Skip to main content

பிரதமர் கலந்து கொள்ளும் தமிழக அரசு விழா திடீர் ரத்து

சென்னை அடையாறு ஏரியாவில் உள்ள பூங்காவை பல கோடி ரூபாய் செலவில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு மேம்படுத்தி வருகிறது. 'அடையாறு பூங்கா' என்ற பெயரில் அமைக்கப்பட்ட இந்த பூங்காவை பிரதமர் மன்மோகன் சிங் ஜனவரி 3ம் தேதி திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்து ராசா அமைச்சர் பதவி ராஜினாமா வரை போன நிலையில் இந்த விழா எதிர்ப்பார்ப்பை கூட்டியிருந்தது. ஆனால் திடிரென்று இந்த நிகழ்ச்சியை பிரதமர் மன்மோகன் சிங் ரத்து செய்திருக்கிறார்.


இந்த பூங்காவை பிரதமர் மன்மோகன் சிங்தான் திறந்து வைக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பே தமிழக அரசின் சார்பில் தேதி எல்லாம் வாங்கப்பட்டது. இதற்காக சில மாதங்கள் முன்பு டெல்லி வரை போய் பிரதமரை சந்தித்து பூங்கா திறப்பு விழாவிற்கு ஒப்புதல் எல்லாம் வாங்கி வந்தார் முதல்வர் கருணாநிதி.  ஸ்பெக்டரம் விவகாரம் சுப்ரீம் கோர்ட் வரை போய் நாடாளுமன்றமே நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, சி.பி.ஐ. ரெய்டு, விசாரணை என்று ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இந்த விழா ரத்து செய்யப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்புகின்றன.

இதுபற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு:
சுற்றுச் சூழல் பூங்காவைத் திறந்து வைப்பதற்காக பிரதமரை  தமிழக அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  த‌மிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மைக் குழுமம் இந்த பூங்காவை அமைப்பதற்கான தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு ஏற்கனவே அனுப்பியிருந்தது. ஆனால் மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் தற்பொழுதுவரை பெறப்படாததால் பிரதமர் ஜனவரி 3ம் தேதி இந்திய அறிவியல் மாநாட்டில் பங்கற்பதற்காக சென்னை வரும் போது பூங்கா திறப்பு நிகழ்ச்சியை சேர்க்கவில்லை. எனவே சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்கப்பெற்ற பின்பு இந்த பூங்கா திறந்து வைக்கப்படும் என்று செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

விழாவிற்காக அழைப்பிதழ்கள் எல்லாம் தயாரிக்கப்பட்டு பூங்காவை திறப்பதற்காக இறுதிக்கட்ட வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது இப்படி விழா ரத்து செய்வதற்கு காரணம் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்குள் நடக்கும் உரசல்கள்தான் என்று சொல்லப்படுகின்றன.

ராகுல் காந்தி கடந்த வாரம் தமிழகம் வந்து போனார். அதற்கு முன்பு தி.மு.க.வை விமர்ச்சித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதற்கு வீரபாண்டி ஆறுமுகம் பதிலடி கொடுத்திருந்தார். இதற்கும் இளங்கோவன் சளைக்காமல் பதில் சொன்னார்.  என்னவோ தெரியவில்லை. கூட்டணி இடியாப்ப சிக்கலை விட மோசமாகதான் இருக்கிறது.

Comments

butterfly Surya said…
கூட்டணி இப்போது உடையாது. புலி வாலை பிடித்த கதையாகதான் தி.மு.க. இப்போது இருக்கிறது. மத்திய அரசுக்கு தி.மு.க. வாபஸ் வாங்கினால் தமிழகத்தில் காங்கிரஸ் தயவில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசு கவிழும். ஜனாதிபதி ஆட்சி வரும்.

ஜனாதிபதி ஆட்சியில் தேர்தல் நடந்தால் தி.மு.க. ஜெயிக்க முடியுமா? என்ன நடந்தாலும் தாங்கிக் கொண்டுதான் இருப்பார் கருணாநிதி

Popular posts from this blog

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா

திருச்சி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. மணப்பாறை தொகுதி மணப்பாறை தாலுக்கா (பகுதி) புதூர், வையமலைப்பாளையம், வெள்ளாளப்பட்டி, அனியாப்பூர், வீரமலை (ஆர்.எப்), சீகம்பட்டி, உசிலம்பட்டி, பொய்கைமலை (ஆர்.எப்), வடுகப்பட்டி, வேங்கைக்குறிச்சி, அமையபுரம், அமையபுரம் (ஆர்.எப்), நல்லாம்பிள்ளை, ஜை.கோவில்பட்டி, வி.பெரியப்பட்டி, தவளவீரம்படி, முகவனூர் (வடக்கு), முகவனூர் (தெற்கு), செக்கனம், பழையங்கோட்டை, ஐ.ரெட்டியாப்பட்டி, செட்டியாப்பட்டி, மலையாண்டிப்பட்டி, பொய்கைப்பட்டி, சாம்பட்டி, சுலியாப்பட்டி, ஆதம்பட்டி, எப்.கீழையூர், தொட்டியப்பட்டி, தாதனூர், ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகம்பட்டி, பண்ணப்பட்டி, (கிழக்கு), பண்ணப்பட்டி (மேற்கு), அயன்ரெட்டியாப்பட்டி, வையம்பட்டி, மூக்குரெட்டியாப்பட்டி, குமாரவாடி, நடுப்பட்டி, புதுவாடி, புதுக்கோட்டை, பொன்னம்பலப்பட்டி, எலமணம், கண்ணூத்து, குமரிக்கட்டிமலை (ஆர்.எப்), கருப்பூர், புத்தாநத்தம் திருநெல்லிப்பட்டி, வெள்ளையக்கோன்பட்டி, பிராம்பட்டி (வடக்கு), பிராம்பட்டி (தெற்கு), தேனூர், அயன்புதுப்பட்டி, ஊத்துக்குளி, வேம்பனூர், கண்ணுக்குழி, கொடும்பப்பட்டி, பல்லக்குறிச்சி, கலிங்கப்பட்டி கிழக்கு, பழுவஞ்சி மேற்கு, முத்தாழ்வார்பட்டி,