Skip to main content

பாதிப்பை ஏற்படுத்தாத பார்வர்டு பிளாக்!

2006 சட்டசபைத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி அதிக எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியது. காரணம் அப்போது அந்த கட்சியின் தலைவராக இருந்த நடிகர் கார்த்திக்தான். கோபாலபுரம், போயஸ் கார்டன் என்று இரண்டு இடங்களிலும் கூட்டணிக்காக அலைந்து கடைசியில் தனியாக களமிறங்கியது பார்வர்டு பிளாக். தென் மாவட்டங்களில் பார்வர்டு பிளாக்குக்கு கனிசமான செல்வாக்கு இருந்த நிலையில் கார்த்திக்கின் வரவும் சேர்ந்து கொள்ள தேர்தலில் பார்வர்டு பிளாக் பாதிப்பை உண்டாக்கலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால் இந்த கணிப்பு பொய்யாகி போனது.


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொகுதியிலும் பார்வர்டு பிளாக் கட்சி களமிறங்கியது. மொத்தம் 60 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகள் உள்பட 12 தொகுதிகள் தனித் தொகுதிகள்.

போட்டியிட்ட 60 இடங்களிலும் மண்ணை கவ்வியது பார்வர்டு பிளாக். ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பார்வர்டு பிளாக் மொத்தம் வாங்கிய ஓட்டுகள் 10 லட்சத்து 33 ஆயிரத்து 369. வாக்கு சதவீதம் வெறும் 1.20தான்.

Comments

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா...