Skip to main content

தீர்ப்பை மாற்றிய நாட்டாமை!‘‘

‘‘சாகும் வரை தி.மு.க.வில்தான் இருப்பேன். என் உடலில் தி.மு.க. கொடிதான் போர்த்தப்படும்.’’  2006 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு நடந்த தி.மு.க. மண்டல மாநாட்டில் இப்படி முழுங்கினார் திரைப்பட நடிகர் சரத்குமார். அடுத்து சில நாட்களில் தி.மு.க.வில் இருந்து விலகினார். அதே சூட்டோடு அ.தி.மு.க.வில் தஞ்சமடைந்தார். 2006 சட்டசபைத் தேர்தலில் நடந்த மிகப் பெரிய கூத்து இது.

‘நாட்டாமை’ படம் வெளிவந்த சமயத்தில் சரத்குமார் அ.தி.மு.க.வின் விசுவாசியாகதான் இருந்தார். அந்த படத்தின் வெற்றி விழாவில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டார். இரட்டை இலை சின்னம் பொறித்த கோர்ட் சூட்டோடு அந்த விழாவில் கலந்து கொண்டு அ.தி.மு.க. பாசத்தை வெளிக்காட்டினார். அதன் பிறகு, ஏற்பட்ட பிணக்கு காரணமாக அ.தி.மு.க.விலிருந்து தனது விசுவாசத்தைத் தி.மு.க.வுக்கு மாற்றிக் கொண்டார் நாட்டாமை. தி.மு.க.வில் சேராவிட்டாலும் 1996 தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.வுக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு அந்த கட்சியில் இணைந்தார். தி.மு.க. எம்.பி.யாகவும் ஆக்கப்பட்டார். மத்திய அமைச்சரவையில் தன்னை சேர்க்கவில்லை என்கிற வருத்தத்தில் இருந்தார். தி.மு.க.வில் இருந்து பிரிந்து வந்த ‘சுப்ரீம் ஸ்டார்’ தி.மு.க.வுக்கு எதிராக அதிரடி ஆக்ஷன் காட்டினார். அதுவரையில் கலைஞரை ‘அப்பா’ என்று அழைத்த சரத்குமார் அவரை கழற்றிவிட்டு அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி ஜெயலலிதாவை ‘அம்மா’ என்று அழைத்தார். தேனி மாவட்டத்தில் பிரசாரத்தில் இருந்த ஜெயலலிதாவை ராதிகாவோடு சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.


தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவியது. அ.தி.மு.க.வில் சில மாதங்கள் மட்டும் வாசம் செய்துவிட்டு அங்கிருந்து மீண்டும் பிரிந்தார் சரத்குமார். கொஞ்ச காலம் வரையில் அரசியல் பக்கம் தலை வைத்து படுக்கவில்லை. விஜயகாந்த் கட்சி தொடங்கிய நிலையில் தனது பங்குக்கு ‘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’ என்கிற பெயரில் புதுக் கட்சிக் கண்டு அதை நடத்திக் கொண்டிருந்த சமயத்தில்தான் 2009 நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. பி.ஜே.பி. கூட்டணியில் அந்த கட்சி சேர்ந்து தோற்றுப் போனது. 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்காக யாரோடு கூட்டு போடலாம் என்று கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார் சரத்குமார்.

தி.மு.க.வில் இருந்து சரத்குமார் பிரிந்து வந்த சமயத்தில் மத்திய அமைச்சரவையில் 7 தி.மு.க. அமைச்சர்கள் இருந்தார்கள் ஆனாலும் அதில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட அமைச்சர் பதவி தரப்படவில்லை என்கிற விமர்சனம் அப்போது எழுந்தது. குறிப்பாக சரத்குமாருக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். சரத்குமாரும் அமைச்சர் பதவி மீது ஒரு கண் வைத்திருந்தார். 2006 சட்டசபைத் தேர்தலில் சரத்குமார் ரசிகர்களுக்கு ஒரு இடம்கூட ஒதுக்கப்படவில்லை என்று சொல்லி குரல் கொடுத்தனர் அவருடைய ஆதரவாளர்கள். தீர்மானம் எல்லாம் போட்டும் அதை தி.மு.க. தலைமை கண்டுகொள்ளவில்லை. இதெல்லாம்தான் தி.மு.க.வை விட்டு சரத்குமார் வெளியேற காரணங்களாக சொல்லப்பட்டன. தி.மு.க.வை தயாநிதி மாறன் முன்னேற்ற கழகம் என்றெல்லாம் சொல்லி 2006 தேர்தலில் பிரச்சாரம் செய்த சரத்குமார் அதன்பிறகு புதுக்கட்சி கண்டவுடன் கருணாநிதியோடு ஓட்டிக் கொண்டிருந்தார்.

என்ன செய்வது. எல்லாம் அரசியல்தான்!

Comments

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா...

காஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை

1. சோழிங்கநல்லூர் தொகுதி தாம்பரம் தாலுக்கா: நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி, செம்மஞ்சேரி மற்றும் உத்தண்டி கிராமங்கள். புழதிவாக்கம் (உள்ளகரம்) (பேரூராட்சி), பெருங்குடி (பேரூராட்சி), கொட்டிவாக்கம் (சென்சஸ் டவுன்), ஈஞ்சம்பாக்கம் (சென்சஸ் டவுன்), பாலவாக்கம் (சென்சஸ் டவுன்), நீலாங்கரை (செசன்ஸ் டவுன்), ஒக்கியம்துரைப்பாக்கம் (சென்சஸ் டவுன்), பள்ளிக்கரணை (பேரூராட்சி), மடிப்பாக்கம் (செசன்ஸ் டவுன்), ஜல்லடியன்பேட்டை (செசன்ஸ் டவுன்) மற்றும் சோழிங்கநல்லூர் (பேரூராட்சி)