Skip to main content

“கை”யும் கை நழுவிப் போய்விடுமோ.. ஜெயலலிதா அறிக்கை

முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளித்து ஜெயலலிதா இன்று (டிசம்பர் 11) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அறிக்கை விவரம்:

“கை”யும் கை நழுவிப் போய்விடுமோ என்ற அச்சத்தில், தி.மு.க. - காங்கிரஸ் இடையே சிண்டு முடிய நான் முயற்சிப்பதாக ஒரு புனைசுருட்டு அறிக்கையை கருணாநிதி வெளியிட்டு இருப்பது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் ஆகும்.

முதலாவதாக, “ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த போது எப்படி
நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தாரோ, அதே போல் கன மழை காரணமாக தமிழகமே வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் தன்னுடைய அமைச்சரவை சகாக்களுடன் திரைப்பட விழாவில் ஆனந்தமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி” என்று 6.12.2010 மற்றும் 8.12.2010 தேதியிட்ட இரண்டு அறிக்கைகளிலும் நான் குறிப்பிட்டிருப்பதாக தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ள கருணாநிதி, 6ம் தேதி அறிக்கையை எப்படித் தொடங்கினோம் என்பது கூட தெரியாமல் 8ம் தேதி அறிக்கையை தொடங்கி இருப்பதாகத் கூறி இருக்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மைனாரிட்டி தி.மு.க. அரசு நிவாரண உதவிகளை வழங்காதது குறித்து 6.12.2010 அன்று தமிழில் அறிக்கை வெளியிட்டேன். 2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து 8.12.2010 அன்று ஆங்கிலத்திலும், தமிழிலும் அறிக்கை வெளியிட்டேன். 8.12.2010 அன்று வெளியிட்ட அறிக்கையில், “ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த போது எப்படி நீரோ மன்னன் ...” என்ற வாசகத்தை மீண்டும் உபயோகப்படுத்தியதற்கு காரணம், தமிழகத்தில் கருணாநிதியின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது குறித்து தமிழ் தெரியாத மற்ற மாநில மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என்பதை இந்தத் தருணத்தில் கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதை கூட ஒரு முதலமைச்சரால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது வேதனை அளிக்கும் செயல்.

அடுத்தபடியாக, “இந்தி எதிர்ப்புப் போராட்டம்” குறித்து நீட்டி முழக்கி இருக்கிறார் கருணாநிதி. அரசியல் பதவிகளை அடைவதற்காக அன்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கருணாநிதி தான், இன்று ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக தமிழினத்தையே அழித்தார். கருணாநிதியின் இந்தி எதிர்ப்பு என்பது ஊருக்கு உபதேசம். கருணாநிதியைப் பொறுத்த வரையில் இந்தி எதிர்ப்பு, தமிழ்ப் பற்று என்பதெல்லாம் வெளி வேஷம். ஆட்சி அதிகாரத்திற்காக, தன்னுடைய நிலையை காலத்திற்கேற்றாற் போல் மாற்றிக் கொள்ளும் தன்மையை உடையவர் கருணாநிதி. கருணாநிதியின் எந்தப் போராட்டத்தையும் தமிழக மக்கள் நம்பத் தயாராக இல்லை.

கடைசியாக, தி.மு.க.விற்கும், காங்கிரசுக்கும் இடையே கலகமூட்டும் முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறார் கருணாநிதி.இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. கருணாநிதி தெரிவித்த கருத்தைத்தான் நான் குறிப்பிட்டு இருந்தேன். இளைஞன் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி, “ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் என்று சொல்லும் போது, அது எவ்வளவு பெரிய தொகை, அந்தத் தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா?” என்று பேசி இருக்கிறார் கருணாநிதி. கருணாநிதியின் மேற்படி பேச்சு 6.12.2010 முரசொலியில் வெளியாகி இருக்கிறது.

இதே போன்று, ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று விட்டதாக பத்திரிகைகள் தானே பூதாகரமாக ஆக்குகின்றன? என்று தனக்குத்தானே ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டு, அதற்கு, “ஒரு சில பத்திரிகைகளும், ஒரு சில
எதிர்க்கட்சிக்காரர்களும்தான் பூதாகரமாக இந்தப் பிரச்சினையை ஆக்கி, ஒரு லட்சத்து
76 ஆயிரம் கோடி ரூபாயை ஏதோ ஒரு தனிப்பட்ட நபர் அப்படியே அவருடைய வீட்டிற்குத் தூக்கிக் கொண்டு போய்விட்டதைப் போலவும், அந்தத் தொகையை ஒரு சிலர் பங்கிட்டுக் கொண்டதைப் போலவும், அதற்காக பாராளுமன்றத்தையே நடத்தவிட மாட்டோம் என்றும் பேசினார்கள், எழுதினார்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார் கருணாநிதி. கருணாநிதியின் மேற்படி கேள்வி-பதில் 7.12.2010 அன்று முரசொலியில் வெளியாகியிருக்கிறது. இதிலிருந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவுக்கு மட்டும் பங்கில்லை, மற்றவர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதை இரண்டு முறை கூறி இருக்கிறார் கருணாநிதி என்பது தெளிவாகிறது.இதைத் தான் நான் குறிப்பிட்டேன்.

ஆனால், நேற்றைய அறிக்கையில், “இளைஞன்” திரைப்பட விழாவில்,
“ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 352 கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய தொகை, அந்தத் தொகையை ஊழல் செய்திருக்க முடியுமா?” என்று தான் பேசியதாகவும், இதை வைத்து தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நான் சிண்டு முடியப் பார்ப்பதாகவும் கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிறார். நேற்றைய அறிக்கையில் ஓர் உண்மையை கருணாநிதி மறைத்துவிட்டார். அதாவது, நேற்றைய அறிக்கையில், “இளைஞன்” திரைப்பட விழாவில் தான் சொன்ன “ஒருவர்” என்ற வார்த்தையை தனக்கு வசதியாக எடுத்துவிட்டார் கருணாநிதி. பொய்யும், புளுகும், புனைசுருட்டும் கருணாநிதிக்கு கை வந்த கலை என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை.

மொத்தத்தில், காங்கிரசை கருணாநிதி மிரட்டிய காலம் போய், காங்கிரசை கண்டு கருணாநிதி அஞ்சுகின்ற காலம் வந்துவிட்டது என்பது கருணாநிதியின் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. தனது ஆட்சி அழியப் போவதை நினைத்து பிதற்றுகிறார் கருணாநிதி. என்னதான் புலம்பினாலும், ஆட்சி வீழ்வது உறுதி.

Comments

உண்மையில் பயனுள்ள வலைபூ. தொடருங்கள்...

Popular posts from this blog

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி