Skip to main content

தொகுதிகள் மறு சீரமைப்பு ஒர் அலசல்

மக்கள் தொகை அடிப்படையில் நாடு முழுவதும் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதிகளை மாற்றியமைக்கும் பணி 2006ம் ஆண்டில் தொடங்கி 2008ம் ஆண்டு வரையில் நடைபெற்று முடிந்தது. இந்திய அரசு நியமித்த ‘தொகுதி மறுசீரமைப்பு ஆணையம்’ இதற்கான பணிகளை மேற்கொண்டது. அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடம் தொகுதிகள் வாரியாக ஆலோசனை மற்றும் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் அடிப்படையில்தான் இந்தியா முழுவதும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்திலும் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்து, முதலில் வரைவு பட்டியல் 2007ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி வெளியிட்டது தேர்தல் கமிஷன். அதன் பிறகு இறுதிப் பட்டியல் வெளியானது.


2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை 6 கோடியே 24 லட்சத்து 5 ஆயிரத்து 679 பேர். ஒரு தொகுதிக்கு 2 லட்சத்து 66 ஆயிரத்து 691 பேர் என்ற அடிப்படையில் தொகுதிகளின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகள் மற்றும் 39 பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வரைவு பட்டியலில் திருவல்லிக்கேணி, சாத்தான்குளம், பத்ம‌நாபபுரம் உட்பட பல தொகுதிகள் வேறு தொகுதிகளுடன் இணைக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. வரைவு பட்டியல் வெளியிட்ட பிறகு கருத்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் என்று பலரும் அந்த கருத்தாய்வு கூட்டங்களில் கருத்துக்களை எடுத்து வைத்தனர்.

இதற்கு பிறகு வரைவு பட்டியலில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து டெல்லியில் தேர்தல் ஆணையம் ஆலோசித்தது. தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி, மறுவரையறை ஆணையத்தின் தலைவர் குல்தீப் சிங் ஆகியோர் தலைமையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் ஆகியோர் 3 கட்டங்களாக விவாதித்தனர். இதன்முடிவில், தொகுதிகளின் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டது. மறு சீரமைப்பு செய்யப்பட்டு, தொகுதிகளின் இறுதி பட்டியல் தமிழ்நாடு அரசிதழில் வெளியானது. மாற்றியமைக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியல் தொடர்பாக மத்திய அமைச்சரவை கூடி விவாதம் நடத்திய பிறகு அந்த பட்டியல் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்கள். ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு மாற்றியமைக்கப்பட்ட தொகுதிகள் இறுதி செய்யப்பட்டன.

அதன்படி தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சிதம்பரம், நாகபட்டினம், நீலகிரி, தென்காசி ஆகிய 7 தொகுதிகள் தனி தொகுதிகளாக அறிவிக்கப்பட்டது. 234 சட்டசபைத் தொகுதிகளில் 44 தொகுதிகள் தாழ்த்தப்பட்டோருக்கான தனித் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டன. ஏற்காடு, சேந்தமங்கலம் ஆகிய இரண்டு தொகுதிகள் பழங்குடியினருக்காக‌ தனித்தொகுதிகளாக ஒதுக்கப்பட்டன.

தமிழ்நாடு முன்பு சென்னை மாகாணமாக இருந்த போது 375 சட்டசபை உறுப்பினர்களைக் உள்ளடக்கியிருந்தது. 1953ம் ஆண்டு அக்டோபர் 1 தேதி ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்ட பின் தொகுதி உறுப்பினர்கள் எண்ணிக்கை 231 ஆக குறைந்தது. 1956 நவம்பர் 1ம் தேதி மலபார் மாவட்டங்கள் கேரளாவுடன் இணைந்த பிறகு தொகுதிகள் 190 ஆக ஆனது. 1956ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி சீரமைப்பு பணியின் போது சென்னை மாகான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 205 ஆக உயர்த்தப்பட்டது.

1959ம் ஆண்டு ஆந்திராவுடன் மேற்கொண்ட எல்லைச் சீரமைப்பினால் சென்னை மாகான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்தது. 1961ம் ஆண்டு இயற்றப்பட்ட ‘இரட்டை உறுப்பினர் தொகுதி’ நீக்கம் சட்டத்தின்படி, 38 இடங்கள் நீக்கப்பட்டன. ஆனால் தொகுதிகளின் எண்ணிக்கையான 206ல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

1965ம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி சீரமைப்பின் போது சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்த்தப்பட்டது. இதில் 42 இடங்கள் எஸ்.சி. பிரிவினருக்கும், இரண்டு தொகுதிகள் எஸ்.டி. பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டது. 1969ம் ஆண்டு ‘சென்னை மாகாணம்’ என்பது ‘தமிழ்நாடு’ என்று மாற்றம் செய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரையில் 234 உறுப்பினர்களுடன் ஒரு நியமன உறுப்பினரையும் கொண்டு செயல்பட்டு வருகிறது தமிழக சட்டமன்றம்.

ஒவ்வொரு தொகுதியிலும் சமமான வாக்காளர்கள் இருக்குமாறு தொகுதிகளை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சீரமைக்க வேண்டியது அவசியமாகும். தேர்தல் ஆணையர் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவர் கொண்ட தொகுதி சீரமைப்புக் குழு இப்பணியை மேற்கொள்ளும். ஆனால் 1976ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டதிருத்தம் மூலம் இப்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. நீண்டகாலமாக தொகுதிகள் சீரமைக்கப்படாததால் தொகுதிகளின் அமைப்பில் மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திவிட்டது. மிக அதிகமான வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக டில்லி புறநகர் தொகுதி இருந்தது. வாக்காளர்களின் எண்ணிக்கை 33,68,399. 39 ஆயிரத்து 33 வாக்களர்களை மட்டுமே கொண்டு மிகக் சிறிய தொகுதியாக இலட்சத் தீவு தொகுதி இருந்தது. நீண்ட வருடங்கள் இடைவெளிக்கு பிறகு 2001ம் ஆண்டு மக்கள் தொகைக்கேற்ப தொகுதிகளை சீரமைக்கும் பணி 2003, டிசம்பர் 31ம் தேதி தொடங்கி நடைபெற்று முடிந்தது.

சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத் தொகுதிகள் மற்றும் தனித் தொகுதிகளின் எல்லைகள், எண்ணிக்கைகள் ஆகியவற்றை வரையறுக்கும் வகையில் 1952ம் ஆண்டு மத்திய அரசு ‘தொகுதி மறுசீரமைப்புச் சட்டம்’ இயற்றியது. தொகுதி மறுசீரமைப்புச் சட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மத்திய அரசால் இயற்றப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசு, இதுவரை நான்கு முறை தனியே சட்டம் இயற்றியிருக்கிறது. முதல் இரண்டு பொதுத் தேர்தலின் போதும் நடைமுறையில் இருந்த ‘இரட்டை வாக்குரிமை’ முறை நீக்கப்பட்டு, தற்பொழுது நடைமுறையில் உள்ள தனித் தொகுதி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ‘தொகுதி மறுசீரமைப்புச் சட்டம் 2002’ அடிப்படையில், உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரை தலைவராகக் கொண்டும், மத்திய தலைமை தேர்தல் ஆணையரையும், மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரையும், மாநில அளவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேரையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேரையும் உறுப்பினர்களாகக் கொண்டு ‘தொகுதி மறுசீரமைப்பு ஆணையம்’ செயல்பட்டது.

Comments

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

காஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை

1. சோழிங்கநல்லூர் தொகுதி தாம்பரம் தாலுக்கா: நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி, செம்மஞ்சேரி மற்றும் உத்தண்டி கிராமங்கள். புழதிவாக்கம் (உள்ளகரம்) (பேரூராட்சி), பெருங்குடி (பேரூராட்சி), கொட்டிவாக்கம் (சென்சஸ் டவுன்), ஈஞ்சம்பாக்கம் (சென்சஸ் டவுன்), பாலவாக்கம் (சென்சஸ் டவுன்), நீலாங்கரை (செசன்ஸ் டவுன்), ஒக்கியம்துரைப்பாக்கம் (சென்சஸ் டவுன்), பள்ளிக்கரணை (பேரூராட்சி), மடிப்பாக்கம் (செசன்ஸ் டவுன்), ஜல்லடியன்பேட்டை (செசன்ஸ் டவுன்) மற்றும் சோழிங்கநல்லூர் (பேரூராட்சி)

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா...