்டணி இப்போது உடையாது. புலி வாலை பிடித்த கதையாகதான் தி.மு.க. இப்போது இருக்கிறது. மத்திய அரசுக்கு தி.மு.க. வாபஸ் வாங்கினால் தமிழகத்தில் காங்கிரஸ் தயவில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசு கவிழும். ஜனாதிபதி ஆட்சி வரும்.

ஜனாதிபதி ஆட்சியில் தேர்தல் நடந்தால் தி.மு.க. ஜெயிக்க முடியுமா? என்ன நடந்தாலும் தாங்கிக் கொண்டுதான் இருப்பார் கருணாநிதி

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...

திருவண்ணாமலை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. செங்கம் (தனி) தொகுதி செங்கம் தாலுக்கா (பகுதி) குப்பநத்தம், பரமனந்தல், தீத்தாண்டப்பட்டு, வளயெம்பட்டு, புதுப்பட்டு, ஆலப்புத்தூர், குயிலம், அன்வராபாத், செ.நாச்சிப்பட்டு, காயம்பட்டு, சென்னசமுத்திரம், பக்கிரிப்பாளையம், அரசன்கன்னி, மேல்செங்கம், மேல்செங்கம் (ஆர்.எப்), அந்தனூர், மேல்புலதியூர், பெரும்பட்டம், மண்மலை, கரியமங்கலம், பிஞ்சூர், வேடங்குப்பம், மேல்பள்ளிப்பட்டு, மேல்வணக்கம்பாடி, ஆனந்தவாடி (ஆர்.எப்), ஆனந்தவாடி, கட்டமடுவு, நரடாப்பட்டு, மேல்ராவந்தவாடி, கரியமலைப்பாடி, ஆண்டிப்பட்டி, தம்புநாய்க்கன்பட்டி, மண்ணாண்டிப்பட்டி, பொரசப்பட்டு, தாழையூத்து, அரட்டவாடி, அரியாகுஞ்சூர், சொரப்பனந்தல், மேல்பொஎன்னாத்தூர், உச்சிமலைக்குப்பம், விண்ணவனுர், பாய்ச்சல், நல்லூர், கண்ணக்குருக்கை, சின்னகோளப்பாடி, பாலியப்பட்டு, அஸ்வனகாசுருணை, பெரியகோளப்பாடி, பீமானந்தல், மேல்கரிப்பூர், கோழுந்தம்பட்டு, சாத்தனூர், சாத்தனூர் அணை, நீப்பத்துறை, வெள்ளாலம்பட்டி, இளங்குன்னி, குருமப்பட்டி, கல்லடாவி, மணிக்கல், புளியம்பட்டி, கருங்காலிப்பாடிபட்டி, வேப்பூர்செக்கடி, வீரணம், தரடாப்பட்டு, கணக்கந்தல், நெடுங்கவாடி, செ.அகரம், பெரும்பாக...