Skip to main content

அரசியல் தீ பற்ற வைத்த படம் !

காத்மா காந்தி, ராஜாஜி, திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், பெரியார், அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், காயிதேமில்லத் முகம்மது இஸ்மாயில், எம்.ஜி.ஆர் ஆகிய 10 பேர் படங் களுக்கு மட்டும் தமிழக சட்டசபையில் நிரந்தர இடம் உண்டு. இந்த வரிசையில் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தையும் வைக்க, தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதைக் கண்டித்து, 'கருணாநிதியின் படத்தை வைக்கக் கூடாது' என்று காட்டமாக அறிக்கை விட்டிருக்கும் ஜெயலலிதா, ''அடுத்து அதி.மு.க. ஆட்சிக்கு வரும்போது இந்த மரபுமீறிய செயல்கள் மாற்றி அமைக்கப்படும்!'' என்றும் காரம் வீசியிருக் கிறார்.
இதுபற்றி சட்டசபை செயலக வட்டாரத்தில் விசாரித்தோம். ''சட்டசபையில் முதன்முதலாக காந்தி உருவப்படத்தை, ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்தபோது 24.7.1948-ல் திறந்து வைத்தார். 'வாழ்க நீ எம்மான்' என்கிற பாடலை எம்.எஸ்.சுப்பு லட்சுமி பாட... சர்.முத்தையா செட்டியார் வழங்கிய காந்தி படம் திறக்கப்பட்டது. பிறகு ராஜாஜியின் படத்தை பிரதமராக இருந்த நேரு திறந்தார். அதைத்தொடர்ந்து, திருவள்ளுவர் படத்தை 22.3.1964-ல் அப்போதைய துணை ஜனாதி பதி ஜாகீர் உசேன் திறந்தார். அண்ணா முதல்வராக இருந்தபோதே மறைந்துவிட... முதல்வராக அமர்ந்த கருணாநிதி, 1969-ம் ஆண்டு 
பிப்ரவரி 10-ம் தேதி அண்ணாவின் உருவப்படத்தை பிரதமராக இருந்த இந்திரா காந்தி திறந்துவைத்தார். காமராஜர் படத்தை 18.8.77-ல் ஜனாதிபதியாக இருந்த நீலம் சஞ்சீவ ரெட்டி சட்டசபையில் திறந்தார். பெரியார், அம்பேத்கர், பசும்பொன் தேவர், காயிதேமில்லத் ஆகியோரின் படங்கள், எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 9.8.80-ல் கேரள கவர்னர் ஜோதி வெங்கடா சலத்தால் திறக்கப்பட்டன. ஜெயலலிதா முதல் முறை முதல்வரானபோது, 31.1.92-ல் எம்.ஜி.ஆர் படம் திறக்கப்பட்டது. இதில், உயிருடன் இருந்தபோது படம் திறக்கப்பட்ட ஒரே தலைவர் என்றால்... அது ராஜாஜிதான். இப்போது அந்த வரிசையில் கருணாநிதியும் சேரப் போகிறார்...!'' என்றார்கள்.
அ.தி.மு.க. முன்னணித் தலைவர்களிடம் பேசியபோது, ''சட்ட சபையில் 50 ஆண்டுகள் பணியாற்றியதற்காக கடந்த 2007-ம் ஆண்டில் சட்டசபையில் கருணாநிதியின் பொன்விழாவை கொண்டாடினார்கள். அதற்கே சில எதிர்ப்புகள் தெரிவித்தோம். இப்போதும் அதே காரணத்தை சொல்லித்தான் கேபினெட் மீட்டிங்கில் தீர்மானம் போட்டிருக்கிறார்கள். அவர் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு எம்.ஏல்.ஏ-வாக இருந்தது கிடையாது என்பதுதான் சரியான விவரம். 1984, 1991-ம் ஆண்டுகளில் ஜனநாயக கடமையை ஆற்றாமல், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். 2001-2006 அ.தி.மு.க. ஆட்சியில் சட்டசபைக்கே வரவில்லை. அ.தி.மு.க கணக்குப்படி, அவர் 38 ஆண்டுகள்தான் சட்டசபையில் கழித்திருக்கிறார். அப்படியிருக்க அவருக்கு படத் திறப்பு மூலம் சிறப்பு செய்வதை ஏற்கமுடியாது..'' என்றார்கள்.
தி.மு.க. அமைப்பு செயலாளரும் எம்.பி-யுமான டி.கே.எஸ்.இளங்கோவன் நம்மிடம், ''சட்டசபையில் முன்பு எம்.ஜி.ஆர். படத்திறப்பு விழா நடந்தபோது, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த ஜெயலலிதா இப்போது மரபைப் பற்றி பேசுகிறார். சாத்தான் வேதம் ஓதக்கூடாது..! அதே விழாவில் துணை சபாநாயகர் இருக்கையில், தோழி சசிகலாவை உட்கார வைத்தவர் ஜெயலலிதா. அப்படிப்பட்டவர், கலைஞரின் படத் திறப்பு பற்றி கேள்வி கேட்கவே தகுதியில்லாதவர். 1957-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறார் கலைஞர். 'நான் ஆட்சிக்கு வந்தால் படத்தை நீக்குவேன்' என்று சொல்வது, பொறாமையின் வெளிப்பாடு; அற்பச் செயல். சட்டமன்ற சரித்திரத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி சிறப்பு சேர்த்து வரும் கலைஞரின் படத்தைத் திறக்க எல்லா தகுதியும் உண்டு!'' என்றார்.
- எம்.பரக்கத் அலி

கட்டுரையின் ஒர்ஜினலை பார்க்க
https://www.vikatan.com/juniorvikatan/2010-mar-17/sensation/51778.html

Comments

Popular posts from this blog

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா

திருச்சி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. மணப்பாறை தொகுதி மணப்பாறை தாலுக்கா (பகுதி) புதூர், வையமலைப்பாளையம், வெள்ளாளப்பட்டி, அனியாப்பூர், வீரமலை (ஆர்.எப்), சீகம்பட்டி, உசிலம்பட்டி, பொய்கைமலை (ஆர்.எப்), வடுகப்பட்டி, வேங்கைக்குறிச்சி, அமையபுரம், அமையபுரம் (ஆர்.எப்), நல்லாம்பிள்ளை, ஜை.கோவில்பட்டி, வி.பெரியப்பட்டி, தவளவீரம்படி, முகவனூர் (வடக்கு), முகவனூர் (தெற்கு), செக்கனம், பழையங்கோட்டை, ஐ.ரெட்டியாப்பட்டி, செட்டியாப்பட்டி, மலையாண்டிப்பட்டி, பொய்கைப்பட்டி, சாம்பட்டி, சுலியாப்பட்டி, ஆதம்பட்டி, எப்.கீழையூர், தொட்டியப்பட்டி, தாதனூர், ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகம்பட்டி, பண்ணப்பட்டி, (கிழக்கு), பண்ணப்பட்டி (மேற்கு), அயன்ரெட்டியாப்பட்டி, வையம்பட்டி, மூக்குரெட்டியாப்பட்டி, குமாரவாடி, நடுப்பட்டி, புதுவாடி, புதுக்கோட்டை, பொன்னம்பலப்பட்டி, எலமணம், கண்ணூத்து, குமரிக்கட்டிமலை (ஆர்.எப்), கருப்பூர், புத்தாநத்தம் திருநெல்லிப்பட்டி, வெள்ளையக்கோன்பட்டி, பிராம்பட்டி (வடக்கு), பிராம்பட்டி (தெற்கு), தேனூர், அயன்புதுப்பட்டி, ஊத்துக்குளி, வேம்பனூர், கண்ணுக்குழி, கொடும்பப்பட்டி, பல்லக்குறிச்சி, கலிங்கப்பட்டி கிழக்கு, பழுவஞ்சி மேற்கு, முத்தாழ்வார்பட்டி,