Skip to main content

எல்.டி.டி.ஈ-யை காட்டி மிரட்டிய தமிழக போலீஸ் அதிகாரி! ஆவணமற்றா அதிசயம்!

2014 மே 21 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் வெளியான கட்டுரை இது !

''என் இரவு தூக்கத்தைத் தமிழக அரசியல்வாதிகள் தொலைத்துவிட்டார்கள்'' - கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த எஸ்.ஒய்.குரைஷி ஆதங்கத்தோடு கொட்டிய வார்த்தைகள் இவை. இப்போது பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட குரைஷி,‘AN UNDOCUMENTED WONDER’ ஆவணமற்ற அதிசயம்) என்ற தலைப்பில் எழுதியிருக்கும் புத்தகம் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. திருமங்கலம் ஃபார்முலா, பண விநியோகம் என தேர்தல் தில்லுமுல்லுகளைத் தோலுரித்திருக்கிறார் குரைஷி. ஆனால், எந்த இடத்திலும் தனிப்பட்ட நபர்களின் பெயரையோ கட்சியின் பெயரையோ நேரடியாக குரைஷி குறிப்பிடவில்லை.



எல்.டி.டி.ஈ-யை காட்டி மிரட்டிய தமிழக போலீஸ் அதிகாரி!

''தேர்தலில் அச்சுறுத்தல்கள் என்பது வெளியில் இருந்து மட்டுமல்ல... அதிகாரிகள் மட்டத்திலும் எதிரொலிக்கின்றன. நடுநிலை தவறும் அதிகாரிகளை உடனே மாற்றிவிடுவோம். 2011 சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்தவர், எஸ்.பி., டி.ஐ.ஜி-க்களை அழைத்து அரசியல் தொடர்பாக பேசிக்கொண்டிருப்பதாக தேர்தல் கமிஷனுக்குத் தகவல் வந்தது. அவருடைய அரசியல் செல்வாக்கால், போலீஸ் அதிகாரிகள் மீது கட்டுப்பாடு இருந்தது; இது ஆளுங்கட்சிக்கு உதவியாக இருக்கிறது என புகார்கள் வந்தன. இதனால், அவரை மாற்ற முடிவெடுத்தோம். சம்மன் அனுப்பி டெல்லிக்கு வரவழைத்து விசாரித்தோம்.

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்குப் பார்வையாளராகப் போகச் சொன்னோம். உடனே அவர், 'தேர்தலைச் சீர்குலைக்கத் தமிழகத்தைத் தாக்க எல்.டி.டி.ஈ திட்டமிட்டிருக்கும் தகவல் உளவுத் துறை மூலம் கிடைத்திருக்கிறது. அதோடு தேசிய தலைவர்கள் மூன்று பேரைத் தாக்கவும் எல்.டி.டி.ஈ திட்டமிட்டிருக்கிறது’ என்று சொன்னார். அது தொடர்பாக முடிவு எடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடியை உருவாக்க முயன்றார். 'தேர்தலில் பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டால் உங்களைத்தான் சந்தேகப்படுவோம்’ என்று சொன்னேன். கடைசியில் அவர்  விடுப்பில் மலேசியா சென்றுவிட்டார். அதன் பிறகு மத்திய உள்துறைச் செயலாளர் கோபால் பிள்ளையை அழைத்து விசாரித்தபோது 'எல்.டி.டி.ஈ மிரட்டல் எல்லாம் பொய். விடுதலைப் புலிகள் பற்றி அவருக்கு எதுவும் தெரிய வாய்ப்பு இல்லை’ என்றார். அதன் பிறகு மூன்று பேர் லிஸ்டில் இருந்து ஒருவரை உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி-யாகத் தேர்வு செய்தோம்'' என திகில் கிளப்பியிருக்கிறார் குரைஷி!


எல்.டி.டி.ஈ-யை காட்டி மிரட்டிய தமிழக போலீஸ் அதிகாரி!

அடுத்து திருச்சியில் ஆர்.டி.ஓ-வாக இருந்த சங்கீதா பற்றி விவரிக்கிறார். ''பஸ்ஸில் 20 கோடி ரூபாய் பணம் கொண்டுசெல்லப்படுவதாக நள்ளிரவு 1.30 மணிக்கு சங்கீதாவுக்கு தகவல் கிடைக்க... உடனே பொன்நகர் ஏரியாவுக்குப் போகிறார் சங்கீதா. அங்கே பஸ்ஸும் இனோவா காரும் நிற்கின்றன. அருகில் இருந்த சி.ஆர்.பி.எஃப் போலீஸ்காரர்களுக்கு தகவல் கொடுக்கிறார் சங்கீதா. அவர்கள் வந்து சேர்வதற்குள் கார் கிளம்பிவிடுகிறது. பஸ்ஸை சோதனையிட்டபோது 5.01 கோடி ரூபாய் சிக்குகிறது.

சுய உதவிக் குழு, காது குத்துதல், மொட்டையடித்தல், ஆரத்தித் தட்டு, திருமண விழா என விதவிதமான வழிகளில் தேர்தலில் பணம் விநியோக  விவகாரம் நடந்துவருகிறது. இப்படி 40 வழிகளில் பண விநியோகம் செய்யப்படுவதைக் கண்டறிந்தோம்.
  
2009-ல் மதுரை திருமங்கலம் இடைத்தேர்தலில் நடந்த பண விநியோகம் அமெரிக்கா வரை போனது. இதுபற்றிய உளவுத் தகவல் அமெரிக்காவுக்குப் போனதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது. அரசியல் கட்சிகளிடம் இருந்து வாக்காளர்களுக்கு லஞ்சமாகப் பணம், பொருள் வழங்குவது இந்தத் தேர்தலில் இருந்துதான் ஒரு அம்சமாக மாறியது. இது ஒரு குறிப்பிட்ட மத்திய அமைச்சரின் வெற்றி ஃபார்முலா ஆனது. திருமங்கலத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் வரை அந்த அமைச்சர் வழங்கினார். இந்த ஸ்டைல்தான் பிறகு 'திருமங்கலம் ஃபார்முலா’ எனப் பெயர் பெற்றது. 

2011 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலின்போது திருமங்கலம் ஃபார்முலாவை முறியடிக்க தேர்தல் கமிஷன் புது ஃபார்முலாவைப் போட்டது. பீகாரில் கிடைத்த அனுபவத்தை வைத்து, தமிழகத்தில் பண ஆதிக்கத்தைத் தடுக்க ஆபரேஷனில் இறங்கினோம். பறக்கும் படைகள் மூலம் பண விநியோகத்தைத் தடுத்தோம். பணத்தை கொண்டுசெல்ல முடியவில்லை என்று வர்த்தக நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. தேர்தல் கமிஷனின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது நீதிமன்றம். ஆனால், தன்னார்வக் குழுக்கள் இந்தத் தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட்டதால், தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச் தடையை விலக்கியது!'' என்று தைரியமாகக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இது ஆவணமற்ற அதிசயம்தான்!
எம்.பரக்கத் அலி

கட்டுரை லிங்க்: https://www.vikatan.com/government-and-politics/politics/95110-

Comments

Popular posts from this blog

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி