Skip to main content

தேர்தல் “கவுண்ட் டவுன்”: ஜெவுக்கு கருணாநிதி பதில்

தி.மு.க‌. எம்.பி.க‌ள் கூட்ட‌ம் அறிவால‌ய‌த்தில் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது. கூட்டம் முடிந்து முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும், சர்வ தேச நாடுகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும், ஐ.நா. சபைக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் கூட இலங்கை அதிபர் நிறைவேற்றவில்லை என்று எல்லோரும் சொல்கிற சூழ்நிலையில் மத்திய வெளி உறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ் அவர்கள் உங்களை வந்து பார்த்தார்கள். அதன் தொடர்ச்சியாக ஏதாவது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா?


பதில்: இதே கருத்தை நான் நிருபமா ராவ் என்னைச் சந்தித்த போது அவர்களிடம் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன். அவர்களும் அதை மத்தியிலே உள்ளவர்களிடம் தெரிவித்து நான் கேட்டுக் கொண்டுள்ளவாறு அங்குள்ள நிலவரங்களை அறியவும் - இலங்கை அரசு வழங்கியுள்ள வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளவும் முயற்சிகளை மேற் கொள்வதாக உறுதியளித்திருக்கிறார்கள். அதற்கான தூதுக் குழு ஒன்று அல்லது தூதுவர் ஒருவர் விரைவில் அனுப்பப்படுவார் என்பதை என்னிடத்திலே உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

கேள்வி: அந்தத் தூதுக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராவது இடம் பெறுவார்களா?

பதில்: இல்லை.

கேள்வி: சில கட்சிகள் தூதரை அனுப்புவதை விட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி அங்கேயுள்ள நிலவரத்தை ஆராயலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். வேறு சில கட்சிகள் தூதரை அனுப்புவதே தேவையற்ற ஒன்று என்று சொல்லியிருக்கிறார்கள்.

பதில்: இதற்கு நான் என்ன செய்ய முடியும்? இவைகள் எல்லாம் செய்திகள்.

கேள்வி: நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்துவது பற்றி தி.மு.க.வின் கருத்து என்ன? டெல்லியிலே உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கூட ஊதியத்தை உயர்த்தியிருக்கிறார்கள். தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் யாராவது உங்களைச் சந்தித்துக் கேட்டார்களா?

பதில்: இன்றைய கூட்டத்தில் ஊதிய உயர்வு பற்றி விவாதிக்கவில்லை. அவர்களுக்கு நியாயமான அளவுக்கு ஊதியம் கொடுப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை.

கேள்வி: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறாரே?

பதில்: அதெல்லாம் முடிந்து போன விவகாரம்.

கேள்வி: தமிழ்நாட்டில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணியைப் பற்றி காங்கிரசிலே உள்ள யாருக்கும் அதைப்பற்றி விமர்சிக்க அதிகாரம் தரவில்லை. கட்சியின் தலைமைக்கு எரிச்சல் ஊட்டுகின்ற அளவில் அப்படி பேசுவதற்கு அனுமதி இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் அறிவித்திருக்கிறாரே, அதைப்பற்றி தி.மு.க. என்ன கருதுகிறது?

பதில்: கூட்டணி தர்மத்தைக் கடைப் பிடித்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கேள்வி: சேது சமுத்திரத் திட்டம் தொடர்ந்து தி.மு..க. வலியுறுத்தி வருகின்ற திட்டம். அண்மைக் காலமாக அந்தத் திட்டத்தை கிடப்பிலே போட்டு விட்டார்களே?

பதில்: சாத்திர சம்பிரதாயங்கள் ‍ மூட நம்பிக்கைகள் ‍ இவைகளின் காரணமாகத்தான் சில நேரங்களில் சேது போன்ற மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட வேண்டிய நிலைமைக்கு உள்ளாகின்றன.

கேள்வி: அ.தி.மு.க. “கவுண்ட் டவுன்” தொடங்கிவிட்டதாக ஜெயலலிதா சொல்றாங்களே?

பதில்: “ரிசல்ட்” வரும்போது எல்லாம் தெரியும்.

கேள்வி: தலைமை தகவல் ஆணையர் தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொள்ளவில்லை. ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கு அவர்கள் விளக்கம் சொல்லியிருக் கிறார்களா?

பதில்: அந்த அம்மையார் முதல் அமைச்சராக இருந்த போது, இதே மாதிரி தலைமை தகவல் ஆணையர் தேர்தலை நடத்தியிருக்கிறார்கள். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பேராசிரியர் அந்தக் கூட்டத்திற்குச் சென்று தன்னுடைய கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். மூன்று பேர் கொண்ட அந்தக் கூட்டத்தில் அப்போது முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவும், அமைச்சர் பொன்னையனும் யாரைத் தேர்வு செய்தார்களோ, அந்தப் பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டு முடிவெடுக்கப்பட்டது. பேராசிரியர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் நாகரிகமாக பெருந்தன்மையோடு அந்தத் தேர்வுக்கு ஒத்துழைத்தார்.

கேள்வி: நேற்று அவர் ஏன் வரவில்லை என்பதற்கு ஜெயலலிதா, அரசுக்கு விளக்கம் தெரிவித்திருக்கிறாரா?

பதில்: அவர் எப்போதுமே காவேரி பிரச்சினைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினால் நானே கைப்பட கடிதம் எழுதுவேன். அவருடைய ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலாளர்தான் கடிதம் எழுதுவார். என்னைப் பொறுத்தவரையில் எந்த அனைத்துக் கட்சிக் கூட்டமாக இருந்தாலும் - எந்தப் பொருள் பற்றிய கூட்டமாக இருந்தாலும் நானே கையெழுத்திட்டு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதுவது வழக்கம். அதைப் போல நான் அந்த அம்மையாருக்கு எழுதியிருக்கிறேன். ஆனால் காவேரி பிரச்சினை ஆனாலும், இலங்கைப் பிரச்சினை ஆனாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினை ஆனாலும் - எந்தப் பிரச்சினை ஆனாலும் அந்தக் கூட்டங்களுக்கு அவர் வரவும் மாட்டார். சில நேரங்களில் கடிதம் எழுதுவார். அந்தக் கடிதத்தில் என்னை அல்லது அரசை தரக் குறைவாகத் தாக்கி அதனால் நான் வரவில்லை என்று சொல்வார்.

கேள்வி: ஜெயலலிதா சமீப காலமாக தி.மு.க. அரசைத் தாக்கி கடுமையாகக் குற்றஞ்சாட்டி பொதுக் கூட்டங்களை, கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறாரே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அவர்கள் கட்சியை வளர்க்க அவர்கள் பாடுபடுகிறார்கள். அவ்வளவு தான்.

கேள்வி: தலைமை தகவல் ஆணையராக யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்? அதற்காக எத்தனை பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள்?

பதில்: அந்தத் தகவல்களை - முழு விவரங்களை நான் சொல்ல விரும்பவில்லை. காரணம் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் முடிவுகள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையில் அந்த விவரங்களை நான் சொல்லக் கூடாது.

கேள்வி: கோவை, திருச்சி நிகழ்ச்சிகளில் ஜெயா கலந்து கொண்ட பிறகு, மக்களின் அலை அ.தி.மு.க. பக்கம் சாய்ந்திருப்பதாக சொல்கிறார்களே?

பதில்: ஒரு சில பத்திரிகைகள் இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதே பத்திரிகைகள்தான் அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு இரண்டு இடம் கூட வராது என்று செய்திகளை வெளியிட்டார்கள். முடிவு உங்களுக்கே தெரியும்.

கேள்வி: எதிர்க்கட்சித் தலைவருக்கு கூடுகின்ற கூட்டத்தைப் பார்த்து......

பதில்: கூட்டப்படுகின்ற கூட்டத்தைப் பார்த்து.......

கேள்வி: புதுவையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்திருப்பதாகவும், அதைப் போல தமிழ்நாட்டிலும் நடத்த வேண்டுமென்று டாக்டர் ராமதாஸ் சொல்கிறாரே?

பதில்: நாங்கள் டாக்டர் ராமதாஸ் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவதாக இல்லை. அவர் சொல்வதில் நல்லவைகளாக இருந்தால் அதைக் கேட்போம். சாதிவாரி கணக்கெடுப்பு தி.மு.க.வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. நாங்களும் அதை வலியுறுத்துகிறோம். அதற்காக அகில இந்திய அளவிலே அந்த முயற்சி நடைபெறும்போது அந்தப் பணி நிறைவேற்றப்படும்போது - அதன் தொடர்ச்சியாக இல்லாமல்; குறுக்கே நாங்கள் தமிழ்நாட்டிலே மாத்திரம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது. அப்படி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆகிற செலவை மத்திய அரசுதான் ஏற்கும். அதற்கான வேண்டுகோளை மத்திய அரசிடம் வைப்போம். இந்தச் சாங்கியங்கள் எல்லாம் நடைபெற்றுத்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆரம்பிக்க முடியும்.

கேள்வி: மதுவிலக்கை அமல்படுத்துவது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்று சொல்லியிருந்தீர்களே?

பதில்: பரிசீலனை செய்வோம் என்றுதான் சொன்னேனே தவிர, எத்தனை நாட்களில் என்று சொல்லவில்லையே?

கேள்வி: நேற்றைய தினம் சில மாற்றுத்திறனாளிகள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதாக எங்களுக்கு ஒரு செய்தி வந்திருக்கிறதே?

பதில்: உடனடியாக விசாரித்து அது உண்மையா என்பதைப் பற்றி அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி: தி.மு.க.வில் புதிய கட்சிகள் ஏதாவது கூட்டணி அமைக்க முன்வருமா?

பதில்: நீங்கள் எல்லாம் சேர்ந்து “நிருபர்கள் கட்சி” என்று ஒன்று ஆரம்பித்து ஒரு கொடியைப் போட்டுக் கொண்டால் உங்களோடு கூட்டணி அமைப்பதைப் பற்றி பேசலாம்.

கேள்வி: அரிசி கடத்தல் பற்றி செய்தி வருகிறதே?

பதில்: அப்படி கடத்துபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதைப் பற்றி நீங்கள் வெளியிடுவதில்லை.

Comments

Unknown said…
//கேள்வி: ஜெயலலிதா சமீப காலமாக தி.மு.க. அரசைத் தாக்கி கடுமையாகக் குற்றஞ்சாட்டி பொதுக் கூட்டங்களை, கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறாரே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: அவர்கள் கட்சியை வளர்க்க அவர்கள் பாடுபடுகிறார்கள். அவ்வளவு தான்//

நீங்கள் உங்கள் கட்சியை வளர்த்த மாதிரிதானே ஐயா !!!

Popular posts from this blog

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி